சென்னை: துணை மின்நிலைய பணியாளர்கள் வேலை நேரத்தில் துணை மின்நிலைய வளாகத்தைவிட்டு வெளியே செல்ல கூடாது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மின் தொடரமைப்பு கழகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: உயர் அழுத்த துணை மின்நிலையங்களில் தொடர்ந்து மின்சார உபகரணங்களை கண்காணிப்பது, அவசர காலங்களில் விரைவாக செயல்பட்டு மின் வழித்தடங்களை சீரமைப்பது, மின்தடை நேரங்களில் உடனடியாக செயல்பட்டு மின்விநியோகம் வழங்குவது ஆகிய பணிகளை துணை மின்நிலைய பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். இவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் நிலையில், சில நேரங்களில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பணியாளர்கள் இருப்பதாகவும், ஒரு சிலர் கூடுதலாக பணியை நீட்டித்து வேலை செய்வதாகவும், பணி நேரத்தின்போது வெளியே சென்று வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இது மின் பகிர்மானத்தின் செயல்திறனை குறைப்பதோடு, பணியாளர் நலனையும் பாதிக்கிறது. பணியாளர் அட்டவணை: இதை தடுக்க, பின்வரும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். துணை மின்நிலைய பணியாளர்கள் அட்டவணையை…
Author: admin
விடுமுறையைத் திட்டமிடுவது உற்சாகமானது, ஆனால் பெரும்பாலும் குழப்பமானது. இந்திய பயணிகளில் 40% க்கும் அதிகமானோர் உடைகள், சார்ஜர்கள் மற்றும் பாஸ்போர்ட் அல்லது செல்லப்பிராணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை மறந்துவிடுகிறார்கள் என்று சமீபத்திய பயண அறிக்கை வெளிப்படுத்துகிறது. ஆயினும்கூட, இந்த அடிக்கடி ஸ்லிப்-அப்கள் இருந்தபோதிலும், அவை ஒருபோதும் விட்டுவிடாது. கழிப்பறை கருவிகள் முதல் தேநீர் பைகள் வரை, இந்த பழக்கமான பொருட்கள் நகரும் போது ஆறுதல், வழக்கமான மற்றும் வீட்டின் உணர்வை வழங்குகின்றன. கண்டுபிடிப்புகள் பொதுவான பயண தவறுகளை முன்னிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்தியர்கள் தங்கள் பயணங்களை எவ்வாறு தயார்படுத்துகிறார்கள் மற்றும் அனுபவிக்கின்றன என்பதை வடிவமைக்கும் உணர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன.விடுமுறையில் மிகவும் பொதுவாக மறக்கப்பட்ட பொருட்கள்42% இந்திய பயணிகள் சாக்ஸ், சட்டைகள் அல்லது டாப்ஸ் போன்ற ஆடை பொருட்களை பொதி செய்யவோ அல்லது மீண்டும் கொண்டு வரவோ மறந்துவிட்டதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்த அன்றாட அத்தியாவசியங்கள் பொதுவாக தவறாக இடம்பிடித்த பொருட்களின்…
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட மதன்பாப் உடல்நலக் குறைவால் காலமானார். தமிழின் தனிப் பெரும் நகைச்சுவை கலைஞராக கொடிகட்டிப் பறக்கவில்லை என்றாலும் கூட, தான் நடித்த முக்கிய கதாபாத்திரங்களின் மூலமும், தன்னுடைய சிரிப்பையே அடையாளமாக்கியும் தனி முத்திரைப் பதித்தவர் மதன் பாப். குறிப்பாக வடிவேலுவுடன் ‘ஃப்ரண்ட்ஸ்’, ‘கிரி’, ‘காமராசு’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்த காட்சிகள் பிரபலமாகின. மதன் பாப் என்றாலே நினைவுக்கு வருவது அவரது தனித்துவமான சிரிப்பு. தமிழ் சினிமாவில் சிரிப்பின் மூலம் பிரபலமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் குமரிமுத்து, இன்னொருவர் மதன் பாப். கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு அதே பெயரில் ஒரு மாமா இருந்திருக்கிறார். குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இவரை இவரது வீட்டில் மதன் என்று அழைத்திருக்கிறார்கள். இவரது தம்பி பாபுவுடன் சேர்ந்து இவர் தொடங்கிய இசைக்குழுவுக்கு மதன் – பாபு என்று பெயர் வைக்கப்பட்டதால் அதுவே இவரது பெயராக நிலைத்து விட்டது.…
சென்னை: தமிழகத்தில் சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் வழித்தடம் உட்பட 3 வழித்தடங்களில் அதிவேக ரயில் போக்குவரத்துக்காக (பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புக்காக) சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. மத்திய அரசின் பங்களிப்போடு, செமி ஹை ஸ்பீடு ரயில் திட்டம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஒரே நேரத்தில் 3 சாத்தியக்கூறு ஆய்வுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் வரை 170 கி.மீ. தொலைவுக்கும்; சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் வரை 140 கி.மீ. தொலைவுக்கும்; கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் வரை 185 கி.மீ தொலைவுக்கும் வழித்தடங்கள் உருவாக்க, சாத்தியக்கூறு அறிக்கை…
உங்கள் வயதைப் போலவே ஒரு சில கிரீக்ஸ் மற்றும் கூக்குரல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன, ஆனால் நீங்கள் கடினமாக, புண் அல்லது வீக்கமடைந்துவிட்டால், உங்கள் மூட்டுகள் உங்கள் மற்றவர்களை விட வேகமாக வயதாக இருக்கலாம்.அது ஏன் நடக்கிறது: வீக்கம் வயதுக்கு ஒரு முக்கிய இயக்கி -குறிப்பாக மூட்டுகளில். உங்கள் உடல் தொடர்ந்து மோசமான உணவு, உட்கார்ந்த பழக்கவழக்கங்கள் அல்லது மறைக்கப்பட்ட உணவு சகிப்புத்தன்மையிலிருந்து வீக்கமடைந்தால், உங்கள் மூட்டுகள் அதை உணரும்.என்ன செய்வது:உங்கள் உணவில் அழற்சி எதிர்ப்பு உணவுகளை (மஞ்சள், பெர்ரி மற்றும் இலை கீரைகள் போன்றவை) சேர்க்கவும்.நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது யோகா போன்ற குறைந்த தாக்க இயக்கத்துடன் செயலில் இருங்கள்.சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வெட்டுங்கள் – அவை அழற்சி குண்டுகள்.
திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ரைரு கோபால். மருத்துவரான அவர் அங்குள்ள எல்ஐசி அலுவலகத்துக்கு அருகே மருத்துவமனை நடத்தி வந்தார். அவரது தந்தை ஏ.ஜி.நம்பியாரும் புகழ்பெற்ற மருத்துவர் ஆவார். “பணம் சம்பாதிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் மருத்துவத்தை ஒருபோதும் பணம் சம்பாதிக்கும் தொழிலாக பார்க்கக்கூடாது’’ என்று தந்தை கூறிய அறிவுரைகளை ரைரு கோபால் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். கண்ணூர் எல்ஐசி அலுவலகம் அருகே நடத்தி வந்த மருத்துவமனையை தனது வீட்டுக்கு கோபால் மாற்றினார். அனைத்து நோயாளிகளிடமும் 2 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று சிகிச்சை அளித்தார். இதன் காரணமாக அப்பகுதி மக்கள், ரைரு கோபாலை, இரண்டு ரூபாய் மருத்துவர் என்று அழைத்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரைரு கோபால், ஏழை மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவரது மனைவி சகுந்தலா கணவருக்கு உறுதுணையாக இருந்து நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2024-ம்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘கூலி’. இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் என பலர் நடித்துள்ளர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: இந்தப் படம் தொடங்கியதும், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, தூள் கிளப்பிடலாம் என்று சொன்னார். நான், ‘இது 1950 மாடல். பல லட்சம் கிலோமீட்டர் ஓடியிருக்கு. பார்ட்ஸ் எல்லாம் மாத்தியிருக்காங்க. ரொம்ப ஆடவச்சிராதீங்க, பார்ட்ஸ் கழன்றிடும்’னு சொன்னேன். பார்த்துக்கலாம்னு சொல்லி என்னை ஆடவச்சார். இசை அமைப்பாளர் அனிருத் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது கம்மிதான். புகழின் உச்சியில இருக்கிற ஒருவர், இந்த வயசுலயே அமைதியை தேடி, அல்லது தன்னைத் தேடி இமயமலை போறார்னா அவர் எப்பேர்பட்ட ஆளுன்னு தெரிஞ்சுக்கலாம். இயக்குநர் லோகேஷ் கனகராஜோட முதல் படம் ‘மாநகரம்’ நல்லா இருந்துச்சு.…
சென்னை: சாதிய கொலைகளுக்கு எதிராக சட்டமியற்ற வலியுறுத்தி வரும் 9-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அண்மையில் ஆந்திர பிரதேசம் மதனபள்ளியில் விசிக மாநில பொதுச்செயலாளர் சிவபிரசாத் பராமரித்து வரும் புத்தர்சிலை உடைக்கப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உண்ணாவிரதம் இருந்த சிவபிரசாத் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஜகவுடன் தெலுங்கு தேசம் கைகோர்த்த பிறகு, காவல், வருவாய்த் துறை அதிகாரிகள் சங்பரிவார்களின் தொண்டர்களாக மாறிவிட்டார்கள். இதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. ஆந்திர பிரதேசத்தை மெல்ல மெல்ல சங்கிகளின் பிரதேசமாக மாற்றி வருகிறார்கள். சிவபிரசாத் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விஜயவாடாவில் ஆக. 23-ம் தேதி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பிஹாரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழகத்திலும் அமல்படுத்த…
வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் பெரும்பாலும் ஒப்பனை சிக்கலாகக் காணப்படுகின்றன, ஆனால் அவை ஆழமான உடல்நலக் கவலைகளை சமிக்ஞை செய்யலாம். பல சந்தர்ப்பங்களில், அவை பலவீனமான அல்லது தவறான நரம்பு வால்வுகளால் ஏற்படும் கால்களில் மோசமான சிரை சுழற்சியைக் குறிக்கின்றன. இந்த வால்வுகள் தோல்வியடையும் போது, இரத்தக் குளங்கள் இதயத்திற்கு திறமையாகப் பாய்ச்சுவதற்குப் பதிலாக, நரம்புகளை விரிவுபடுத்தி திருப்பும் அழுத்தத்தை உருவாக்குகின்றன. நாள்பட்ட சிரை பற்றாக்குறை என அழைக்கப்படும் இந்த நிலை அச om கரியம், வீக்கம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும், மேலும் இரத்த உறைவு, தோல் மாற்றங்கள் அல்லது புண்கள் போன்ற கடுமையான சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஆரம்பத்தில் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை உரையாற்றுவது தோற்றத்தையும் நீண்டகால வாஸ்குலர் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் என்றால் என்ன, அவை உங்கள் இரத்த ஓட்டத்தை எவ்வாறு பாதிக்கின்றனவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் மேலோட்டமான நரம்புகள், அவை பலவீனமான…
புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் இணை நிறுவனருமான ஷிபு சோரன், டெல்லி மருத்துவமனையில் இன்று (ஆக.4) காலமானார். அவருக்கு வயது 81. இதுகுறித்து ஷிபு சோரனின் மகனும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமன் சோரன் வெளியிட்ட பதிவில், “மதிப்பிற்குரிய குரு நம் அனைவரையும் விட்டுச் சென்றுவிட்டார். இன்று, எனக்கு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது.” என்று தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், 38 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தலைவராக இருப்பவருமான ஷிபு சோரன், 3 முறை ஜார்க்கண்ட் மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகன் ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்ட் முதல்வராக உள்ளார். ஜார்க்கண்ட் பழங்குடி அரசியலின் முகமாக அறியப்படும் ஷிபு சோரன், சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். 81 வயதாகும் அவருக்கு உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து, ஜூன்…
