அமெரிக்க அரசாங்க நிதியத்தின் முட்டுக்கட்டை காரணமாக நாசா அதன் பெரும்பாலான நடவடிக்கைகளை தற்காலிகமாக அளவிட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு பட்ஜெட் அல்லது குறுகிய கால நிதி நடவடிக்கைகளை நிறைவேற்றத் தவறும் போது, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு முக்கியமான நடவடிக்கைகளுக்கு வேலையை மட்டுப்படுத்த ஏஜென்சி கட்டாயப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, ஆராய்ச்சி மற்றும் பொது மேம்பாடு முதல் வரவிருக்கும் பணிகளுக்கான தயாரிப்பு வரை நடந்த பல திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) கப்பலில் விண்வெளி வீரர்களைக் கண்காணித்தல் மற்றும் சூரிய குடும்பம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள விண்கலத்தைப் பாதுகாத்தல் போன்ற அத்தியாவசிய பணிகள் ஒரு எலும்புக்கூடு குழுவினரின் கீழ் தொடர்கின்றன, ஆனால் பணி திட்டமிடல் மற்றும் அறிவியல் ஆய்வுகளில் தாமதங்கள் தவிர்க்க முடியாதவை.ஏன் நாசா பணிநிறுத்தம் அரசாங்க நிதி குறைபாடுகளின் போதுகாங்கிரஸால் கையகப்படுத்தப்படாத பணத்தை நாசா செலவழிப்பதை கூட்டாட்சி சட்டம் தடை செய்கிறது. நிதி குறைபாடுகளின் போது, குழு பாதுகாப்பு, விண்கலம்…
Author: admin
புதுடெல்லி: அசாம் பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக, அவருடன் படகில் சென்ற 2 இசைக் கலைஞர்களை கைது செய்து அசாம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு படகில் சென்றுள்ளார். கடலில் நீந்தும் போது அவர் நீரில் மூழ்கி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஜுபின் கார்க் மேலாளர் சித்தார்த்த சர்மா, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சியாம்கானு மகந்தா ஆகியோர் டெல்லியில் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை குற்றச்சாட்டுகளையும் அசாம் சிஐடி போலீஸார் சேர்த்துள்ளனர். இந்நிலையில் ஜுபின் கார்க்குடன், கடலுக்கு படகில் சென்ற இரண்டு இசை கலைஞர்கள் சேகர்ஜோதி கோசுவாமி, அம்ரித்பிரவா மகந்தா ஆகியோரை அசாம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணைக்காக குவஹாட்டி அழைத்து வந்தனர். அவர்கள் 14…
அருள்நிதி நடித்து வந்த ‘ராம்போ’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. முத்தையா இயக்கத்தில் அருள்நிதி புதிய படமொன்றில் நடித்து வந்தார். இந்தப் படம் முழுக்க சென்னையிலேயே படமாக்கி முடிக்கப்பட்டது. தற்போது இப்படத்துக்கு ‘ராம்போ’ எனப் பெயரிடப்பட்டு இருப்பதாகவும், இப்படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. குறைந்த முதலீட்டில் ஒரே கட்டமாக இப்படம் படமாக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தினை நேரடியாக ஓடிடி வெளியீடாக முடிவு செய்திருக்கிறார்கள். அக்டோபர் 10-ம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தான்யா ரவிச்சந்திரன், விடிவி கணேஷ், அபிராமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் அருள்நிதியுடன் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா இன்று (அக்.4) காலை ஆய்வு மேற்கொண்டார். கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 உயிர்கள் பறிபோனது. இந்தச் சம்பவம் இந்த ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற கூட்ட நெரிசல் நிகழ்வுகளிலேயே அதிக உயிர்ப்பலி ஏற்படுத்திய நிகழ்வாக உள்ளது. மேலும், இந்திய அரசியல் வரலாற்றில், அரசியல் கட்சி பிரச்சாரத்தில் இப்படியொரு கூட்ட நெரிசல் சம்பவமே நிகழ்ந்ததில்லை என்றளவில் மோசமான சம்பவமாகவும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், கரூரில் சம்பவம் நடந்தன்று இரவே முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர், தமிழக காங்கிரஸ், இடதுசாரி தலைவர்கள், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் 8 பேர் அடங்கிய குழு என பலதரப்பினரும்…
சிவகாசி: சிவகாசியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உற்பத்தி அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், ஆய்வு மற்றும் விபத்து அச்சம் காரணமாக முன்கூட்டியே பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 30 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் 20 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,080-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதம் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், பிஜிலி, சக்கரம், புஸ்வானம், லட்சுமி, குருவி, மத்தாப்பு, ஆட்டம் பாம், உயரே சென்று வெடிக்கும் பேன்ஸி ஷாட் என 60 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. தொடக்கம் முதலே சரிவு: சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 10 சதவீதம் தமிழகத்திலும், 90 சதவீதம் வட மாநிலங்களிலும் விற்பனை…
நீண்ட நாள் கழித்து, தோல் பராமரிப்பு வழக்கத்தைத் தவிர்த்து, ஒப்பனையுடன் தூங்குவது தூண்டுகிறது. இருப்பினும், இந்த பழக்கம் உங்கள் சருமத்தில் தீங்கு விளைவிக்கும். ஜர்னல் ஆஃப் ஒப்பனை தோல் மருத்துவத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், உடற்பயிற்சிகளின் போது ஒப்பனை அணிவது சருமத்தை சேதப்படுத்தும் என்பதை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக அடித்தளம், இது எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் துளைகளைத் தடுக்கும், இது முகப்பரு பிரேக்அவுட்களுக்கு வழிவகுக்கும். உடற்பயிற்சி செய்யும் போது ஒப்பனை அணிவதற்கு எதிராக தோல் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள், ஏனெனில் இது தோலின் சுவாசம் மற்றும் நச்சுகளை சுரக்கும் திறனை பாதிக்கிறது. ஒப்பனை இல்லாதவர்களுக்கு செல்ல தயங்குபவர்களுக்கு, பரு திட்டுகள் பாதுகாப்பான மாற்றாக பரிந்துரைக்கப்படுகின்றன. ஒப்பனை அணிய வேண்டும் என்றால், முழு கவரேஜ் அடித்தளங்களில் அல்லாத மாய்ஸ்சரைசர்கள் அல்லது பிபி கிரீம்கள் போன்ற இலகுரக சூத்திரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.ஒப்பனை அகற்றுவதற்கும் தோல் பிரச்சினைகளைத் தடுப்பதற்கும் உடற்பயிற்சிகளுக்கும் முன்பு சருமத்தை முழுமையாக சுத்தப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு…
பூமிக்கு அப்பால், சனியின் சிறிய நிலவு என்செலாடஸ் நமது சூரிய மண்டலத்தில் மிகவும் புதிரான உலகங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அரிசோனாவின் அளவு மட்டுமே என்றாலும், என்கெலாடஸ் பிரகாசமான வெள்ளை பனியின் அடர்த்தியான அடுக்கில் பூசப்பட்டுள்ளது. இந்த உறைந்த ஷெல்லின் அடியில் அசாதாரணமான ஒன்று உள்ளது, முழு சந்திரனிலும் நீடிக்கும் திரவ நீரின் பரந்த கடல். இந்த கடல் முற்றிலும் மறைக்கப்படாது. அதன் தென் துருவத்திற்கு அருகிலுள்ள விரிசல் மூலம், என்செலாடஸ் நீர் நீராவி மற்றும் பனியின் உயர்ந்த பிளேம்களை வெளியிடுகிறது. இந்த கீசர்கள் விண்வெளியில் வெடிக்கின்றன, விஞ்ஞானிகளுக்கு நேரடி மாதிரிகள் படிக்கின்றன. நீர் நமக்குத் தெரிந்தபடி நீர் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருப்பதால், சனி சனியைச் சுற்றும் ஒரு சுறுசுறுப்பான, நீர் நிறைந்த உலகத்தைக் கண்டுபிடிப்பது, வேற்று கிரக வாழ்க்கையைத் தேடுவதற்கான மிகவும் நம்பிக்கைக்குரிய இடங்களில் ஒன்றாக என்செலாடஸை உருவாக்குகிறது.சனியின் மூன் என்செலாடஸில் உள்ள கரிம மூலக்கூறுகள் வாழ்க்கையின் வேதியியல் கட்டுமான…
மீரட்: உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ரயா பசர்க் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மசூதி மற்றும் 30 ஆயிரம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் ரயா பசர்க் கிராமத்தில் வருவாய்த் துறையினர் நில அளவை நடத்தினர். அப்போது குளம் இருந்த இடத்தை ஆக்கிரமித்து மசூதி மற்றும் திருமண மண்டபம் கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மசூதி நிர்வாகம் மற்றும் திருமண மண்டப நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுகுறித்து சம்பல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிஸ்னோய் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஆக்கிரமிப்பை அகற்ற 30 நாட்கள் அவகாசம் வழங்கி சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும், சம்பந்தப்பட்டவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, மசூதி மற்றும் திருமண மண்டபத்தை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்’’ என்றார். இந்நிலையில், கிராம மக்கள் கூறுகையில், ‘‘நன்கொடைகள் வசூலித்துதான் திருமண மண்டபத்தை…
உத்தராகண்ட்: உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக உள்ள ஆதவ் அர்ஜுனா உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் தேசிய சப் ஜூனியர் கூடைப்பந்து விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான இன்று காலை அங்கு வந்தார். ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில அவரிடம் ஏஎன்ஐ செய்தியாளர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுகளை சுட்டிக்காட்டி, “இனி தவெக பிரச்சாரப் பயணம் தொடரும் என நினைக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆதவ் அர்ஜுனா, “நாங்கள் பிரச்சினையை நீதி ரீதியாக அணுகுகிறோம். உண்மையும், நீதியும் நிச்சயம் ஒருநாள் வெளிவரும்.” என்று மட்டும் கூறிச் சென்றார். சம்பவமும், கோர்ட் கண்டனமும்: கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில்…
சென்னை: சென்னையில் இன்று (அக்.4) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்கள் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தங்கம் விலை சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.87,600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு…
