கடவுள் கதாபாத்திரத்தினை அவமதிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று ‘காந்தாரா’ படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். பொதுமக்கள் மத்தியில் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே, இப்படத்தில் உள்ள தெய்வ கதாபாத்திரங்களை முன்வைத்து பொதுமக்கள் சிலர் திரையரங்குகளுக்குள், திரையரங்கிற்கு வெளியே என நடிப்பது போன்று சில வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பலரும் இப்படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரம் போல் சத்தமிட்டு ரீல்ஸ் போட தொடங்கினார்கள். இந்த விஷயங்களை முன்வைத்து ‘காந்தாரா’ படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை அறிக்கை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அப்படத்தில் வரும் கதாபாத்திரத்தை பொதுவெளியில் யாரும் அவமதிக்க வேண்டாம். ஏனென்றால் அதில் வரும் கடவுள் கதாபாத்திரம் துளு நாடான கர்நாடகாவின் பெருமை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், இப்படத்தினை பொழுதுபோக்கிற்காக உருவாக்கவில்லை எனவும், இது போன்ற அவமதிக்கும் செயல்கள் மத நம்பிக்கையும்,…
Author: admin
சென்னை: “காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வரப்படும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (செப்., 08) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய கண்மூடித்தனமான தாக்குதல்கள், நம் எல்லோருடைய மனதை இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மனது மட்டுமல்ல, உலகத்தையே இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு நம்முடைய மனிதாபிமான, மனித உரிமை ஆதரவை மனப்பூர்வமாக நாம் வழங்குகிறோம். இதுதான் இந்தக் கண்டண இயக்கத்தின் முழக்கமாக அமைந்திருக்கிறது. கடந்த ஓராண்டாகவே, காசாவில் இஸ்ரேல் நடத்திக்…
ஒரு விமானத்திற்கு பொதி செய்வது மிகப்பெரியது. பாஸ்போர்ட்ஸ், சார்ஜர்கள், தின்பண்டங்கள் மற்றும் பயண ஆவணங்கள் பெரும்பாலும் உங்கள் கவனத்தை ஈர்க்கின்றன, ஆனால் பயணிகள் பெரும்பாலும் மறந்துபோகும் ஒரு உருப்படி இருக்கிறது, மேலும் இது உங்கள் விமான அனுபவ அனுபவத்தை முழுமையாக மாற்றும். இந்த எளிய அத்தியாவசியமானது ஒரு பயண நட்பு நீர் பாட்டில், மேலும் பெரும்பாலான மக்கள் உணர்ந்ததை விட இது மிகவும் முக்கியமானது.குறைந்த ஈரப்பதம், வறண்ட காற்று மற்றும் நெரிசலான இருக்கைகளுக்கு விமான அறைகள் இழிவானவை. இந்த நிலைமைகள் உங்கள் சருமத்தை உலர வைக்கலாம், உடல் நீரிழப்பு மற்றும் ஆற்றல் அளவுகள் குறைவாக, குறுகிய விமானங்களில் கூட. அடிக்கடி ஃப்ளையர்கள் தங்கள் சொந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதன் மூலம் சத்தியம் செய்கிறார்கள், ஏனெனில் அது பயணம் முழுவதும் நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியுடனும், வசதியாகவும் வைத்திருக்கிறது. இந்த உருப்படியை உங்கள் கேரி-ஆன் வைத்திருப்பதன் மூலம், விமான உதவியாளர்களிடமிருந்து தொடர்ந்து தண்ணீரைக் கேட்பது…
டேராடூன்: உத்தராகண்டில் மதரஸா கல்வி வாரிய சட்டத்துக்கு மாற்றாக சிறுபான்மையினர் கல்வி மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் குர்மீத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதியுடன் மதரஸா கல்வி வாரிய சட்டம் காலாவதியாகிறது. இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் சிறுபான்மையினர் கல்வி மசோதா, சட்டமாகி உள்ளது. புதிய சட்டத்தின்படி சிறுபான்மையினர் கல்வி ஆணையம் உருவாக்கப்படும். இந்த ஆணையமே சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும்’’ என்று தெரிவித்துள்ளார். புதிய சட்டம் குறித்து உத்தராகண்ட் அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதிதாக அமைக்கப்பட உள்ள சிறுபான்மையினர் கல்வி ஆணையத்தில் 12 நிபுணர்கள் இடம்பெறுவார்கள். இது சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும். மாநிலம் முழுவதும் செயல்படும் மதரஸாக்கள் வரும் கல்வியாண் டில் புதிதாக அங்கீகாரம் பெற வேண்டும்’’ என்றனர்.
தற்போதைய சூழலில் நிலையான ஒரு வேலையில் சேர முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்க வேண்டியது அவசியமா? – த.சக்திவேல், கிருஷ்ணகிரி நிலையான வேலை என்பது குறித்து இருவிதமான பார்வைகள் உள்ளன. ஒன்று அரசுப் பணிகள் (மாநில, மத்திய அரசுகள், அவற்றைச் சார்ந்த நிறுவனங்கள்) அல்லது இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள், வங்கிப் பணிகள் சார்ந்தும் சில உள்ளன. இன்னொன்று தனியார் துறைப் பணிகள். மாநில அரசைப் பொறுத்தவரை குரூப் 4, 3, 2, 1 மற்றும் இதர குரூப்களுக்கு 10ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்புவரை கல்வித்தகுதி பொருந்தும். அது போலவே மத்திய அரசுப் பணிகளின் பல நிலைகளுக்கு எஸ்.எஸ்.சி. முதல் யு.பி.எஸ்.சி. வரையிலும் மத்திய காவல் பணிகளுக்கு பிளஸ் டூ முதல் அதிகபட்சமாகப் பட்டப் படிப்பு போதும் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள் உள்பட). மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் தொழில்நுட்பப் பணிகள் கேட் (GATE) தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன. ஆராய்ச்சிப்…
‘பாகுபலி: தி எபிக்’ படத்தில் இருக்கும் ஆச்சரியங்கள் குறித்து மறைமுகமாக பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் ஷோபு. ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய படங்களை ஒன்றாக இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் பணிகள் ராஜமவுலி மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. இதன் முடிவில் ‘பாகுபலி 3’ படத்துக்கான அறிவிப்பு இருக்கும் என்று தகவல்கள் பரவின. இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷோபு பேட்டியில் விளக்கமளித்துள்ளார். ‘பாகுபலி 3’ தொடர்பாக தயாரிப்பாளர் ஷோபு, “‘பாகுபலி 3’ அறிவிப்பு நிச்சயமாக ‘பாகுபலி: தி எபிக்’ படத்தின் முடிவில் இருக்காது. ஆனால், வேறு சில ஆச்சரியங்கள் இருக்கலாம். ஆனால், அதுவுமே ‘பாகுபலி 3’ படத்துடன் தொடர்புடையது அல்ல. 3-ம் பாகத்திற்காக இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியதிருக்கிறது. பாகுபலி உலகத்தில் இருந்து சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்த மாதிரியான மறு வெளியீடு ஒரு முறை மட்டும் நடக்கும்…
சென்னை: “பிஹாரைப் போலத் தற்போது SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த ஒன்றிய பாஜக அரசு முயன்றால், அதற்கு எதிராக முதல்வர் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும்.” என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். இண்டியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் இதுவரை உரிய பதிலை அளிக்கவில்லை. ஆட்சிகளை மாற்றுவது, அமைப்பது ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்களின் உரிமை. அதனைத் தேர்தல் ஆணையம் கையில் எடுப்பது, ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம்.…
புகைப்படம்: ஆன்மீக சுடர்/ இன்ஸ்டாகிராம் ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் வேடிக்கையான மற்றும் எளிதான சோதனைகள், அவை ஒரு நபரின் உண்மையான ஆளுமையை சில நொடிகளில் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன. எப்படி? சரி, பெயர் குறிப்பிடுவது போல, இந்த சோதனைகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்ட தந்திரமான படங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் முதல் பார்வையில், ஒரு நபர் அவற்றில் ஒன்றை மட்டுமே கவனிக்க முடியும். முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்து, அவற்றின் உண்மையான தன்மையைப் பற்றி நிறைய டிகோட் செய்ய முடியும், இல்லையெனில் அனைவருடனும் பகிரப்படவோ அல்லது பகிரப்படவோ கூடாது.இந்த குறிப்பிட்ட சோதனை ஆரம்பத்தில் சமூக ஊடகங்களில் ஆன்மீக சுடரால் பகிரப்பட்டது, மேலும் ஒரு நபர் பிறந்த தலைவரா அல்லது விசுவாசமான பராமரிப்பாளரா என்று அவர்கள் கூறுகிறார்கள். படத்தில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன- ஒரு பெண்ணின் முகம் மற்றும் இரண்டு குதிரைகள். இருப்பினும், முதல்…
டிரம்ப் நிர்வாகத்தின் முன்மொழியப்பட்ட நாசா பட்ஜெட் வெட்டுக்களுக்கு எதிராக இந்த மாத தொடக்கத்தில் கேபிடல் ஹில் மீது போராட்டங்களை வழிநடத்தியது “தி சயின்ஸ் கை” மற்றும் கிரக சொசைட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி என்று பிரபலமாக அழைக்கப்படும் பில் நெய். இந்த திட்டம் நாசாவின் நிதியை சுமார் billion 24 பில்லியனிலிருந்து 18.8 பில்லியன் டாலர்களாகக் குறைக்கும், இது கிட்டத்தட்ட 24% குறைப்பு, அறிவியல் பணி நிதி ஆபத்தான 47% குறைப்புக்கு இலக்காக இருக்கும். NYE மற்றும் சுமார் 300 விண்வெளி வக்கீல்கள் இந்த குறைப்புகள் முன்கூட்டியே டஜன் கணக்கான மற்றும் திட்டமிடப்பட்ட பணிகளை முன்கூட்டியே முடிக்கக்கூடும் என்று எச்சரித்தனர், இதில் விடாமுயற்சி மார்ஸ் ரோவர் மற்றும் மனிதர்களை சந்திரனுக்குத் திருப்பித் தருவதை நோக்கமாகக் கொண்ட ஆர்ட்டெமிஸ் திட்டம் ஆகியவை அடங்கும். நாசாவின் சிறிய பட்ஜெட் மகத்தான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வருமானத்தை அளிக்கிறது, நாடு முழுவதும் 80,000 க்கும் மேற்பட்ட…
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவரை, மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்னாந் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் வரவேற்றனர். இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவருடன் இங்கிலாந்து அமைச்சர்கள் மற்றும் வர்த்தகக் குழுவினர் இந்தியா வந்துள்ளனர். கெய்ர் ஸ்டார்மரை வரவேற்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வர்த்தகக் குழுவுடன் இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை தந்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்கிறோம். பரஸ்பரம் வலுவான, வளமான எதிர்காலத்துக்கான பகிரப்பட்ட நமது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கான நாளைய சந்திப்பை எதிர்நோக்குகிறேன்” என தெரிவித்துள்ளார். மும்பையில் நாளை (அக்டோபர் 9) காலை 10 மணி அளவில், பிரதமர் மோடி,…
