சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப்பட்டியலை 30 நாட்களில் வெளியிட தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கும், 129 தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், கடந்த 2023 ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முக தேர்வு போன்ற தேர்வு நடைமுறைகள் முடிந்து 2024 ஜனவரி மாதம் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தவறுகளை திருத்தி, திருத்தியமைக்கப்பட்ட தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில்,…
Author: admin
பார்கின்சன் நோய் (பார்கின்சன் நோய்) பொதுவாக நடுக்கம், விறைப்பு மற்றும் மெதுவான இயக்கங்கள் போன்ற மோட்டார் அறிகுறிகளுடன் தொடர்புடையது, ஆனால் மோட்டார் அல்லாத அறிகுறிகள், குறிப்பாக தோல் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. வறட்சி, செபொர்ஹெக் டெர்மடிடிஸ், அதிகப்படியான வியர்வை மற்றும் வாஸ்குலர் மாற்றங்கள் உள்ளிட்ட தோல் வெளிப்பாடுகள் பார்கின்சன் நோய் நோயாளிகளிடையே அதிகம் காணப்படுகின்றன, மேலும் அவை வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. சுவாரஸ்யமாக, இந்த தோல் அறிகுறிகள் மோட்டார் அறிகுறிகளுக்கு முன்பே தோன்றக்கூடும், இது ஆரம்பகால கண்டறியும் தடயங்களை வழங்குகிறது. நோயாளியின் வசதியை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கும், நோயை முந்தைய கண்டறிதலுக்கு உதவுவதற்கும், அவற்றின் மருத்துவ முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கும் பார்கின்சன் நோயில் தோல் நிலைகளை அங்கீகரிப்பது மற்றும் நிர்வகிப்பது அவசியம்.பார்கின்சன் நோய் என்றால் என்ன மற்றும் தோலில் அதன் அறிகுறிகள்பார்கின்சனின் நோய் ஒரு முற்போக்கான நரம்பியக்கடத்தல் கோளாறு ஆகும், இது முதன்மையாக இயக்கத்தை…
கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வந்த படம் ‘வா வாத்தியார்’. நீண்ட நாட்களாக இப்படம் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள். ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உல்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ள படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தது. கார்த்தியின் காட்சிகள் முடிக்கப்பட்டாலும், இதர நடிகர்களுக்கு இன்னும் படமாக்க வேண்டிய காட்சிகள் இருக்கின்றன. அனைத்தையும் முடித்து டிசம்பர் 5-ம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு களமிறங்கியிருக்கிறது. மேலும், ’கங்குவா’ படத்தின் தோல்வியால் ஏற்பட்ட சிக்கலில் இப்படம் வெளியாகுமா என்ற சூழல்…
புதுடெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் செப்.27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு வசம் கரூர் போலீஸார் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்”…
ஆப்பிள்கள் ஒரு சுவையான மற்றும் சத்தான சிற்றுண்டி, ஆனால் வெட்டப்பட்டதும், அவற்றின் பிரகாசமான வெள்ளை சதை விரைவாக பழுப்பு நிறமாக மாறும். என்சைடிக் பிரவுனிங் என அழைக்கப்படும் இந்த இயற்கையான செயல்முறை, ஆக்ஸிஜன் ஆப்பிளில் சேர்மங்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அதன் தோற்றத்தை மாற்றும் நிறமிகளை உருவாக்குகிறது. பழுப்பு நிற ஆப்பிள்கள் சாப்பிட பாதுகாப்பாக இருக்கும்போது, அவற்றின் காட்சி முறையீடு மற்றும் அமைப்பு பாதிக்கப்படலாம், இது தின்பண்டங்கள், சாலடுகள் அல்லது இனிப்பு வகைகளைத் தயாரிக்கும்போது வெறுப்பாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, எளிமையான, விஞ்ஞான ஆதரவு நுட்பங்கள் பழுப்பு நிறத்தை மெதுவாக்கும் மற்றும் ஆப்பிள்களை மணிநேரங்களுக்கு புதியதாக வைத்திருக்கலாம். குளிர் அல்லது எலுமிச்சை நீரில் ஊறவைப்பது முதல் தேன் அல்லது உப்பு கரைசல்களைப் பயன்படுத்துவது வரை, இந்த முறைகள் நிறம் மற்றும் மிருதுவான இரண்டையும் பாதுகாக்கின்றன.வெட்டிய பின் ஆப்பிள்கள் ஏன் பழுப்பு நிறமாக மாறும்ஆப்பிள் பிரவுன் ஏன் அதைத் தடுக்க முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வது. ஒரு…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கனிஸ்தான் எல்லை அருகே, கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஓராக்காய் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். 39 வயது லெப்டினன்ட் கர்னல் ஜூனைத் ஆரிப் தலைமையில் சென்ற ராணுவத்தினர், தலிபான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில், தலிபான் தீவிரவாதிகள் 19 பேர் கொல்லப்பட்ட நிலையில், ராணுவத் தரப்பில் லெப்டினன்ட் கர்னல் ஜூனைத் ஆரிப், மேஜர் தய்யப் ரஹத் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். ‘தியாகம் ஒருபோதும் வீண் போகாது’ – இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “19 பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு…
கடவுள் கதாபாத்திரத்தினை அவமதிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று ‘காந்தாரா’ படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். பொதுமக்கள் மத்தியில் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே, இப்படத்தில் உள்ள தெய்வ கதாபாத்திரங்களை முன்வைத்து பொதுமக்கள் சிலர் திரையரங்குகளுக்குள், திரையரங்கிற்கு வெளியே என நடிப்பது போன்று சில வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பலரும் இப்படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரம் போல் சத்தமிட்டு ரீல்ஸ் போட தொடங்கினார்கள். இந்த விஷயங்களை முன்வைத்து ‘காந்தாரா’ படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை அறிக்கை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அப்படத்தில் வரும் கதாபாத்திரத்தை பொதுவெளியில் யாரும் அவமதிக்க வேண்டாம். ஏனென்றால் அதில் வரும் கடவுள் கதாபாத்திரம் துளு நாடான கர்நாடகாவின் பெருமை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், இப்படத்தினை பொழுதுபோக்கிற்காக உருவாக்கவில்லை எனவும், இது போன்ற அவமதிக்கும் செயல்கள் மத நம்பிக்கையும்,…
சென்னை: “காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வரப்படும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (செப்., 08) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய கண்மூடித்தனமான தாக்குதல்கள், நம் எல்லோருடைய மனதை இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மனது மட்டுமல்ல, உலகத்தையே இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு நம்முடைய மனிதாபிமான, மனித உரிமை ஆதரவை மனப்பூர்வமாக நாம் வழங்குகிறோம். இதுதான் இந்தக் கண்டண இயக்கத்தின் முழக்கமாக அமைந்திருக்கிறது. கடந்த ஓராண்டாகவே, காசாவில் இஸ்ரேல் நடத்திக்…
ஒரு விமானத்திற்கு பொதி செய்வது மிகப்பெரியது. பாஸ்போர்ட்ஸ், சார்ஜர்கள், தின்பண்டங்கள் மற்றும் பயண ஆவணங்கள் பெரும்பாலும் உங்கள் கவனத்தை ஈர்க்கின்றன, ஆனால் பயணிகள் பெரும்பாலும் மறந்துபோகும் ஒரு உருப்படி இருக்கிறது, மேலும் இது உங்கள் விமான அனுபவ அனுபவத்தை முழுமையாக மாற்றும். இந்த எளிய அத்தியாவசியமானது ஒரு பயண நட்பு நீர் பாட்டில், மேலும் பெரும்பாலான மக்கள் உணர்ந்ததை விட இது மிகவும் முக்கியமானது.குறைந்த ஈரப்பதம், வறண்ட காற்று மற்றும் நெரிசலான இருக்கைகளுக்கு விமான அறைகள் இழிவானவை. இந்த நிலைமைகள் உங்கள் சருமத்தை உலர வைக்கலாம், உடல் நீரிழப்பு மற்றும் ஆற்றல் அளவுகள் குறைவாக, குறுகிய விமானங்களில் கூட. அடிக்கடி ஃப்ளையர்கள் தங்கள் சொந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதன் மூலம் சத்தியம் செய்கிறார்கள், ஏனெனில் அது பயணம் முழுவதும் நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியுடனும், வசதியாகவும் வைத்திருக்கிறது. இந்த உருப்படியை உங்கள் கேரி-ஆன் வைத்திருப்பதன் மூலம், விமான உதவியாளர்களிடமிருந்து தொடர்ந்து தண்ணீரைக் கேட்பது…
டேராடூன்: உத்தராகண்டில் மதரஸா கல்வி வாரிய சட்டத்துக்கு மாற்றாக சிறுபான்மையினர் கல்வி மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் குர்மீத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதியுடன் மதரஸா கல்வி வாரிய சட்டம் காலாவதியாகிறது. இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் சிறுபான்மையினர் கல்வி மசோதா, சட்டமாகி உள்ளது. புதிய சட்டத்தின்படி சிறுபான்மையினர் கல்வி ஆணையம் உருவாக்கப்படும். இந்த ஆணையமே சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும்’’ என்று தெரிவித்துள்ளார். புதிய சட்டம் குறித்து உத்தராகண்ட் அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதிதாக அமைக்கப்பட உள்ள சிறுபான்மையினர் கல்வி ஆணையத்தில் 12 நிபுணர்கள் இடம்பெறுவார்கள். இது சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும். மாநிலம் முழுவதும் செயல்படும் மதரஸாக்கள் வரும் கல்வியாண் டில் புதிதாக அங்கீகாரம் பெற வேண்டும்’’ என்றனர்.
