Author: admin

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று திறந்து வைத்​து, ரூ.4,500 கோடி மதிப்​பிலான திட்​டப் பணி​களை தொடங்​கிவைக்​கிறார். தூத்​துக்​குடி​யில் சர்​வ​தேச தரத்​தில் ரூ.452 கோடி​யில் விரிவாக்​கம் செய்​யப்​பட்​டுள்ள விமான நிலை​யத்​தின் திறப்பு விழா இன்று (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது. பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​று, விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை திறந்​து ​வைத்​து, நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கிறார். இதற்​காக மாலத்​தீ​வில் இருந்து இந்​திய விமானப் படைக்கு சொந்​த​மான தனி விமானத்​தில் இன்று இரவு 7.50 மணி​யள​வில் தூத்​துக்​குடி விமான நிலை​யத்​துக்கு பிரதமர் வரு​கிறார். அவருக்கு முக்​கியப் பிர​முகர்​கள் வரவேற்பு அளிக்கின்றனர். தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை பிரதமர் மோடி திறந்​து​வைத்த பின்​னர், செட்​டி​நாடு கட்​டிடக் கலையை பிர​திபலிக்​கும் வகையில் அமைக்​கப்​பட்​டுள்ள விமான நிலைய பயணி​கள் முனை​யம் உள்​ளிட்ட இடங்​களைப் பார்​வை​யிடு​கிறார். பின்​னர், விமான நிலைய வளாகத்​தில் நடை​பெறும் விழா​வில் கலந்து கொண்​டு,…

Read More

கும்​பகோணம்: தவெக பிரச்​சார ஸ்டிக்​கர்​களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்​கி​விட்​டு, விஜய் படம் மட்​டும் இடம் பெற வேண்டுமென தலைமை உத்​தர​விட்​டுள்​ள​தாக கட்​சி​யினர் தெரி​வித்​தனர். கும்​பகோணம் வட்​டம் தாராசுரத்​தில் தமிழக வெற்​றிக் கழகத்​தினர் வீடு​தோறும் ‘மக்​கள் விரும்​பும் உங்​கள் வேட்​பாளர் விஜய்’ என அச்​சிட்ட ஸ்டிக்​கர்​களை 300-க் ​கும் மேற்​பட்ட வீடு​களில் நேற்று முன்​தினம் ஒட்​டினர். இந்த ஸ்டிக்​கரில் விஜய் படத்​துடன், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் படமும் இடம் பெற்று இருந்​தது. இந்​நிலை​யில், ஸ்டிக்​கரில் ஆனந்த் படத்தை நீக்கி விட்​டு, விஜய் படம் மட்​டும் உள்ள புதிய ஸ்டிக்​கரை அக்​கட்​சி​யினர் அச்​சிட்​டு, வீடு​களில் ஏற்​கெனவே ஸ்டிக்​கர் ஒட்​டப்​பட்​டிருந்த ஸ்டிக்​கருக்கு மேல் ஒட்டி வரு​கின்​றனர். இது தொடர்​பாக தவெக தஞ்​சாவூர் கிழக்கு மாவட்ட இணைச் செய​லா​ளர் பிர​பாகர் கூறிய​தாவது: கும்பகோணத்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்​கரில் ஆனந்த் படத்தை அகற்​றி​விட்​டு, விஜய் படத்தை மட்​டும் ஸ்டிக்​கரில் அச்​சிட்​டு, புதிய ஸ்டிக்​கரை ஒட்ட வேண்​டும்…

Read More

சென்னை: சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் என்​பது ஒரு தில்​லு​முல்லு நடவடிக்கை என்​றும் மக்​களாட்சி மக்​களுக்கே உரியது; அதையாரும் களவாட அனு​ம​திக்க மாட்​டோம் என்​றும் முதல்​வர் ஸ்​டா​லின் கருத்து தெரி​வித்​துள்​ளார். தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப்​பணி​கள் தொடங்​கப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யான​தால், பல்​வேறு அரசி​யல் கட்சிகளும் தேர்​தல் ஆணை​யத்​திடம் அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்தை நடத்த வேண்​டும் என்​றும் ஆதாரை ஆவண​மாக கருதவேண்​டும் என்​றும் கோரிக்கை விடுத்து வரு​கின்​றன. இதற்​கிடை​யில் பிஹாரில் பல லட்​சம் வாக்​காளர்​கள் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இந்​நிலை​யில் முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​பதிவு: சிறப்​புத் தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் என்​பது சத்தமே இல்​லாமல் பின்​தங்​கிய மற்​றும் தங்​களுக்கு எதி​ரான பிரி​வினரை வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கி, தேர்​தலில் பாஜகவுக்கு சாதக​மான சூழலை உரு​வாக்​கும் செய​லாகும். இது சீர்​திருத்​தம் அல்ல; தேர்​தல் முடிவு​களைத் திட்​ட​மிட்​டபடி வடிவமைக்​கும் தில்​லு​முல்லு நடவடிக்​கை. பிஹார் மாநிலத்​தில் நடந்​ததே…

Read More

சென்னை: வலிமை​யான ராணுவமே நாட்​டின் பாது​காப்​பு, பெரு​மைக்கு அடிப்​படை என்று ராணுவ அதி​காரி​களுக்​கான பாராட்டு விழா​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி கூறி​னார். புயல், மழை, வெள்​ளம், நிலச்​சரிவு போன்ற இயற்கை பேரழி​வு​களின்​போது மேற்கொள்ளும் மீட்​பு, நிவாரண பணி​கள் மற்​றும் ‘ஆபரேஷன் சிந்​தூர்’ நடவடிக்​கை​யில் இந்​திய ராணுவ தென் பிராந்​திய பகுதியின் அசா​தாரண பங்​களிப்பை பாராட்​டி, நன்றி தெரிவிக்​கும் விழா ஆளுநர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், ராணுவத்​தின் 16 மெட்​ராஸ் (திரு​வாங்​கூர்), 35 ஃபீல்ட் படைப்​பிரிவு, ஆவடி ஆயுத தொழிற்​சாலை, 65 கம்​பெனி ராணுவ சேவை படை (விநி​யோகம்) ஆகிய 4 பிரிவு​களை சேர்ந்த ராணுவ அதி​காரி​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ரவி பாராட்டு சான்​றிதழ் வழங்கி கவுர​வித்​தார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை மூலம் இந்​திய ராணுவத்​தின் வலிமை, ஒற்​றுமை, அர்ப்​பணிப்பு உணர்வு வெளிப்​பட்​டது. ராணுவம் பலவீன​மாக இருந்​தால் நட்பு நாடு​கள்​கூட எதிரி​யாக பார்க்​கும். வலிமை​யான ராணுவமே நாட்டின் பாது​காப்​பு,…

Read More

சென்னை: ​போலி வணி​கர்​களைத் தடுக்க கள ஆய்வு செய்​வது அவசி​யம் என்று வணி​கவரித் துறை ஆய்​வுக் கூட்​டத்​தில் அமைச்சர் பி.மூர்த்தி அறி​வுறுத்​தி​னார். சென்னை நந்​தனம் ஒருங்​கிணைந்த வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை வளாக கூட்ட அரங்கில், நடப்​பாண்டு ஜூன் மாதம் வரையி​லான அனைத்து வணி​கவரி இணை ஆணை​யர்​களின் பணித்​திறன் ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் அமைச்​சர் பி.மூர்த்தி பேசி​ய​தாவது: புதி​தாக ஜிஎஸ்டி வரி​யில் இணைய விண்​ணப்​பிக்​கும் வணி​கர்​களின் ஆவணங்​கள் சரியாக உள்​ளதா என்​பதை சரி​பார்ப்​பதுடன், அவர்​கள் உண்​மை​யாக தொழில் புரி​கிறார்​களா என்​ப​தை​யும் கள ஆய்வு செய்ய வேண்​டும். இதன் மூலம் போலி வணி​கர்​களைத் தடுக்க முடி​யும். கள ஆய்​வுக்குச் செல்​லும்​போது ரூ.40 லட்​சத்​துக்​கும் மேல் தொழில் செய்​யும், ஜிஎஸ்டி தொடர்​பான விழிப்​புணர்வு இல்​லாத வணிகர்களுக்​கு, அவர்​களை ஜிஎஸ்டி வரம்​புக்​குள் இணை​யு​மாறு அறி​வுறுத்த வேண்​டும். அரசுக்கு கூடு​தல் வரு​வாய் ஈட்​டித்​தரும் வகை​யில், அனை​வரும் கவன​மாக பணி​யாற்ற வேண்​டும். இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார். தமிழ்​நாடு வணி​கர்…

Read More

நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதற்கும், மன அழுத்தத்தால் ஏற்படும் சோர்வு மற்றும் மனச்சோர்வைக் குறைப்பதற்கும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட நீண்ட வரலாற்றை ரோடியோலா கொண்டுள்ளது. இது “ரோஸ் ரூட்”, “ஆர்க்டிக் ரூட்” மற்றும் “கோல்டன் ரூட்” என்றும் அழைக்கப்படுகிறது. ரஷ்யா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், நோர்வே ET போன்ற பல நாடுகளில், நமது மன கவனம் மற்றும் பதட்டமான சைடெம் கோளாறுகளை மேம்படுத்துவதன் மூலம் உடல் சகிப்புத்தன்மை, வேலை-உற்பத்தித்திறன் மற்றும் நீண்ட ஆயுளை அதிகரிக்க பல நூற்றாண்டுகளாக இது பயன்படுத்தப்படுகிறது.

Read More

புதுடெல்லி: ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் யுஎல்பிஜிஎம் – வி3 என்ற ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உருவாக்கியது. இந்த ஏவுகணை தயாரிப்பு அதானி மற்றும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த வகை ஏவுகணையில் வி1, வி2, வி3 என்ற மூன்று வகை ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் வழிகாட்டுதல், செயல்பாடு, தாக்கும் தூரம் ஆகிய விஷயங்களில் மாறுபாடுகள் உள்ளன. இவற்றில் யுஎல்பிஜிஎம் – வி3 ஏவுகணை பெங்களூரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏரோ இந்தியா 2025 கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த ஏவுகணையை ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள திறந்தவெளி சோதனை மையத்தில் டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. 12.5 கிலோ எடையுள்ள இந்த ஏவுகணை ட்ரோன் மூலம் வானில் எடுத்துச் செல்லப்பட்டு ஏவப்பட்டது. இந்த ஏவுகணையை பயன்படுத்தி பகலில் 4 கி.மீ தூரம் உள்ள இலக்கையும், இரவில் 2.5 கி.மீ தூரமுள்ள…

Read More

ஆரோக்கிய பயிற்சியாளர் டேனியல் லீயு தொப்பை கொழுப்பைக் குறைக்கவும் 21 நாட்களில் வரையறுக்கப்பட்ட ஏபிஎஸ் அடையவும் உதவும் நான்கு எளிய வீட்டு உடற்பயிற்சிகளையும் அறிவுறுத்துகிறார். இந்த பயிற்சிகளில் அதிக முழங்கால் கைதட்டல்கள், நிற்கும் பக்க நெருக்கடிகள், குறுக்கு நெருக்கடிகள் மற்றும் சாதாரண உயர் முழங்கால்கள் ஆகியவை அடங்கும். வடிவம் மற்றும் நிலைத்தன்மையில் கவனம் செலுத்துகையில், இந்த உடற்பயிற்சிகளும் கோர், சாய்வுகள் மற்றும் இடுப்பைக் குறிவைத்து, தீவிர ஜிம் அமர்வுகள் இல்லாமல் ஒட்டுமொத்த எடை இழப்புக்கு உதவுகின்றன. அணுகுமுறை சரியாக இருந்தால் எடை இழப்பு எளிதானது. ஆனால் தொப்பை கொழுப்பை இழப்பது முற்றிலும் வேறுபட்ட பந்து விளையாட்டு. எடை இழப்பு பயணம் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் பொதுவாக தொப்பை கொழுப்பை இழப்பதில் போராடுகிறார்கள். தொப்பை கொழுப்பை எரிப்பது பெரும்பாலும் க்ரஞ்ச்ஸ் அல்லது ரஷ்ய திருப்பங்கள் போன்ற தீவிர உடற்பயிற்சிகளாகும். ஆனால், அந்த தீவிர உடற்பயிற்சிகளும் இல்லாமல் தொப்பை கொழுப்பை இழக்க முடிந்தால் என்ன…

Read More

சென்னை: வங்கி மோசடி புகார் தொடர்​பாக அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் மீது அமலாக்​கத்​துறை பதிவு செய்​திருந்த வழக்கை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், பறி​முதல் செய்​யப்​பட்ட பொருட்​களை​யும் திருப்பி ஒப்​படைக்க அமலாக்​கத்​துறைக்கு உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 2013-ம் ஆண்டு இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யிட​மிருந்து பெற்ற ரூ.30 கோடி கடன் தொகையை தனது சகோதர நிறு​வனங்களுக்கு திருப்பி விட்​ட​தால் வங்​கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக்​கூறி அமைச்​சர் நேரு​வின் சகோ​தரர் என்.ரவிச்​சந்​திரன் மற்றும் அவர் இயக்​குந​ராக உள்ள நிறு​வனத்​துக்கு எதி​ராக சிபிஐ 2021-ம் ஆண்டு வழக்​குப்​ப​திவு செய்​தது. இந்த வழக்​கின் அடிப்​படை​யில் அமலாக்​கத்​துறை​யும் வழக்​குப்​ப​திவு செய்து ரவிச்​சந்​திரன் மற்​றும் அவருக்கு சொந்​த​மான நிறு​வனங்களில் சோதனை மேற்​கொண்டது. இந்​நிலை​யில் எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்த சிபிஐ வழக்கை ரத்து செய்​யக்​கோரி என். ரவிச்​சந்​திரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார். அந்த வழக்கை விசா​ரி்த்த நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்​தி, மனு​தா​ர​ரான ரவிச்சந்திரனுக்கு ரூ.…

Read More

புதுடெல்லி: பிரதமரின் வளரும் பாரத வேலைவாய்ப்பு திட்டம் (பிஎம்-விபிஆர்ஓய்) என்ற பெயரில் வேலைவாய்ப்புடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது. இத்திட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் பயன்கள், இந்தாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு கிடைக்கும். ரூ.99,446 கோடி மதிப்பிலான இந்த ஊக்கத்தொகை திட்டம், நாட்டில் 2 ஆண்டு காலத்துக்கு 3.5 கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும். உற்பத்தி துறைகள் உட்பட பல துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் வேலை அளிப்பவர்களுக்கு ஊக்குவிப்பை அளிக்கும். இத்திட்டம் முதல்முறை வேலையில் சேருபவர்களுக்கும், அவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பவர்களுக்கும் பயன்தரும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் முதல்முறையாக பதிவு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஒரு மாத இபிஎப்…

Read More