ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது ஆடித் திருக்கல்யாண நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டுக்கான ஆடித்திருக் கல்யாண விழா கொடியேற்றத்துடன் ஜுலை 18 தொடங்கி ஆகஸ்ட் 4 வரையிலும் 17 நாட்கள் நடைபெறுகிறது. ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் முதல் நாளான சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. சாயரட்சை பூஜை, கால பூஜைகளுக்கு பின்னர் ராமேசுவரம் கோயில் யானை ராமலட்சுமி நான்கு ரத வீதிகளில் கொடியுடன் வலம் வந்தது. காலை 10.30 மணிக்கு மேல் பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் நவசக்தி மண்டபத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அம்பாள் மண்டபத்தில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கன்னி லக்னத்தில் வேதவிற்பன்னர்கள் மந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்று ஆடித் திருக்கல்யாணத் திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சனிக்கிழமை…
Author: admin
சென்னை: திமுக கூட்டணி குறித்து விமர்சிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செயல்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணி குறித்து பேச அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு செயல்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு யார் கொடுத்திருக்கிறார் என்பது தெரியாது. ஆனால் மக்களை சந்திக்கும் அவர் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசுவதை விட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது அல்லது விமர்சிப்பது என்ற நிலையில் உரையாற்றுகிறார். இதில் உள்ள பின்புலத்தை சாமானிய மனிதர்களாலேயே அறிய முடியும். அவராக இதைப் பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 10 நாட்களாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும். அல்லது விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை நியமிக்க வேண்டும். குற்றவாளிகளை விரைந்து…
ஒரு ஈடுபாட்டுடன் கூடிய ஆப்டிகல் மாயை பார்வையாளர்களுக்கு 4321 களின் கட்டத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள எண்ணைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. இந்த காட்சி புதிர் இதேபோன்ற பின்னணிக்கு எதிராக நிமிட விவரங்களை விரைவாக அடையாளம் காணும் மூளையின் திறனை சோதிக்கிறது. கட்டுரை தீர்வை வெளிப்படுத்துகிறது மற்றும் வாசகர்களை மற்றவர்களுடன் சவாலை பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது, அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தின் கண்காணிப்பு திறன்களை சோதிக்கிறது. நீங்கள் எவ்வளவு கூர்மையானவர்? நாங்கள் சொன்னோம், உங்கள் மூளை? சில நொடிகளில் நிமிட விவரங்களைக் கண்டறிய போதுமான கூர்மையானதா? சரி, உங்கள் மூளையை சோதனைக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது. ஒரு புதிய ஆப்டிகல் மாயை இணையத்தை புயலால் எடுத்துள்ளது, இதனால் கூர்மையான மூளைகளை கூட தீவிர சோர்வாக விட்டுவிட்டது. இது உங்கள் சராசரி ஆப்டிகல் மாயை அல்ல, அது நிச்சயமாக உங்கள் மூளைக்கு ஒரு தீவிரமான வொர்க்அவுட்டைக் கொடுக்கப் போகிறது. ஆப்டிகல் மாயை என்றால்…
மைசூரு: அரசியல் சாசனத்தை அகற்ற பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் தினமும் முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். மைசூரு மாநகர வளர்ச்சிக்கான ரூ.2,500 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் அரசு விழா மைசூருவில் இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் தங்கள் செயல்பாடுகளை நிரூபிக்கிறார்கள். ஆனால், பாஜகவில் இருப்பவர்கள் பேச மட்டுமே செய்கிறார்கள். அரசியல் சாசனத்துக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் ஆல் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசியல்சாசனத்தை திருத்த அல்லது மாற்றப் பார்க்கிறார்கள். இதுபற்றி அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முயலலாம். ஆனால், அரசியல்சாசனத்தை மாற்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒருவேளை அரசியலமைப்பை மாற்ற அனுமதித்தால் பின்னர் மக்களுக்கு எந்த உரிமையும் இருக்காது. அரசியலமைப்பு காரணமாக முதல்வராகவும் பிரதமராகவும் ஆனவர் நரேந்திர மோடி.…
சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின், தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 23 ஆயிரத்து 567 சோதனைகள் நடத்தப்பட்டு, 21 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஊட்டியில் கடந்த மே மாதம் நடந்த நாய் கண்காட்சியில் பெட் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது சம்பந்தமான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கண்காட்சிக்காக நாய்களை அழைத்து வந்த வாகனங்களில் பெட் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை கண்டுபிடித்த பின், நாய்…
இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க ’10 -10-10 விதி ‘ உங்கள் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உங்களுக்கு எப்போதும் ஒரு பெரிய வாழ்க்கை முறை மாற்றம் தேவையில்லை – சில நேரங்களில், 10 நிமிடங்கள் மட்டுமே உதவ முடியும். ’10 -10-10 விதி ‘என்பது உங்கள் நாளில் எளிதில் பொருந்தக்கூடிய ஒரு எளிய, விஞ்ஞான ஆதரவு வழக்கமாகும்: உணவுக்கு முன் 10 நிமிட இடைநிறுத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள், சாப்பிட்ட பிறகு 10 நிமிட நடைக்கு செல்லுங்கள், ஒவ்வொரு நாளும் பிரதிபலிக்கும் 10 நிமிடங்கள் செலவிடுங்கள். இந்த சிறிய பழக்கவழக்கங்கள் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்; அவை உங்கள் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவுகின்றன, கவனத்துடன் உணவை ஊக்குவிக்கின்றன, இன்சுலின் பதிலை அதிகரிக்கின்றன, மேலும் சிறந்த சுய பாதுகாப்பை ஆதரிக்கின்றன. ஆராய்ச்சியின் ஆதரவுடன், இந்த வழக்கம் உங்கள் ஆரோக்கியத்தை கட்டுப்படுத்த எளிதான, யதார்த்தமான படிகளை வழங்குகிறது, ஒரு நேரத்தில் ஒரு 10…
புதுடெல்லி: போதைப் பொருள் இல்லாத இந்தியாவுக்கான பிரச்சாரத்தில் நாட்டு மக்கள் இணைய வேண்டும் என்றும், மத, சமூகத் தலைவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு இயக்கத்தில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார். ‘போதைப் பொருள் ஒழிப்பு’ என்ற கருப்பொருளுடன் 2 நாள் இளைஞர் ஆன்மிக உச்சி மாநாடு வாரணாசியில் இன்று தொடங்கியது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டை துறையின் அமைச்சர் மன்சுக் மண்டவியா தொடங்கிவைத்தார். இந்த உச்சி மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 122 ஆன்மிக, சமூக – கலாச்சார அமைப்புகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய மன்சுக் மண்டவியா, “போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது நாட்டுக்கு மிகவும் முக்கியம். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், இளைஞர்கள் போதைப்ப ழக்கத்துக்கு ஆட்படக் கூடாது. நமது இளம் தலைமுறையினர் அரசு திட்டங்களின்…
சிவகாசி: சிவகாசி அருகே ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், பணி பாதுகாப்பு கேட்டும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலைப் பள்ளியில் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியர் சண்முக சுந்தரத்தை நேற்று முன்தினம் மாணவர்கள் இருவர் பாட்டிலால் தாக்கினர். ஆசிரியரை தாக்கிய 2 மாணவர்களை கைது செய்த போலீஸார், சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இதே பள்ளியில் 2023 டிசம்பரில் ஆசிரியரை 2 மாணவர்கள் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பணி பாதுகாப்பு கேட்டு பள்ளி முன்பாக ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக் கல்வி அலுவலர் சுரேஷ் மற்றும் போலீஸார் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
மாரடைப்பு இனி மூத்தவர்களுக்கு ஒரு கவலையாக இருக்காது. இதய நோய் இளைய பெரியவர்களை, குறிப்பாக பெண்கள், முன்னெப்போதையும் விட கடினமானது என்பதை புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. 18 முதல் 44 வயது வரையிலான பெரியவர்களிடையே 66% மாரடைப்பு அதிகரித்துள்ள நிலையில், இதயப் பிரச்சினையின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது. வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் கடந்த கால கோவிட் நோய்த்தொற்றுகள் கூட இந்த எழுச்சியை உந்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் உங்கள் 40 கள், 50 கள் அல்லது 60 களில் இருந்தால், இப்போது உங்கள் இதய ஆரோக்கியத்தை பொறுப்பேற்கவும், அமைதியான நெருக்கடியைத் தடுக்கவும் நேரம். இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது இங்கே.இதய நோய் பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஒரு கவலையாகக் கருதப்படுகிறது, ஆனால் புதிய கண்டுபிடிப்புகள் ஒரு சிக்கலான போக்கைக் காட்டுகின்றன: இளைய…
சென்னை: ஜென்-ஜி இளைஞர்களை கவரும் வகையில், சென்னையை சூப்பர் சென்னையாக மாற்றும் பிரச்சார இயக்கத்தை கிரடாய் சென்னை அமைப்பின் தலைவர் ஏ.முகமது அலி தொடங்கி வைத்தார். சென்னையை சூப்பர் சென்னையாக விளம்பரப்படுத்தும் விதமாக, கிரடாய் சென்னை அமைப்பின் ஆதரவுடன், ‘சூப்பர்சென்னை’ என்ற பிரச்சார இயக்கம், சென்னை அண்ணாசாலையில் நேற்று தொடங்கப்பட்டது. கிரடாய் சென்னை அமைப்பின் தலைவர் ஏ.முகமது அலி இயக்கத்தை தொடங்கி வைத்து, www.superchennai.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘சூப்பர் சென்னை’ என்பது வெறும் பிரச்சாரம் மட்டுமல்ல. நமது நகரத்தின் அழகை கொண்டாடுவதற்கும், நகரத்தின் எதிர்காலத்துக்கான புதிய வழியை காண்பிக்கவும் உதவும் ஓர் இயக்கமாகும். சென்னை நகரம் நம் வாழ்வியலோடு இணைந்துள்ளது. கலாச்சாரம், புதுமைகளால் நிறைந்திருக்கிறது. ‘சூப்பர் சென்னை’ இயக்கமானது சென்னை நகரத்தின் வளர்ச்சி யையும், வாழ்வியலையும் வெளியுலகத்துக்கு எடுத்துக்காட்டவும், நம் சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளை கண்டறியவும் நமக்கு உதவும். இந்தியாவில் தனிநபர் வருமானம்…
