புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசி வருகிறார். இது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சசி தரூர் எக்ஸ் தளத்தில் நேற்று கூறியதாவது:டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அழைப்பின் பேரில் நான் பங்கேற்றேன். அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா என்பது வளரும் சந்தை மட்டுமல்ல, உலக நாடுகளுக்காக வளர்ந்து வரும் மாதிரி என்று கூறினார். கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச அளவிலான நிச்சயமற்ற தன்மைக்கு நடுவிலும் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. முன்பு ட்விட்டர் என அறியப்பட்ட பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த தளம் பயனர்களுக்கு செயலிழந்ததாகக் காட்டியது. இதையடுத்து, எக்ஸ் செயலிழந்துவிட்டதா என்ற கேள்வியை பிற சமூக வலைதள பக்கங்களில் பயனர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிச.10-ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரம்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு டிச.10-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு டிச.15-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை: போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானை அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார். அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கவும், விருந்து கொடுக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் மேற்கொள்ள உள்ளன. 2018-க்கு பிறகு முகமது பின் சல்மான் அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறை.
டாக்கா: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வங்கதேச வெளியறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கமல் ஆகியோருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களை வங்கதேசத்திடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது நட்புக்கு எதிரானது, நீதியை கேலி செய்யக் கூடியது.
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால வழிபாடு நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. புதிய மேல்சாந்தி கோயில் நடையைத் திறந்துவைத்து வழிபாடுகளை மேற்கொண்டார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று அதிகாலை முதலே மண்டலகால வழிபாடுகள் தொடங்கின. புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்ற பிரசாத் நம்பூதிரி ஐயப்பன் கோயில் நடையையும், மனு நம்பூதிரி மாளிகை புரத்தம்மன் கோயில் நடையையும் திறந்து வைத்தனர்.
தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால் எங்கோ போய் எங்கோ முடிகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அந்த அப்பா அந்த சிறுவனிடம், ‘உனக்கு பிடித்த கரு கரு கருப்பாயி பாடல் இருக்கிறது அல்லவா? அதற்கு இவர்தான் மியூசிக்’ என்று என்னை காட்டுகிறார். உடனே அந்த சிறுவன் எனக்கு கைகொடுத்தான். இது போன்ற சின்ன பசங்களுக்கு கூட என் பாடல் தெரிகிறது என்பதற்காகத்தான் நான் காப்புரிமை கேட்பதில்லை” என்று தேவா கூறினார்.
இந்நிலையில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால், மூன்றரை லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அதிக காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெறும் என்று தமிழக இளைஞர்கள் எதிர்பார்த்த நிலையில், 2 ஆண்டு கரோனா இடை வெளிக்குப் பிறகு, 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் வெறும் 10,300 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று திமுக அரசு அறிவித்து ஏமாற்றியது. மேலும், 2023-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு நடத்தாமல் போட்டித் தேர்வர்கள் வயிற்றில் அடித்தது. இதைத் தொடர்ந்து, 2024-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் வெறும் 9,532 காலிப் பணியிடங்களை மட்டுமே நிரப்பி வஞ்சித்தது. இந்நிலையில் ஆட்சி முடியும் கடைசி ஆண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகமிகக் குறைந்த அளவாக 3,945 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று அறிவித்து திமுக அரசு அதிர்ச்சியளித்தது.
புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடை யிலான வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவடையும் தருவாயில் இருப்பதாக மத்திய அரசின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது: இந்திய-அமெரிக்க பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவின் சந்தை அணுகல் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதோடு, இந்திய பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத வரி தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
சீக்கிரம் உறங்கச் சென்றாலும் சோர்வாக எழுந்திருப்பது பலர் உணர்ந்ததை விட மிகவும் பொதுவானது. காலைக் களைப்பு என்பது உறங்கும் நேரத்துடன் அல்ல, மாறாக உங்கள் இரவு நேர வழக்கத்தை வடிவமைக்கும் பழக்கவழக்கங்களோடு தொடர்புடையது. ஒழுங்கற்ற தூக்க அட்டவணைகள், அதிகப்படியான திரை நேரம் அல்லது பிரகாசமான ஒளியின் வெளிப்பாடு போன்ற சிறிய நடத்தைகள் உடலின் இயற்கையான தாளத்தை சீர்குலைத்து தூக்கத்தின் ஆழத்தை குறைக்கும் என்று டாக்டர் பால் விளக்குகிறார். இந்த நுட்பமான குறுக்கீடுகள் மூளை ஓய்வெடுக்கும் நிலைகளுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன. அவரது ஆலோசனையானது வலுவான தூக்கக் குறிப்புகளை மீண்டும் உருவாக்குதல், மன உந்துதலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஆழ்ந்த, புத்துணர்ச்சியூட்டும் தூக்கத்தை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குதல் ஆகியவற்றில் மையமாக உள்ளது. இந்தப் பழக்கங்களைச் செம்மைப்படுத்துவதன் மூலம், உங்கள் உடல் ஆரோக்கியமான தாளத்திற்குத் திரும்பலாம், இது காலையில் எளிதாக விழிப்பு மற்றும் அதிக ஆற்றலை ஆதரிக்கிறது.ஒரு சீரான உறக்கம் எவ்வாறு மறுசீரமைப்பு தூக்கத்தை அதிகரிக்கிறதுடாக்டர் பால்…
