Author: admin

மக்களுக்கு மிகவும் தொடுகின்ற நம்பிக்கைகளில் ஒன்று என்னவென்றால், ராத்காவில் கிருஷ்ணரைப் பார்க்க ராதா ராணி சென்றபோது, ​​அவர்கள் ஒருவருக்கொருவர் நிறுவனத்தில் பல மாத மகிழ்ச்சியைக் கழித்தனர். ஆனால், அவர் மீதான ஆன்மீக மற்றும் தெய்வீக அன்பு மிகவும் ஆழமானது என்பதை அவள் உணர்ந்தபோது, ​​அவள் காட்டுக்குள் பின்வாங்க முடிவு செய்தாள், அவனுடன் இருப்பதற்குப் பதிலாக, அவனை நினைவில் வைத்துக் கொண்டாள். மேலதிக நேரம், அவள் வயதாகிவிட்டதால், ராதா தனது மரணக் கட்டிலில் இருப்பதை அறிந்த கிருஷ்ணர், கடைசியாக ஒரு முறை அவளைப் பார்க்கச் சென்று, அவளுக்காக ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார். அமைதியாக படுத்துக் கொண்ட ராதா, கிருஷ்ணரை அவளுக்காக தனது புல்லாங்குழல் விளையாடும்படி கேட்டார், அவள் கடைசியாக சுவாசிக்கும் வரை அவன் அவ்வாறு செய்தான்.

Read More

ஒரு புதிய ஆய்வில் தென்னாப்பிரிக்காவில் நிலம் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது, மேலும் காரணம் முன்பு நினைத்ததை விட ஆபத்தானது. 2012 மற்றும் 2020 க்கு இடையில், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6 மில்லிமீட்டர் அல்லது கிட்டத்தட்ட 2 மில்லிமீட்டர் முன்னேற்றத்தை பதிவு செய்தனர். புவியியல் செயல்பாடு அல்லது மேன்டில் ஓட்டம் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாக முன்னர் நம்பினாலும், சமீபத்திய கண்டுபிடிப்புகள் வறட்சி மற்றும் நீர் இழப்பு உண்மையான குற்றவாளிகளாக இருக்கலாம் என்று கூறுகின்றன. நீர் நிலைகள் குறையும் போது, ​​பூமியின் மேலோடு ஒரு மேல்நோக்கி மீளுருவாக்கம் செய்கிறது, காலநிலை மாற்றம், நீர் மேலாண்மை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையிலான ஆழமான மற்றும் சிக்கலான உறவைக் குறிக்கிறது.டெக்டோனிக் தகடுகள் இல்லை, ஆனால் நீர் மறைந்து போவது முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறதுமுன்னதாக, தென்னாப்பிரிக்காவில் உயரும் நிலம் நில அதிர்வு அல்லது எரிமலை நடவடிக்கைகள் காரணமாக இருந்தது என்று விஞ்ஞானிகள் கருதினர், குறிப்பாக குவாத்த்லம்பா…

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (பட கடன்: ஆபி) ஜனாதிபதி பிரச்சாரத்தின்போது ஜனநாயகக் கட்சி சட்டவிரோத அரசியல் நன்கொடைகளை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார், ஆனால் முரண்பாடாக, அவரது குடியரசுக் கட்சி பல ஆதாரங்களிலிருந்து நன்கொடைகளைப் பெற்றுள்ளது என்று ஆபி கூறினார்.கடந்த மாதம், ட்ரம்ப் நீதித்துறையை ஜனநாயகக் கட்சியினரின் முக்கிய ஆன்லைன் நிதி திரட்டும் தளமான ஆக்ட்ப்ளூவை விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார். சட்டவிரோத நன்கொடைகளை அனுப்ப வெளிநாட்டு நடிகர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் போலி கணக்குகளைப் பயன்படுத்தலாம் என்று அவர் எச்சரித்தார்.எவ்வாறாயினும், அநாமதேய நன்கொடையாளர்கள் மற்றும் வெளிநாட்டு மூலங்கள் உட்பட – தனது சொந்த அரசியல் குழுக்களுக்கும் டஜன் கணக்கான முறையற்ற நன்கொடைகள் கிடைத்துள்ளன என்று குறிப்பிடவில்லை.டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் பல வழிகளில் குறைபாடுடையது, மேலும் அவர் ஏபி அறிவித்தபடி, ஒருமனதாக நன்கொடைகளைப் பெற்றார். ‘ரஷ்யாவின் மோசமான நாட்கள்…’: புதிய உக்ரைன் வேலைநிறுத்தங்களுக்குப் பிறகு டிரம்ப் புடினுக்கு அசாதாரண…

Read More

புதுடெல்லி: “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மக்கள் இந்திய குடும்பத்தின் ஒரு பகுதியினர். அவர்கள் தாமாக முன்வந்து இந்தியாவின் முக்கிய நீரோட்டத்துக்த் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிஐஐ (CII) வணிக உச்சி மாநாட்டில் இன்று (மே 29) உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்திய அரசு தனது உத்தி மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலை மறுவடிவமைப்பு செய்து மறுவரையறை செய்துள்ளது. பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் நம்முடைய மக்கள். நமது குடும்பத்தின் ஒரு பகுதியினர் என்று நான் நம்புகிறேன். இன்று புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் அந்த நமது சகோதரர்கள் ஒருநாள் அவர்களின் ஆன்மாவின் குரலைக் கேட்டு இந்தியாவின் முக்கிய நீரோட்டத்துக்கு திரும்புவார்கள் என்று நாங்கள் முழு…

Read More

சென்னை: இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் புதிய சான்றிதழ் படிப்பை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஓராண்டு கால படிப்பில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கி வருகிறது. இங்கு தொழில்முனைவு தொடர்பான பல்வேறு குறுகிய கால பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.அம்பலவாணன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்த ஓராண்டு கால சான்றிதழ் பயிற்சியில் பட்டதாரிகள், டிப்ளமா முடித்தவர்கள் சேரலாம். மொத்தம் 2 செமஸ்டர்கள். தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு இது அருமையான படிப்பு. வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். மொத்தம் 50 இடங்கள் உள்ளன.…

Read More

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 11-ம் நிலை வீரரான டேனியல் மேத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 3-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனும், 5 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 2-வது இடமும் பிடித்த 11-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள கிரேட் பிரிட்டனின் கேமரூன் நோரியுடன் மோதினார். இதில் கேமரூன் நோரி 7-5, 6-3, 4-6, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் டேனியல் மேத்வதேவை தோற்கடித்தார். முன்னாள் முதல் நிலை வீரரான டேனியல் மேத்வதேவ், பிரெஞ்சு ஓபனில் முதல் சுற்றுடன் வெளியேறுவது இது 6-வது முறையாகும். 3-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் லீனர் டியனையும், 9-ம்…

Read More

வாஷிங்டன்: இந்தியா மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால், அவர்கள் தங்களின் விசாக்களை இழக்க நேரிடும் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் எந்தவித அமெரிக்க விசாவுக்கும் அனுமதி பெற முடியாமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் பள்ளியை விட்டு வெளியேறினால், வகுப்புகளை தவிர்த்தால், பள்ளிக்குத் தெரியாமல் பாடத்திட்டத்தை விட்டு வெளியேறினால் உங்களின் ஸ்டூடண்ட் விசா ரத்து செய்யப்படும். மேலும், எதிர்காலத்தில் வேறு எந்த விசாக்கள் பெறுவதற்கான தகுதிகளையும் இழக்க நேரிடும். அதனால், பிரச்சினைகளைத் தவிர்க்க எப்போதும் உங்களுக்கான விசா விதிமுறைகளை கடைபிடித்து, மாணவர் நிலையை பராமரிக்கவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசு எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், விசாக்களை ரத்து செய்வதன் மூலம் சர்வதேச மாணவர்கள் மீதான தங்களின் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன ஆதரவு போராட்டம் முதல் போக்குவரத்து விதிமீறல் என ஒவ்வொரு வழக்குகளுக்கும் காரணங்கள் வேறுபடுகின்றன. இவை மாணவர்கள்…

Read More

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஜுன் 3ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி ஜுன் 3ம் தேதி காலபூஜை முடிந்து மாலை ராவண சம்ஹாரமும், ஜுன் 4-ம் தேதி பகல் 12 மணியளவில் தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்ட ராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேக வைபவ விழாவும், ஜுன் 5-ம் தேதி காலை 8 மணியளவில் ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்வும் நடைபெறுகிறது. ஜுன் 4-ம் தேதி புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க பூஜைக்கு பின்னர் ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் மற்றும் ராமர், விபீஷணர் பட்டாபிஷேக விழாவுக்கு கோதண்ட ராமர் கோயிலுக்குச் செல்வதால் அன்று காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் கோயில் நடை அடைக்கப்படுவதுடன், கோயில் தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் சார்பில்…

Read More

சென்னை: “என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.” எனத் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜேஷ்: தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்தார். இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். ராஜேஷ் ஒரு சிறந்த டப்பிங் கலைஞரும் கூட. ‘டும் டும் டும்’, ‘மஜா’, ‘உள்ளம்…

Read More

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஜூன் 1-ம் தேதி கட்சிப் பொதுக்குழுவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல், அதற்கு போட்டியாக அதிமுக கவுன்சிலர்கள் துணையுடன் மாநகராட்சி கூட்டத்தை நடத்தியதற்கு மூளையாக செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதலே மோதல்.. மதுரை மாநகராட்சி திமுக மேயராக இந்திராணி இருந்து வருகிறார். இவர் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இந்திராணி மேயரான நாள் முதல், தற்போது வரை இவருக்கும் பெரும்பான்மை திமுக கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்களுக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரே ஒரு மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி மட்டும் மேயர் இந்திராணி ஆதரவாளராக இருந்து வருகிறார். மேயர் இந்திராணி பெயரளவுக்கு மேயராகவும், நிழல் மேயராக அவரது கணவர் பொன் வசந்த்…

Read More