Author: admin

திருப்பதி: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆன்​லைனில் ஸ்ரீநி​வாச திவ்ய அனுக்ரஹ ஹோமம் டிக்​கெட்​கள் வழங்​கப்​படும் என திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் அறி​வித்​துள்​ளது. திருப்​பதி அலிபிரி நடை​பாதை தொடக்​கத்​தில் கோசாலை அருகே பெரு​மாள் கோயில் உள்​ளது. இங்கு தின​மும் ஸ்ரீநி​வாச திவ்ய அனுக்ரஹ ஹோமம் நடை​பெறுகிறது. இதற்​காக 150 ஆன்​லைன் டிக்​கெட்​களும், நேரில் 50 டிக்​கெட்களும் பக்​தர்​களுக்கு வழங்​கப்​பட்டு வந்​தன. இந்​நிலை​யில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆன்​லைனிலேயே தின​மும் 200 ஹோமம் டிக்​கெட்​டு​கள் வழங்​கப்​படும் என திருப்​பதி தேவஸ்​தானம் அறி​வித்​துள்​ளது. இந்த டிக்​கெட்​டின் விலை ரூ.1,000 ஆகும். இதில் தம்​பதி சமேத​ராக பக்​தர்​கள் கலந்து கொள்​ளலாம். ஹோமம் முடிந்த பின்​னர், இதில் பங்​கேற்ற தம்​பதி ரூ.300 டிக்​கெட்​கள் இரண்டை பெற்​று, திரு​மலைக்கு சென்று ஏழு​மலை​யானை தரிசிக்​கலாம் என தேவஸ்​தானம்​ அறி​வித்​து உள்​ளது.

Read More

பதுமி: ஃபிடே மகளிருக்கான உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். ஜார்ஜியா நாட்டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிருக்கான உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இன்று (26-ம் தேதி) இந்திய கிராண்ட் மாஸ்டரான கோனேரு ஹம்பி, சர்வதேச மாஸ்டரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்வது உறுதியாகி உள்ளது. உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் இரு இந்தியர்கள் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதன்முறையாகும். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். 8 பேர் கலந்து கொள்ளும் கேண்டிடேட்ஸ் தொடரில், உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின்…

Read More

தர்ஷன், பாடினி குமார், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூரலிகான் என பலர் நடித்துள்ள படம் ‘சரண்டர்’. விகாஸ் படிஸா இசை அமைத்துள்ளார். அப்பீட் பிக்சர் சார்பாக விஆர்வி குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கவுதமன் கணபதி இயக்கியுள்ளார். ஆக.1-ம் தேதி வெளியாக இருக்கும் இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கவுதமன் கணபதி பேசும்போது, “ இந்தப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை. வேண்டும் என்றே வைக்கவில்லை என்று கூற முடியாது. தேவைப்படவில்லை. கதாநாயகனாக நடித்துள்ள தர்ஷனும் எனக்கு இது மாதிரி வேண்டும் என எதையுமே கேட்கவில்லை. இதில்பணியாற்றியுள்ள கேமராமேன், எடிட்டர், இசை என எல்லோருமே எனது குரு அறிவழகனிடமிருந்து வந்தவர்கள் தான். ஒரு டீமாக உழைத்துள்ளோம். படம் நேர்த்தியாக வந்துள்ளது’ என்றார். நடிகர் தர்ஷன் பேசும்போது, “ இயக்குநர் கவுதமன்…

Read More

காரைக்குடி: பழங்​குடி மக்​களை தாக்​கும் ‘சிக்​கிள் செல் அனீமி​யா’ என்ற அரிய நோய்க்கு குறைந்த செல​வில் மருந்து கண்​டு​பிடிக்கப்​பட்​டுள்​ள​தாக சிஎஸ்​ஐஆர் தலைமை இயக்​குநர் என்​.கலைச்​செல்வி கூறி​னார். மத்​திய அறி​வியல் மற்​றும் தொழிலக ஆய்வுக் குழு​மத்​தின் கீழ் (சிஎஸ்​ஐஆர்) காரைக்​குடி​யில் செயல்​பட்டு வரும் மத்​திய மின் வேதி​யியல் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் (செக்ரி) 78-வது ஆண்டு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற சிஎஸ்​ஐஆர் தலைமை இயக்​குநர் என்​.கலைச்​செல்​வி, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சத்​தீஸ்​கர், ஒடிசா, பிஹார், மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மாநிலங்​களில் பழங்​குடி மக்​களை ‘சிக்​கிள் செல் அனீமி​யா’ என்ற அரிய​வகை நோய் தாக்கு​கிறது. இதற்​கான மருந்து கண்​டு​பிடிக்​கும் ஆராய்ச்​சி​யில் சிஎஸ்​ஐஆர் கடந்த 8 ஆண்​டு​களாக ஈடு​பட்​டது. தற்​போது இந்​நோயைக் கண்​டறிந்​து, 20 நிமிடங்​களில் முடிவை அறிவிக்​கக்​கூடிய ‘பிசிஆர்’ தொழில்​நுட்​பத்​தைக் கண்டறிந்துள்ளோம். ஒரு சொட்டு ரத்​தம் மூலம் நோயைக் கண்​டறிய முடி​யும். இந்த கரு​வியை உரு​வாக்​கக்​கூடிய ‘ஸ்​டார்ட் அப்’ நிறு​வனங்களும் ஏற்​பட்​டுத்​தப்​பட்​டுள்​ளன. ஓரிரு மாதங்​களில்…

Read More

லான்செட் பொது சுகாதாரத்தில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வின்படி, புற்றுநோய், முதுமை, இதய நோய் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட முக்கிய சுகாதார நிலைமைகளின் அபாயத்தை வெகுவாகக் குறைக்க ஒரு நாளைக்கு 7,000 படிகள் நடப்பது போதுமானதாக இருக்கும். 10,000 படிகள் கோல்டன் எண் என்ற பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, ஆராய்ச்சியாளர்கள் இன்னும் அடையக்கூடிய இலக்கு இன்னும் சக்திவாய்ந்த சுகாதார நன்மைகளை வழங்குகிறது என்று கண்டறிந்தனர். பலருக்கு, இந்த வெளிப்பாடு தீவிரமான உடற்பயிற்சிகளையோ அல்லது ஜிம் உறுப்பினர்களையோ தேவையில்லாமல் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் மேம்படுத்த ஒரு ஊக்கமளிக்கும் மற்றும் யதார்த்தமான மாற்றாக இருக்கலாம்.ஏன் 7,000 படிகள் ஒரு விளையாட்டு மாற்றிஉடற்பயிற்சி கண்காணிப்பாளர்களால் பிரபலப்படுத்தப்பட்ட 10,000-படி இலக்கு 1960 களில் ஜப்பானிய சந்தைப்படுத்தல் பிரச்சாரத்திலிருந்து தோன்றியது. இருப்பினும், இது அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது அல்ல. சமீபத்திய உலகளாவிய பகுப்பாய்வு 160,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களிடமிருந்து தரவை மதிப்பாய்வு செய்தது மற்றும் தினமும் 7,000…

Read More

புதுடெல்லி: இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​ட பிரதமர் மோடியும். அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்​மரும் நிருபர்களுக்கு கூட்​டாக பேட்​டியளித்​தனர். அப்​போது கெய்ர் ஸ்டார்​மர் ஆங்​கிலத்​தி​லும், பிரதமர் நரேந்​திர மோடி இந்​தி​யிலும் பேசினர். பிரதமர் மோடி​யின் இந்தி உரையை ஒரு மொழி பெயர்ப்​பாளர் ஆங்​கிலத்​தில் மொழிபெயர்த்​தார். இதே​போல பிரதமர் கெய்ர் ஸ்டார்​மரின் ஆங்​கில உரையை மற்​றொரு மொழிபெயர்ப்​பாளர் இந்​தி​யில் மொழிபெயர்த்து கூறி​னார். தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் குறித்து ஸ்டார்​மர் பேசும்​போது இரு​நாடு​களுக்​கும் பெரு​மள​வில் முதலீடு​கள் குவி​யும் என்று குறிப்​பிட்​டார். அவரது ஆங்​கில உரையை மொழிபெயர்ப்​பாளர் இந்​தி​யில் மொழிபெயர்த்​த​போது பதற்​றத்​தில் தடு​மாறி​னார். இதை கவனித்து குறுக்​கிட்ட பிரதமர் நரேந்​திர மோடி, “கவலைப்​ப​டாதீர்​கள், நீங்​கள் சில நேரங்​களில் ஆங்​கில வார்த்​தைகளை தாராள​மாக பயன்​படுத்​தலாம்’’ என்​றார். பிரதமர் மோடி​யின் கனி​வால் நெகிழ்ந்த மொழிபெயர்ப்​பாளர், நன்றி கூறி​னார். பிரதமர் நரேந்​திர மோடி​யின் இந்​தி, ஆங்​கில புலமை​யால் இறுக்​கம் மறைந்து கலகலப்​பான சூழல் உரு​வானது. இந்த சுவாரசிய உரை​யாடல் வீடியோ…

Read More

புதுடெல்லி: இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வரும் செப்டம்பர் 4 முதல் 14 வரை உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 20 பேர் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீராங்கனைகளான லோவ்லினா போர்கோஹெய்ன், நிகத் ஜரீன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவில்லை. ஆடவர் அணி: ஜதுமணி சிங் மாண்டெங்பாம் (50 கிலோ), பவன் பர்ட்வால் (55 கிலோ), சச்சின் சிவாச் ஜூனியர் (60 கிலோ), அபினாஷ் ஜம்வால் (65 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), லக் ஷ்யா சாஹர் (80 கிலோ), ஜுக்னூ அஹ்லாவத் (85 கிலோ), ஹர்ஷ் சவுத்ரி (90 கிலோ), நரேந்தர் பெர்வால் (90+ கிலோ). மகளிர் அணி: மீனாட்சி ஹூடா (48 கிலோ), நிகத் ஜரீன் (51 கிலோ), சாக் ஷி…

Read More

Last Updated : 26 Jul, 2025 07:43 AM Published : 26 Jul 2025 07:43 AM Last Updated : 26 Jul 2025 07:43 AM தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ் நடித்து வரும் படம் ‘டக்கோயிட்: எ லவ் ஸ்டோரி’. இது தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. நாயகியாக மிருணாள் தாக்குர் நடிக்கிறார். அனுராக் காஷ்யப், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். ரொமான்டிக் ஆக் ஷன் படமான இதை ஷேனியல் டியோ இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. கடுமையான சண்டைக் காட்சியை படமாக்கி வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் ஆத்வி சேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதே காட்சியில் நடித்துக் கொண்டிருந்த மிருணாள் தாக்குருக்கும் சிறு காயம் ஏற்பட்டது. இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து ஆத்வி சேஷ் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தார். மருத்துவர்கள்…

Read More

புதுக்கோட்டை: ​தி​முக அரசு 4 ஆண்​டு​களாக மக்​களைப் பற்றி சிந்​திக்​காமல், தேர்​தல் வரு​வ​தால் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்டத்தை கொண்டு வந்​துள்​ளது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரத்தை மேற்​கொண்டு வரும் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, புதுக்​கோட்டை அண்ணா சிலை பகு​தி​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யின்​போது கரோனா பரவல், வறட்​சி, கஜா புயல் பாதிப்பு இருந்​த​போதும் விலை​வாசி கட்​டுக்​குள் இருந்​தது. ஆனால், திமுக ஆட்​சி​யில் விலை​வாசி பன்​மடங்கு உயர்ந்​து ​விட்​டது. மின் கட்​ட​ணம் 67 சதவீதம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இதனால் தமிழகத்​துக்கு வரவேண்​டிய தொழிற்​சாலைகள் அண்டை மாநிலங்​களுக்​குச் சென்​று​விட்​டன. மயி​லாடு​துறை​யில் நேர்மையாகப் பணிபுரிந்த டிஎஸ்பி சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளார். திருச்​சி​யில் டிஎஸ்பி மன உளைச்சலால் ராஜி​னாமா செய்​யப்​போவ​தாக கூறி​யுள்​ளார். காவல் துறை​யில் பணிபுரிவோருக்கே பாதுகாப்பு இல்லை எனும்போது, பொது​மக்​களின் நிலை என்ன? கடந்த 4 ஆண்​டு​களாக மக்​களைப் பற்றி சிந்​திக்​காமல், தேர்​தல்…

Read More

சாங்சோவ்: சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. சீனாவின் சாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் யூ சின் ஆங்க், யி தியோ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக், ஷிராக் ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் 16-21, 12-21 என்ற நேர் கணக்கில் தோல்வி அடைந்தார். ஜூனியர் கால்பந்தில் மேகாலயாவை வீழ்த்தியது தமிழகம்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் டாக்டர் பி.சி.ராய் கோப்பைக்கான ஆடவர் ஜூனியர் தேசிய…

Read More