புதுடெல்லி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி ஆகிய இரு இனக் குழுக்களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கிய மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில், 250 பேர் உயிரிழந்ததுடன் 60,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் தனது பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 13 முதல் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும், 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீ்ட்டிக்க வகை செய்யும் தீர்மானத்தை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். மாநிலங்களவை செய்திக்குறிப்பில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ன் கீழ் மணிப்பூர் மாநிலத்தில் 2025, பிப்ரவரி 13-ல் பிரகடனம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் தொடர்ந்து…
Author: admin
Last Updated : 26 Jul, 2025 07:35 AM Published : 26 Jul 2025 07:35 AM Last Updated : 26 Jul 2025 07:35 AM தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து இயக்கும் படம், ‘ஸ்பிரிட்’. இதில் இந்தி நடிகை தீபிகா படுகோன் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், தினமும் எட்டு மணி நேரத்துக்கு மேல் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்பதால் அதிலிருந்து வெளியேறினார். இந்த விவகாரம் இந்தி சினிமாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து புதிதாகக் குழந்தை பெற்றுள்ள தாய்மார்களுக்கு சினிமாவில் வேலை நேரம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. நடிகை வித்யா பாலனிடம் இதுகுறித்து கேட்டபோது, “எனக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்வதிலோ அல்லது படப்பிடிப்புக்காக வேறு லொகேஷனுக்கு பயணம் செல்வதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் புதிதாகக் குழந்தை பெற்றுள்ள தாய்மார்கள் அவ்வாறு செய்ய முடியாது. அவர்களுக்குக் குழந்தைகளைப்…
கும்பகோணம்: தமிழ்நாடு பிராமணர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கார்த்திகேயன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: திருவாரூருக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமியிடம், பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி, நல வாரியம் அமைக்க வேண்டும். கும்பகோணம் தொகுதியை பிராமணருக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அவர் வரும் தேர்தலில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறோம். அப்படி அவர் அறிவித்தால், தமிழகத்தில் உள்ள 45 லட்சம் பிராமணர்களும் அவருக்கு ஆதரவு அளிப்போம். அதேநேரத்தில், எங்களது கோரிக்கையை, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம். ஆனால், திமுகவை ஆதரிப்பது என்பது, அப்போதுள்ள மனநிலையைப் பொறுத்ததாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2 தொகுதிகளில் வாய்ப்பு: இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி கூறும்போது, “தமிழகத்தில் அண்மைக்காலமாக பிராமணர்களை இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பிராமணர்களுக்கு உரிய அங்கீகாரம், பிரதிநிதித்துவம் இல்லாததே இதற்குக் காரணம். எனவே, வரும் தேர்தலில்…
திருப்பதி: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் ஸ்ரீநிவாச திவ்ய அனுக்ரஹ ஹோமம் டிக்கெட்கள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி அலிபிரி நடைபாதை தொடக்கத்தில் கோசாலை அருகே பெருமாள் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஸ்ரீநிவாச திவ்ய அனுக்ரஹ ஹோமம் நடைபெறுகிறது. இதற்காக 150 ஆன்லைன் டிக்கெட்களும், நேரில் 50 டிக்கெட்களும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆன்லைனிலேயே தினமும் 200 ஹோமம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.1,000 ஆகும். இதில் தம்பதி சமேதராக பக்தர்கள் கலந்து கொள்ளலாம். ஹோமம் முடிந்த பின்னர், இதில் பங்கேற்ற தம்பதி ரூ.300 டிக்கெட்கள் இரண்டை பெற்று, திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
பதுமி: ஃபிடே மகளிருக்கான உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். ஜார்ஜியா நாட்டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிருக்கான உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இன்று (26-ம் தேதி) இந்திய கிராண்ட் மாஸ்டரான கோனேரு ஹம்பி, சர்வதேச மாஸ்டரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்வது உறுதியாகி உள்ளது. உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் இரு இந்தியர்கள் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதன்முறையாகும். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். 8 பேர் கலந்து கொள்ளும் கேண்டிடேட்ஸ் தொடரில், உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின்…
தர்ஷன், பாடினி குமார், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூரலிகான் என பலர் நடித்துள்ள படம் ‘சரண்டர்’. விகாஸ் படிஸா இசை அமைத்துள்ளார். அப்பீட் பிக்சர் சார்பாக விஆர்வி குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கவுதமன் கணபதி இயக்கியுள்ளார். ஆக.1-ம் தேதி வெளியாக இருக்கும் இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கவுதமன் கணபதி பேசும்போது, “ இந்தப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை. வேண்டும் என்றே வைக்கவில்லை என்று கூற முடியாது. தேவைப்படவில்லை. கதாநாயகனாக நடித்துள்ள தர்ஷனும் எனக்கு இது மாதிரி வேண்டும் என எதையுமே கேட்கவில்லை. இதில்பணியாற்றியுள்ள கேமராமேன், எடிட்டர், இசை என எல்லோருமே எனது குரு அறிவழகனிடமிருந்து வந்தவர்கள் தான். ஒரு டீமாக உழைத்துள்ளோம். படம் நேர்த்தியாக வந்துள்ளது’ என்றார். நடிகர் தர்ஷன் பேசும்போது, “ இயக்குநர் கவுதமன்…
காரைக்குடி: பழங்குடி மக்களை தாக்கும் ‘சிக்கிள் செல் அனீமியா’ என்ற அரிய நோய்க்கு குறைந்த செலவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் என்.கலைச்செல்வி கூறினார். மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுமத்தின் கீழ் (சிஎஸ்ஐஆர்) காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (செக்ரி) 78-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் என்.கலைச்செல்வி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்தீஸ்கர், ஒடிசா, பிஹார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடி மக்களை ‘சிக்கிள் செல் அனீமியா’ என்ற அரியவகை நோய் தாக்குகிறது. இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் சிஎஸ்ஐஆர் கடந்த 8 ஆண்டுகளாக ஈடுபட்டது. தற்போது இந்நோயைக் கண்டறிந்து, 20 நிமிடங்களில் முடிவை அறிவிக்கக்கூடிய ‘பிசிஆர்’ தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளோம். ஒரு சொட்டு ரத்தம் மூலம் நோயைக் கண்டறிய முடியும். இந்த கருவியை உருவாக்கக்கூடிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களும் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. ஓரிரு மாதங்களில்…
லான்செட் பொது சுகாதாரத்தில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வின்படி, புற்றுநோய், முதுமை, இதய நோய் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட முக்கிய சுகாதார நிலைமைகளின் அபாயத்தை வெகுவாகக் குறைக்க ஒரு நாளைக்கு 7,000 படிகள் நடப்பது போதுமானதாக இருக்கும். 10,000 படிகள் கோல்டன் எண் என்ற பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, ஆராய்ச்சியாளர்கள் இன்னும் அடையக்கூடிய இலக்கு இன்னும் சக்திவாய்ந்த சுகாதார நன்மைகளை வழங்குகிறது என்று கண்டறிந்தனர். பலருக்கு, இந்த வெளிப்பாடு தீவிரமான உடற்பயிற்சிகளையோ அல்லது ஜிம் உறுப்பினர்களையோ தேவையில்லாமல் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் மேம்படுத்த ஒரு ஊக்கமளிக்கும் மற்றும் யதார்த்தமான மாற்றாக இருக்கலாம்.ஏன் 7,000 படிகள் ஒரு விளையாட்டு மாற்றிஉடற்பயிற்சி கண்காணிப்பாளர்களால் பிரபலப்படுத்தப்பட்ட 10,000-படி இலக்கு 1960 களில் ஜப்பானிய சந்தைப்படுத்தல் பிரச்சாரத்திலிருந்து தோன்றியது. இருப்பினும், இது அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது அல்ல. சமீபத்திய உலகளாவிய பகுப்பாய்வு 160,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களிடமிருந்து தரவை மதிப்பாய்வு செய்தது மற்றும் தினமும் 7,000…
புதுடெல்லி: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியும். அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கெய்ர் ஸ்டார்மர் ஆங்கிலத்திலும், பிரதமர் நரேந்திர மோடி இந்தியிலும் பேசினர். பிரதமர் மோடியின் இந்தி உரையை ஒரு மொழி பெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதேபோல பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் ஆங்கில உரையை மற்றொரு மொழிபெயர்ப்பாளர் இந்தியில் மொழிபெயர்த்து கூறினார். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஸ்டார்மர் பேசும்போது இருநாடுகளுக்கும் பெருமளவில் முதலீடுகள் குவியும் என்று குறிப்பிட்டார். அவரது ஆங்கில உரையை மொழிபெயர்ப்பாளர் இந்தியில் மொழிபெயர்த்தபோது பதற்றத்தில் தடுமாறினார். இதை கவனித்து குறுக்கிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “கவலைப்படாதீர்கள், நீங்கள் சில நேரங்களில் ஆங்கில வார்த்தைகளை தாராளமாக பயன்படுத்தலாம்’’ என்றார். பிரதமர் மோடியின் கனிவால் நெகிழ்ந்த மொழிபெயர்ப்பாளர், நன்றி கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் இந்தி, ஆங்கில புலமையால் இறுக்கம் மறைந்து கலகலப்பான சூழல் உருவானது. இந்த சுவாரசிய உரையாடல் வீடியோ…
புதுடெல்லி: இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வரும் செப்டம்பர் 4 முதல் 14 வரை உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 20 பேர் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீராங்கனைகளான லோவ்லினா போர்கோஹெய்ன், நிகத் ஜரீன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவில்லை. ஆடவர் அணி: ஜதுமணி சிங் மாண்டெங்பாம் (50 கிலோ), பவன் பர்ட்வால் (55 கிலோ), சச்சின் சிவாச் ஜூனியர் (60 கிலோ), அபினாஷ் ஜம்வால் (65 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), லக் ஷ்யா சாஹர் (80 கிலோ), ஜுக்னூ அஹ்லாவத் (85 கிலோ), ஹர்ஷ் சவுத்ரி (90 கிலோ), நரேந்தர் பெர்வால் (90+ கிலோ). மகளிர் அணி: மீனாட்சி ஹூடா (48 கிலோ), நிகத் ஜரீன் (51 கிலோ), சாக் ஷி…
