மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவரை, மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்னாந் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் வரவேற்றனர். இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவருடன் இங்கிலாந்து அமைச்சர்கள் மற்றும் வர்த்தகக் குழுவினர் இந்தியா வந்துள்ளனர். கெய்ர் ஸ்டார்மரை வரவேற்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வர்த்தகக் குழுவுடன் இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை தந்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்கிறோம். பரஸ்பரம் வலுவான, வளமான எதிர்காலத்துக்கான பகிரப்பட்ட நமது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கான நாளைய சந்திப்பை எதிர்நோக்குகிறேன்” என தெரிவித்துள்ளார். மும்பையில் நாளை (அக்டோபர் 9) காலை 10 மணி அளவில், பிரதமர் மோடி,…
Author: admin
வேலைவாய்ப்புத் துறையைப் பொறுத்தவரை இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பல புது வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதைச் செய்திகளில் காண முடிகிறது. இந்தியா மட்டுமல்ல எண்ணற்ற உலகளாவிய வாய்ப்புகளும் இருக்கின்றன. இதில் எவற்றையும் மாணவர்கள் தவறவிட்டுவிடக் கூடாது. தேடல்: கல்வியாக இருந்தாலும் வேலையாக இருந்தாலும் இந்தத் தருணத்தில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின் றனவோ அவற்றை மாணவர்கள் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் அதை விருப்பப்பட்டுச் செய்ய வேண்டும், அதுவும் நிகழ்காலத்திலேயே அதைத் திறம்படச் செய்ய வேண்டும். தேடல் என்பது வெறும் தகவல் திரட்டாக இருக்கக் கூடாது. அந்தத் தேடல் மேலோட்டமாக இல்லாமல் நேரம் போவதே தெரியாத அளவு ஆழமான தேடலாக இருக்க வேண்டும். உங்களுடைய தேடல் எவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் இருக்கிறதோ அவ்வளவு வைரங்கள் தென்படும். எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் கஷ்டப்பட்டுத்தேடக் கூடாது, இஷ்டப்பட்டுத் தேட வேண்டும். இப்படியான தேடல் இருந்தால் அதுதான் உங்களுக்கு விருப்பமான துறையை…
ரஜினி – கமல் இணையும் படத்தினை இயக்குகிறேனா என்ற கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் பதிலளித்துள்ளார். ‘ட்யூட்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதற்காக அளித்த பேட்டியில் “ரஜினி – கமல் இணையும் படத்தை இயக்குகிறீர்களா?” என்ற கேள்விக்கு “அந்தப் படத்தை நான் இயக்கவில்லை. இப்போது நான் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். ஆகையால் இப்போது அதைப் பற்றி பேசினால் சரியாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். மேலும், இப்பேட்டியில் ’லவ் டூடே’ மற்றும் ‘டிராகன்’ படங்கள் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியதையும் பகிர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். ‘டிராகன்’ படத்தில் தான் சிகரெட்டை சுண்டிவிடும் காட்சியை ரஜினி நடித்துக் காட்டியதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். ‘எல்.ஐ.கே’ படத்துக்குப் பிறகு தான் இயக்கி, நடிக்கும் சயின்ஸ் பிக்சன் கதையில் மட்டுமே கவனம் செலுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர்…
சென்னை: இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி இந்த சாதனைப் பயணம் 2001-ஆம் ஆண்டு புஜ் நில நடுக்கத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் அம்மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றதில் தொடங்கியது. அதன்பின் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் 135 நாள்கள் அந்தப் பதவியில் தொடர்வதன் மூலம், ஜவஹர்லால் நேருக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக அப்பதவியில் நீடிக்கும் இரண்டாவது தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின்…
தீபாவளி 2025 மூலையில் உள்ளது, மேலும் நீங்கள் உங்கள் வீட்டை விளக்குகள், அதிக வாங்கிய இனிப்புகளில் அலங்கரித்து, சிறந்த பட்டாசுகளை ஆர்டர் செய்துள்ளீர்கள். ஆனால் இந்த ஆண்டு, விளக்குகளின் திருவிழா அதற்கு பதிலாக ஒரு மினி தப்பிக்கும் என்றால் என்ன செய்வது? மிஸ்டி மலைகளுக்கு தீபாவளி போக்குவரத்தை மாற்றுவதை கற்பனை செய்து பாருங்கள், அல்லது பறவைகளின் சிரிப்பிற்கு வீட்டு சத்தம். கூட்டத்தின் மீது கோயில் மணிகள் சலசலப்பாக இருக்கும்.நீங்கள் டெல்லியில் இருந்தால், ஒரு வார விடுப்பு முழுவதும் எரிக்கப்படாமல் ஒரு இடைவெளியை ஏங்குகிறீர்கள் என்றால், தீபாவளி நினைவகத்திற்கு பல வார இறுதி பயணங்கள் உள்ளன. பாரம்பரிய கோட்டைகள் முதல் வனவிலங்கு சஃபாரிகள் வரை, ஹில் ஸ்டேஷன் சில்ஸ் வரை ஆன்மீக அதிர்வுகள் வரை, இந்த தப்பிப்புகள் 1-2 இரவுகளில் செய்யக்கூடியவை மற்றும் பணப்பையில் ஒளி. நீங்கள் குடும்பம், நண்பர்கள் அல்லது தனிப்பாடலுடன் இருந்தாலும், இந்த இடங்கள் புதிய காற்று, புதிய அனுபவங்கள்…
புதுடெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: வரும் ஜனவரி முதல், உறுதி செய்யப்பட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை ஆன்லைனில் எந்தவித கட்டணமும் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம். தற்போது பயணிகள் தங்கள் பயண தேதியை மாற்ற விரும்பினால் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, புதிய டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் ரத்து செய்யப்படும் நேரத்தைப் பொறுத்து ரத்து கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறை நியாயமற்றது. எனவே பயணிகளுக்கு ஏற்ற புதிய மாற்றங்களை செயல்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், புதிய தேதியில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வழங்குவதற்கு எந்த உத்தரவாதமும் தரப்படாது. இருக்கைகள் இருந்தால் மட்டுமே அவை கிடைக்கும். மேலும் புதிய டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்தால்,கட்டண வித்தியாசத்தை பயணிகள் செலுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தினை இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் பாராட்டியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தினை பார்த்துவிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக “ரிஷப் ஷெட்டி மீண்டும் உருவாக்கிய மாயாஜாலமான ‘காந்தாரா’வை பார்த்தேன். மங்களூரு மக்களின் நம்பிக்கையையும், அழகையும் முழு மனதுடன் பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ருக்மணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெளியான முதல் நாளில் இருந்தே ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் நல்ல வசூலையும் செய்து வருகிறது. ’காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் வசூல் ரூ.400 கோடியை கடந்திருக்கிறது. முதலில் குறைந்த அளவிலான வசூலே இருந்தாலும், நாளுக்கு நாள் வசூல்…
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பா.உ.செம்மல், டிஎஸ்பியான சங்கர் கணேஷை கைது செய்ய கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியான செம்மலின் உத்தரவு அசாதாரணமானது எனக்கூறி டிஎஸ்பியை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியான பா.உ.செம்மலை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதியாக இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். இதேபோல சென்னை வணிக நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாக பணியாற்றி வரும் தீப்தி அறிவுநிதி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை…
அமெரிக்க தொழில்முனைவோர் மற்றும் பயோஹேக்கர் பிரையன் ஜான்சன் மனித ஆயுட்காலம் விரிவாக்குவதற்கான தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். போட்காஸ்ட் ஸ்ப்ரூஹ்ட்டில் வில்லியம் ரோஸியுடனான சமீபத்திய கலந்துரையாடலில், ஜான்சன் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நீண்ட ஆயுள் உத்திகளில் சுமார் million 2 மில்லியனை முதலீடு செய்வதாக வெளிப்படுத்தினார். அவரது அணுகுமுறை பிளாஸ்மா உட்செலுத்துதல் போன்ற மேம்பட்ட அறிவியல் தலையீடுகளை கலக்கிறது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட ஒழுக்கமான தினசரி நடைமுறைகள். விலையுயர்ந்த சிகிச்சைகளுக்கு அப்பால், தீங்கு விளைவிக்கும் பழக்கங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை ஜான்சன் வலியுறுத்துகிறார், நீண்டகால நல்வாழ்வில் வாழ்க்கை முறை தேர்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதிநவீன தனிப்பட்ட பழக்கவழக்கங்களுடன் அதிநவீன மருத்துவ நுட்பங்களை இணைப்பதன் மூலம், அவர் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டையும் மேம்படுத்த முற்படுகிறார், நீண்ட ஆயுள் என்பது தடுப்பு மற்றும் ஒழுக்கம் பற்றியது என்பதை நிரூபிக்கிறது.பிரையன் ஜான்சன் பில்லியன் டாலர் ஒரு…
சென்னை: அரசு தலைமைப் பதவிகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் பணியாற்றும் பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் தொடர்ந்து 25 ஆண்டுகள் அரசின் தலைமைப் பதவியில் இருந்து வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “25 ஆண்டுகளாக அரசின் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாதுர்யம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், தேசத்திற்கு நேர்மையுடன் சேவை செய்வதற்கும் உள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது” எனத் தெரிவித்துள்ளார். கடந்த 2001 அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக முதல் முறையாக தலைமைப் பதவியை ஏற்றார் பிரதமர்…
