Author: admin

மதுரை: மதுரையில் ‘தக் லைஃப்’ படம் பார்த்த இயக்குநர் அமீர், “கமல்ஹாசனை இயக்க வேண்டும் என ஆசை உள்ளது” என்று விருப்பம் தெரிவித்தார். மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிலம்பரசன் ஆகியோர் நடித்த திபை்படம் ‘தக்லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குளில் இப்படம் வெளியானது. மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள குரு தியேட்டரில் இப்படத்தின் முதல் காட்சியை நடிகரும், இயக்குநருமான அமீர் பார்த்தார். பின்னர் அவர் கூறியது: “40 ஆண்டுகளாக கமலஹாசனின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் முதல் நாள் முதல் காட்சியை மதுரையில்தான் பார்ப்பேன். சரியான நேரத்தில் சரியான மனிதர்கள் பக்கம் நிற்பதுதான் கடமையாக எண்ணுகிறேன்.இப்படத்தில் மொழி குறித்து ஏதும் அவர் தவறாக பேசவில்லை. காவிரி நீர் குறித்தும் கன்னட மொழி குறித்தும் தவறாக பேசவில்லை. திராவிட குடும்பத்தின் அன்பைப் பற்றியும் இணக்கத்தை…

Read More

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் 30 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக அரசு 3 மாத காலத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில்…

Read More

காமுஸின் வேட்டையாடும் மேற்கோள்கள்அபத்தமான தத்துவங்களுக்கும், துன்பம், அறநெறி, மனித இயல்பு மற்றும் பலவற்றைப் பற்றிய அவரது எழுத்துக்களுக்கும் பிரபலமான ஆல்பர்ட் காமுஸ் இன்று அவரது மேதைக்காக கொண்டாடப்படுகிறார். அவர் தனது பணிக்காக விமர்சகர்கள் மற்றும் அபிமானிகள் இருவரையும் வைத்திருக்கிறார், இங்கே காமுஸின் 8 பேய் மேற்கோள்களைக் குறிப்பிடுகிறோம்.

Read More

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குக் கூட கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என காவல் துறை மீது பாதிக்கப்பட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது பெங்களூரு மைதானத்துக்கு வெளியே வியாழக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர், 56 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், பெங்களூருவின் யெலஹங்காவில் உள்ள வீட்டில் சிறுமி திவ்யான்ஷியின் இறுதிச் சடங்குக்காக உறவினர்கள் கூடினர். அப்போது பேசிய திவ்யான்ஷியின் தந்தை சிவகுமார் உருக்கமான பல தகவல்களைப் பகிர்ந்தார். அவர், “எனது மகள் கேட் எண் 15-இல் நெரிசலில் சிக்கி காயமடைந்து விழுந்தார். அப்போது எனது மனைவி மற்றும் மைத்துனியும் அங்கு இருந்தனர். காயம்பட்டு கிடந்த மகளை அதிகாரிகள்…

Read More

சென்னை: பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகளை தொடங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தால் பாதிக்கப்படக் கூடிய ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கான திட்ட அனுமதிக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஏப்ரல் மாதம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. பின்னர் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கான ஒப்பந்தம் டிட்கோவால் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று தலைமைச் செலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பரந்தூர் விமான நிலைய…

Read More

டி.எம்.சி எம்.பி. மஹுவா மொய்த்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் பினாக்கி மிஸ்ரா ஆகியோர் ஒரு நெருக்கமான பெர்லின் விழாவில் சபதங்களை பரிமாறிக்கொண்டனர், விளம்பரத்தின் மீது தனியுரிமைக்கு முன்னுரிமை அளித்தனர். மொயைட்ரா ஒரு தனிப்பயன் பாரிகுல் சேலை, சிக்கலான மலர் விவரங்களைக் கொண்ட வெளிர் இளஞ்சிவப்பு வாரணாசி ப்ரோகேட், மிஸ்ரா ஒரு பொருந்தக்கூடிய கையால் செய்யப்பட்ட பட்டு பூண்டி ஜாக்கெட்டை வழங்கினார். குறைவான கொண்டாட்டம் இந்திய கைவினைத்திறனையும் நவீன அழகியலையும் எடுத்துக்காட்டுகிறது, இது தம்பதியரின் பகிரப்பட்ட மதிப்புகளை பிரதிபலிக்கிறது. பேர்லினில் நடைபெற்ற ஒரு அமைதியான மற்றும் நெருக்கமான விழாவில், டி.எம்.சி எம்.பி. மற்றும் வெளிப்படையான நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா மூத்த வழக்கறிஞரும் சக எம்.பி. ரசிகர் மற்றும் ஊடக கவனத்தைத் தவிர்த்து, தம்பதியினர் ஒரு குறைவான மற்றும் ஆழ்ந்த நேர்த்தியான கொண்டாட்டத்தைத் தேர்ந்தெடுத்தனர், மணமகளின் சேலை அதன் கைவினைத்திறன் மற்றும் கலாச்சார செழுமைக்காக மைய அரங்கை எடுத்தது.மஹுவா மொய்த்ரா ஒரு தனிப்பயன்…

Read More

புதுடெல்லி: மத்திய வக்பு கவுன்சிலை சமூகத்துக்கான சேவையில் மேலும் வலுவானதாகவும், பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மத்திய வக்பு பவனில் ‘தாயின் பெயரில் ஒரு மரம் நடுதல்’ என்ற கருப்பொருளின் கீழ் மரம் நடும் சிறப்பு பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கிரண் ரிஜிஜு, “மத்திய வக்ஃப் கவுன்சிலை சமூகத்துக்கான சேவையில் மேலும் வலுவானதாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். வக்பு சொத்துகளை நிர்வகிப்பதற்கான சட்ட மற்றும் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தவே வக்பு திருத்தச் சட்டம், 2025 இயற்றப்பட்டுள்ளது. சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பான மத்திய வக்பு கவுன்சில், 1964-ஆம் ஆண்டு வக்பு சட்டம், 1954-இன் விதிகளின்படி, வக்பு வாரியங்களின் செயல்பாடு மற்றும் வக்பு சொத்துகளின் நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசுக்கு ஆலோசனை…

Read More

கடலூர்: “பாமகவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணையாது. அந்தப் பேச்சுக்கே வாய்ப்பில்லை” என கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடலூரில் இன்று (ஜூன்.5) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் எனது சகோதரர் திருமால்வளவன் நேரில் சந்தித்தார். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வந்தது. ஆனால், இந்தச் சந்திப்புக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும் எனது குடும்பமும், எனது சகோதரர்களும் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சிக்காக நாங்கள் உழைத்தோம். ராமதாஸ் எங்களை வழிநடத்தினார். அவர் மூலமாக நான் இரண்டு முறை எம்எல்ஏ பதவியை பெற்றேன். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா என்ற ஆளுமைகளுடன் நேரடியாக பணியாற்றினேன். தற்போது ராமதாஸ், அன்புமணிக்கு கருத்து முரண்பாடு ஏற்பட்டு உள்ளது. அதில் ராமதாஸ் மனம் வருந்தி பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டதை கண்ட என் கட்சி நிர்வாகிகளும், நானும், எனது…

Read More

நடைபயிற்சி என்பது குறைந்த தாக்க செயல்பாடு, இது சுகாதார நன்மைகளை அறுவடை செய்கிறது. தொடர்ந்து மற்றும் சரியான வேகத்தில் செய்யும்போது, ​​உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல், தசைகளை டோனிங் செய்வது, உங்கள் இதயத்தை வலுப்படுத்துதல் மற்றும் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைப்பது ஆகியவற்றுடன் (உணவுக் கட்டுப்பாட்டுடன்) எடை குறைக்க நடைபயிற்சி உதவும். பெரும்பாலான மக்கள் தங்கள் பணி அட்டவணை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து அதிகாலையில் அல்லது மாலை தாமதமாக நடக்க விரும்புகிறார்கள். இருப்பினும், எடை இழப்பு என்று வரும்போது, ​​எந்த ஸ்லாட் சிறந்தது, ஏன்? நாங்கள் ஆழமாக தோண்டுகிறோம் ..காலைகாலையில் நடப்பது, குறிப்பாக வெற்று வயிற்றில், எடை இழப்புக்கு ஒரு சிறப்பு நன்மையைக் கொண்டுள்ளது. நீங்கள் காலை உணவுக்கு முன் நடக்கும்போது, ​​உங்கள் உடல் சேமிக்கப்பட்ட கொழுப்பை ஆற்றலின் முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்துகிறது, ஏனெனில் உங்கள் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருக்கும். இது உணவுக்குப் பிறகு நடப்பதை…

Read More

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். கொண்டாட்ட நிகழ்வொன்று கொடும் துயரமாக மாறிப்போனது துரதிருஷ்டவசமானது. இந்த நிலையில், 2008 முதல் 20225 வரை இந்தியாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் துயரங்கள் சிலவற்றின் பட்டியல் இது. > மே 3, 2025: கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீலைராய் தேவி கோயிலின் வருடாந்திர விழாவின்போது அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்; சுமார் 100 பேர் காயமடைந்தனர். > ஜன.29, 2025: உத்தரப் பிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவில், மவுனி அம்மாவசையன்று திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கானோர் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்தனர். எனினும், இந்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கைக்கு…

Read More