புதுடெல்லி: இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலரப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தியை கடுமையாக கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், உண்மையான இந்தியராக இருந்தால் நீங்கள் இப்படி சொல்ல மாட்டீர்கள் என தெரிவித்துள்ளது. ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ மேற்கொண்ட ராகுல் காந்தி, கடந்த 2022, டிசம்பர் 16 அன்று பேசும்போது, லடாக் எல்லையில் இந்தியாவின் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறி இருந்தார். இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவத்சவா லக்னோவில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கை எதிர்த்து லக்னோ உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடியான நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ்…
Author: admin
திருநெல்வேலி: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை அதிமுக நடத்தியது. இப்போது திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் விவசாய பிரதிநிதிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் உடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: இயற்கை விவசாயத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் பொருட்களைக் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராக உள்ளனர். இந்த விவசாயத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதிமுக அரசு அமைந்ததும் இயற்கை விவசாயத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். முந்தைய அதிமுக ஆட்சியின் போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏராளமான நீர் நிலைகளைத் தூர்வாரினோம். இதற்காக ஒரு 1500 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும் கால்வாய்களில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டன. ஆறுகளில் தடுப்பணைகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த…
107 வயதில், ஃப்ரீஹோல்டில் இருந்து மில்ட்ரெட் பரோன், நியூ ஜெர்சி மெதுவாகச் செல்வதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஒவ்வொரு நாளும் நன்றியுடனும் ஆற்றலுடனும் கொண்டாடுகிறார், குடும்பம், நண்பர்கள் மற்றும் நெருக்கமான சமூகத்தால் சூழப்பட்டுள்ளது. தனது மைல்கல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அவர் தனது வாழ்க்கையை வழிநடத்திய தத்துவத்தை வெளிப்படுத்தினார்: “மிகவும் அமைதியாக இருங்கள், அமைதியாக இருங்கள், என் வார்த்தையை ஏற்றுக்கொண்டேன்-‘இதுவும் கடந்து போகும்.’” இந்த எளிய மற்றும் ஆழ்ந்த மந்திரம் வரலாற்றின் சில சவாலான காலங்களில், தடை மற்றும் உலகப் போர் மற்றும் கோவிட் -19 குடிகிறனுக்கு கூட பெரும் மத்தியில் இருந்து செல்ல உதவியது. மில்ட்ரெட்டின் கதை நீண்ட ஆயுளைப் பற்றியது மட்டுமல்ல; இது பின்னடைவு, நேர்மறை மற்றும் வாழ்க்கையை மகிழ்ச்சியான இதயத்துடன் ஏற்றுக்கொள்வது பற்றியது.107 வயதான மில்ட்ரெட் பரோனின் எழுச்சியூட்டும் பயணம் பிரெட்லைன்ஸ் முதல் தொழில் வெற்றி வரை1918 இல் புரூக்ளினில் பிறந்த மில்ட்ரெட்டின் குழந்தைப்…
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால் மக்களவை இன்று காலை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை அரசு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முன்னேற வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 11-வது நாளான இன்று மக்களவை காலை 11 மணிக்குக் கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். சபாநாயகர் ஓம் பிர்லா இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவையில் அமளி நீடித்ததை அடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, “இது (Bihar SIR) மிகவும் தீவிரமான பிரச்சினை. இது வாக்காளர்…
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்-கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும், வழக்கை சிபிஐ- க்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், வழக்கில் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனவும்…
லைம் நோய் என்பது ஒரு டிக் பரவும் நோயாகும், இது சிகிச்சையளிப்பது கடினம், குறிப்பாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்குப் பிறகு அறிகுறிகள் நீடிக்கும் போது. பல நபர்கள் பார்டோனெல்லா மற்றும் பாபேசியா போன்ற இணை நோய்த்தொற்றுகளையும் எதிர்கொள்கின்றனர், இது மீட்பை சிக்கலாக்குகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அவசியம் என்றாலும், சில மருத்துவ மூலிகைகள் குணப்படுத்துவதை ஆதரிக்கும் திறனுக்கான அங்கீகாரத்தைப் பெறுகின்றன. இந்த மூலிகைகள் வீக்கத்தைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு மறுமொழியை மேம்படுத்தவும், தொடர்ச்சியான நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும். பாரம்பரிய பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் ஆய்வக ஆய்வுகள் ஆகியவற்றின் ஆதரவுடன், அவை லைம் நெறிமுறைகளில் நிரப்பு கருவிகளாக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வழிகாட்டி ஆறு சக்திவாய்ந்த மூலிகைகளை ஆராய்கிறது, இது மருத்துவ பராமரிப்புடன் மற்றும் தொழில்முறை மேற்பார்வையின் கீழ் பயன்படுத்தும்போது மீட்க உதவும். உங்கள் சுகாதார வழங்குநரை எப்போதும் அணுகவும்.லைம் மீட்புக்கான 6 மூலிகைகள்: அறிகுறிகளுக்கான இயற்கை ஆதரவு மற்றும் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்குஜப்பானிய முடிச்சு…
கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகளால், பெற்றோர் மற்றும் குழந்தைகள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலையை சேர்ந்த பெற்றோர் கூறியதாவது: மகளை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில், 1-ம் வகுப்பில் சேர்த்தேன். சொற்ப வருவாயில் குடும்பம் நடத்துவது சிரமம் என்ற நிலையில் நாங்கள் உள்ளோம். இந்நிலையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் இருந்து பணம் வரவில்லை என்றும், மொத்த தொகையையும் கட்ட வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் வற்புறுத்துகிறது. 1-ம் வகுப்புக்கு பள்ளிக் கட்டணம் ரூ. 40 ஆயிரம் என தெரிவிக்கின்றனர். தற்போது கிடைக்கும் வருவாயில் வீட்டு வாடகை, குடும்ப செலவு போக மீதம் எதுவுமே மிஞ்சுவதில்லை. தற்போது பணம் கட்டச்சொல்லி நெருக்கடி தருவதால் எங்களுக்கு என்ன செய்வதன்றே தெரியவில்லை. தனியார் பள்ளியில் இருந்து மாறினாலும், முழுத்தொகையையும் செலுத்த வேண்டியிருக்கும். இந்த இக்கட்டான…
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலை 14 நாடுகளைச் சேர்ந்த அயலக தமிழர்கள் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பிரான்ஸ் ஜெர்மன், மலேசியா, கன்னடா, மியான்மர், இலங்கை, ஃபிஜி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 அயலக தமிழர்கள் இன்று (ஆக.4) காலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பேருந்து மூன்றில் சிதம்பரம் வந்தனர். பின்னர் அவர்கள் நடராஜர் கோயிலுக்குச் சென்றனர். அங்கே, கோயில் கட்டிடக் கலைகள், சிற்பங்களைப் பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். தொடர்ந்து உலகுக்கு தேவாரம் திருவாசகம் கிடைக்கப்பெற்ற இடத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசனம் செய்தனர். அங்கிருந்த தங்கத்தால் ஆன கோபுரம் குறித்த தகவல்களைக் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னதி, முக்குருணிவிநாயகர் கோயில் ஆகிய இடங்களில் சாமி தரிசனம்…
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் சூர்யா. இதில் த்ரிஷா, சுவாசிகா, ஷிவதா, யோகிபாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார் . இதில் ‘விடுதலை’ படத்தில் சூரி ஜோடியாக நடித்த பவானிஸ்ரீ முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் என்கிறார்கள்.
சென்னை: வேறு கட்சியில் சேரப்போவதாக தகவல் பரவிய நிலையில், “உடல் மண்ணுக்கு, உயிர் என் உயிர் அதிமுகவுக்கு” என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் ஒரு கட்சியில் சேரப்போவதாக யூடியூப் சேனல்களில் செய்திகள் வருகின்றன. நான் மானஸ்தன் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும். யார் வீட்டு முன்னாடியும் பதவிக்காக நான் நின்றதில்லை. திராவிட பாரம்பரியத்தில் பெரியார், அண்ணா வழியில், அவருக்கு பின்னர் எம்ஜிஆர் வழியில் வந்தவன் நான். என் உடல் மண்ணுக்கு, உயிர் அதிமுகவுக்கு. இதுதான் எனது கொள்கை, நிலைப்பாடு. ‘ஒன்றிணைவோம் வா’ என்று சொல்லி பல மாவட்டங்களில் திமுக கூட்டம் நடக்கும்போது, உட்கட்சி பூசல்கள் வெடிக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்,…
