Author: admin

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதில் இழுபறியாக அமைந்த அம்சங்களில் ஒன்றுதான் ‘அசைவ பால்’ சர்ச்சை. இது குறித்து இன்னும் தெளிவாகப் பார்ப்போம். உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்​ரலில் வெளி​யிட்​டார். அது ஏற்படுத்திய அதிர்வலைகளைத் தொடர்ந்து வரி விகிதத்தை குறைப்பது தொடர்​பாக பல்​வேறு நாடுகளும், அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்​தையை தொடங்கின. இந்தியாவும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வரும் 7-ம் தேதி முதல் இந்​திய பொருட்​களுக்கு 25 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், வேளாண் துறை சார்ந்த விவ​காரங்​களில் அமெரிக்​கா​வின் கோரிக்​கைகளை ஏற்க இந்​தியா திட்​ட​வட்​ட​மாக மறுப்பதால், இரு நாடு​கள் இடையேயான வர்த்​தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் தொடர்ந்து கால​தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய பிரச்சினை ‘அசைவ பால்’. அதென்ன அசைவ பால்! என்று கேட்கிறார்களா? இதோ…

Read More

விருதுநகர்: எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் பாஜக வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அருப்புக்கோட்டையில் பாரதி மகாலிலும், விருதுநகரில் எஸ்.எஸ்.கே. கிராண்ட் மகாலிலும் நடைபெற்ற கூட்டங்களுக்கு கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில இணை பொறுப்பாளருமான சுதாகர் ரெட்டி முன்னிலை வகித்தார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில், பாஜக நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “2026 சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும், அதற்காக வாக்குச் சாவடி வாரியாக பொறுப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு நலத்திட்டப் பணிகளை வாக்காளர்களிடம் நேரடியாகச் சென்று தெரிவித்து விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் அவர் அளித்த…

Read More

பிரபலமான நேரக்கட்டுப்பாடுகளைக் கண்காணிக்கும் பிரபலமான இன்ஸ்டாகிராம் பக்கமான வாட்ச்ஸ்பாட்டர். பெரும்பாலான மக்கள் அந்த எண்ணிக்கையில் பறக்கக்கூடும் என்றாலும், ரோஹித்தின் தேர்வு, தொழில்முறை விளையாட்டுகளுடன் ஆடம்பர பேஷனை கலக்கும் விளையாட்டு வீரர்களின் வளர்ந்து வரும் லீக்கில் தனது இடத்தை மட்டுமே உறுதிப்படுத்துகிறது. அதே விலையை மற்றொரு இன்ஸ்டாகிராம் பக்கமும் மேற்கோள் காட்டியது, இது எம்.எம். ஆட்மார்ஸ் வலைத்தளத்தின்படி, இந்த கடிகாரமானது நிச்சயமாக 1 கோடி ரூபாயைப் பற்றி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு கண்காணிப்பாக இருப்பதால் விலை உயர்வைக் கண்டிருக்கலாம்.

Read More

ராம்சரண் படத்தினை இயக்காதது ஏன் என்று ‘கிங்டம்’ இயக்குநர் கெளதம் தெரிவித்துள்ளார். கெளதம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கிங்டம்’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், வசூலில் ரூ.70 கோடியை நெருங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ஜெர்சி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் படத்தினை இயக்குவதாக இருக்கிறார் கெளதம். ஆனால், அப்படம் கைவிடப்பட்டது. பின்பு விஜய் தேவரகொண்டா நடிக்க ‘கிங்டம்’ படத்தினை இயக்கியுள்ளார். தற்போது ராம்சரண் படம் நடைபெறாதது ஏன் என்று கெளதம் அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். அதில் கெளதம், “ராம்சரணிடம் கதையொன்றை கூறினேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதையினை முழுமையான திரைக்கதையாக எழுதினேன். அதன் பின் அது ராம்சரணுக்கு பொருத்தமாக இருக்காது என்பதை உணர்ந்தேன். ராம்சரண் போன்ற ஒரு நட்சத்திரத்தை இயக்குவது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. ஆகையால் ஏதோ ஒரு படத்தினை அவரை வைத்து இயக்க விரும்பவில்லை.…

Read More

மதுரை: டிஜிபி நியமனத்தில் முறைகேடு, விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். ராமநாதபுரம் ராஜ வீதியைச் சேர்ந்த யாசர் அராபத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ல் ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி பதவிக்கான தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. தற்போதைய டிஜிபிக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவும், அவரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்வது டிஜிபி நியமனம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. தமிழகத்தில் 2026-ல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசு உயர் பதவிகளில் தங்களுக்கு சாதகமானவர்களை வைத்துக்கொள்ள தமிழக அரசு விரும்புகிறது. தமிழகத்தில் ஆணவக் கொலை, கொலை, கொள்ளை போன்ற அச்சமூட்டும் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், சட்டம்- ஒழுங்கை…

Read More

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வலுவான இதயத்திற்கும் நல்ல இரத்த ஓட்டத்தை பராமரிப்பது அவசியம். மோசமான சுழற்சி சோர்வு, குளிர்ந்த கைகள் மற்றும் கால்கள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும், மேலும் கடுமையான இருதய பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும். பண்டைய இந்திய முழுமையான அமைப்பான ஆயுர்வேதம், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கும் இயற்கையான தீர்வுகளை வழங்குகிறது. இந்த ஆயுர்வேத பானங்கள் வீக்கத்தைக் குறைக்கவும், வாஸ்குலர் செயல்பாட்டை மேம்படுத்தவும், மென்மையான சுழற்சியை ஊக்குவிக்க உடலின் தோஷங்களை சமப்படுத்தவும் உதவுகின்றன. திறமையான இரத்த ஓட்டம் ஆக்ஸிஜனை உறுதி செய்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலின் அனைத்து பகுதிகளையும் அடைகின்றன, ஆற்றல், மூளை செயல்பாடு மற்றும் குணப்படுத்துதல். இந்த இயற்கை வைத்தியங்களை இணைப்பது இதய நோய் மற்றும் தொடர்புடைய சிக்கல்களைத் தடுக்க உதவும்.இந்த ஆயுர்வேத பானங்களுடன் இரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது1. மஞ்சள் மற்றும் இஞ்சி தேநீர்மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவை அழற்சி எதிர்ப்பு…

Read More

புதுடெல்லி: டெல்லி தமிழ்நாடு இல்லம் அருகே இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மயிலாடுதுறை எம்.பி சுதாவிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருவதால், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பியான ஆர்.சுதா டெல்லி சாணக்யபுரியின் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, போலந்து தூதரகம் அருகே நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் சுதா காயமடைந்தார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சுதா எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், “இன்று காலை 6:15 மணியளவில் போலந்து தூதரகம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டபோது, ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டியில் வந்த ஒருவர் எனது தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். சங்கிலியை இழுத்தபோது என் கழுத்தில் காயம் ஏற்பட்டது. எனது சுடிதாரும் தாக்குதலின்போது கிழிந்தது. சாணக்யபுரி போன்ற உயர் பாதுகாப்பு மண்டலத்தில், மக்களவை உறுப்பினராக இருக்கும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட இந்த…

Read More

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கண்ணாலப்பட்டி, பெருமாள் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது மகன் ஸ்ரீராம் (18). மாற்றுத்திறனாளியான இவர் பெரிய கண்ணாலப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023- 2024-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வில் இந்த ஆண்டு பங்கேற்ற மாணவர் ஸ்ரீராம் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து, மருத்துவ கலந்தாய்வில் மாணவருக்குக் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர் ஸ்ரீராம் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சிறுவயதாக இருக்கும்போதே உயிரிழந்து விட்டார். ஸ்ரீராம் 4-ம் வகுப்பு படிக்கும்போது வலது காலில் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு, அவரது வலது காலில் இரும்பு ராட் வைக்கப்பட்டது. இதனால் அவரது தாயார் தனது மகனைக் கூலி வேலை பார்த்து அங்கு உள்ள அரசுப் பள்ளியில் படிக்க வைத்தார். தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம்…

Read More

மதுரை: நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை நேரடியாக கண்காணிக்க வேணடும் என உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் சரவணன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே கவின் உடலை அவரது பெற்றோர் தகனம் செய்தனர். இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில்,…

Read More

பாலிசிஸ்டிக் கருப்பை நோய் (பி.சி.ஓ.டி), பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி (பி.சி.ஓ.எஸ்) என்றும் அழைக்கப்படுகிறது, இது உலகளவில் மில்லியன் கணக்கான பெண்களை பாதிக்கிறது. இது பெரும்பாலும் ஒழுங்கற்ற காலங்கள், எடை அதிகரிப்பு, முகப்பரு மற்றும் கருவுறாமை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. பி.சி.ஓ.டி -ல் ஒரு முக்கிய காரணி இன்சுலின் எதிர்ப்பாகும், இது ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது மற்றும் எடை நிர்வாகத்தை சவாலாக ஆக்குகிறது. பி.சி.ஓ.டி.யை நிர்வகிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஆரோக்கியமான, சீரான உணவு மூலம். குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகள், அழற்சி எதிர்ப்பு பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த முழு உணவுகளைத் தேர்ந்தெடுப்பது ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், எடை இழப்பை ஆதரிக்கவும், ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.டி.சி.ஓ.டி மற்றும் இன்சுலின் எதிர்ப்பை உணவு எவ்வாறு பாதிக்கிறதுபி.சி.ஓ.டி உள்ள பெண்கள் பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்பு அல்லது மோசமான இன்சுலின்…

Read More