புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது மேற்கு மத்திய ரயில்வேயில் குரூப் டி பிரிவில் வேலை வழங்குவதற்கு பிஹாரில் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லாலுவுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், விசாரணை நீதிமன்றம் வழக்கை விசாரிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் லாலு பிரசாத் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த ஜூலை 18-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை…
Author: admin
இந்தியா தொடரைச் சமன் செய்வதற்கும் இங்கிலாந்து தொடரை 3-1 என்று கைப்பற்றுவதற்குமான 5வது டெஸ்ட் போட்டி நாளை ஓவலில் தொடங்குகிறது. இத்தகைய முக்கியமானதொரு போட்டியில் இந்திய அணியின் முன்னணிப் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பதிலாக ஆகாஷ் தீப் அணிக்குள் வருகிறார். நீண்ட கால உடல்தகுதியை முன்னிட்டு பும்ராவின் முதுகைக் காயங்களிலிருந்து காக்கவும் இந்த முடிவு எடுக்கபப்ட்டதாக மருத்துவக் குழுவினர் பும்ராவிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு ஆச்சரியமில்லை என்றாலும் ஒரு முக்கியமான போட்டியில் அதுவும் இங்கிலாந்து பேசியப் பேச்சிற்கும் கடந்த போட்டியில் கடைசியில் ஜடேஜா, சுந்தரை அவமானப்படுத்தும் விதமாக ஹாரி புரூக்கை விட்டு பந்து வீசச் செய்ததற்கும் பழிதீர்க்கும் போட்டியில், தொடரை டிரா செய்ய வேண்டிய வெற்றியை நோக்கியப் போட்டியில், பும்ராவை உட்கார வைப்பது உண்மையில் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. எட்ஜ்பாஸ்டனில் பும்ரா இல்லாமல் வெற்றி பெற்றதையடுத்து அவரை…
சிவகங்கை: “அதிமுக ஆட்சியில் தான் முதன் முதலாக கீழடி அகழாய்வுப் பணிகள் தொடங்கின. அதிமுக ஆட்சியில் தான் கீழடியில் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசுக்கு தெளிவாக விளக்கமளித்து கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சிவகங்கையில் உள்ள கீழடி அகழ் வைப்பகத்தை எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் தான் முதன் முதலாக கீழடி அகழாய்வு பணிகள் தொடங்கின. முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை கடந்த 2015 முதல் 2017 வரை மத்திய அரசு நடத்தியது. நான்காம் கட்ட அகழாய்வை மத்திய தொல்லியில் துறை அனுமதி பெற்று 2018-ல் அதிமுக அரசு மேற்கொண்டது. கடந்த 2019-ல் 5-ம் கட்ட அகழாய்வு நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் தான் கீழடியில் 5 கட்ட அகழாய்வு பணிகள்…
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் முக்கிய உறுப்புகளை அமைதியாக சேதப்படுத்தும் மற்றும் ஆரம்பத்தில் தீர்க்கப்படாவிட்டால் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, புறக்கணிக்கக் கூடாத எச்சரிக்கை அறிகுறிகளைக் காட்ட உடல் தொடங்குகிறது. இன்சுலின் பற்றாக்குறை, இன்சுலின் எதிர்ப்பு அல்லது இரண்டும் காரணமாக குளுக்கோஸ் சரியாக செயலாக்கப்படவில்லை என்பதை இந்த அறிகுறிகள் உடலின் சமிக்ஞை வழி. இந்த அறிகுறிகளை அங்கீகரிப்பது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும், இதய நோய், சிறுநீரக சேதம் மற்றும் பார்வை பிரச்சினைகள் போன்ற சிக்கல்களைத் தவிர்க்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தவும் உதவும்.உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடும் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்1. அதிகரித்த தாகம் உயர் இரத்த சர்க்கரையிலிருந்து நீரிழப்பின் முக்கிய சமிக்ஞையாகும்கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று அதிகப்படியான தாகம், இது பாலிடிப்சியா என்றும் அழைக்கப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவு உயர்த்தப்படும்போது,…
புதுடெல்லி: மக்களவையில் நேற்று முன்தினம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க பெரும்பாலும் எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இது பிரதமர் நரேந்திர மோடியின் பெருந்தன்மை ஆகும். எதிர்க்கட்சிகளின் மீது அவர் முழுநம்பிக்கை வைத்தார். முதலில் நாடு, அதன்பிறகு மாநிலம், அதற்கு அடுத்து கட்சி, அதன்பிறகே குடும்பம். எந்தவொரு சூழலிலும் நாட்டின் நலனுக்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இக்கட்டான நேரங்களில் கட்சி, கொள்கை வேறுபாடுகளை மறந்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஓரணியாக செயல்பட வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் நாட்டின் நலன் சார்ந்த கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு சுப்ரியா சுலே பேசினார்.
மதுரை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் சர்வதேச சூட்டிங் பால் போட்டியில் தங்கம், வெண்கல பதக்கம் பெற்ற வீராங்கணைக்கு 900 மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த சிவகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: என் மகள் ஹரினி சூட்டிங் பால் விளையாட்டு வீராங்கணை. கடந்த பிப்ரவரி மாதம் நேபாளத்தில் நடைபெற்ற ஆசிய சூட்டிங் பால் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். கடந்தாண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற முதல் உலக கோப்பை சூட்டிங் பால் சேம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். ஹரினி கடந்த மே மாதம் பிளஸ்-2 முடித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றார். விளையாட்டு பிரிவில் எம்பிபிஎஸ் சீட்டுக்கு விண்ணப்பித்தார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றால் 500 மதிப்பெண், வெள்ளி பதக்கம் வென்றால் 450 மதிப்பெண்,…
டாம் குரூஸ் ஹாலிவுட் ராயல்டியாக இருக்கலாம், ஆனால் ஒரு புதிய ராணி அமைதியாக பாணி கவனத்தை திருடுவது போல் தெரிகிறது, கியூபன்-ஸ்பானிஷ் நடிகை அனா டி அர்மாஸ் தவிர வேறு யாரும் இல்லை. குரூஸுடன் காதல் கொண்டதாக நீண்ட வதந்தி பரவியது, இருவரும் சமீபத்திய வெர்மான்ட் வெளியேறும்போது சலசலப்பை உறுதிப்படுத்தினர். தலைப்புச் செய்திகள் காதல் கத்தும்போது, பேஷன் இன்சைடர்கள் வேறொன்றால் மிகவும் ஆர்வமாக உள்ளனர்: அனாவின் சாத்தியமற்ற புதுப்பாணியான, குறைந்த முக்கிய பாணி.இது வெர்மான்ட்டில் அமைதியான பிற்பகல், ஆனால் பேஷன் தருணத்தைப் பற்றி அமைதியாக எதுவும் இல்லை. 63 வயதான குரூஸ், ஒரு நேர்த்தியான ஆல் -நேவி தோற்றத்தில் வெளியேறினார் – பொருத்தப்பட்ட டீ, ஸ்லாக்ஸ், பேஸ்பால் தொப்பி, வெள்ளை ஸ்னீக்கர்கள் மற்றும் அந்த கையொப்பம் சிறந்த துப்பாக்கி ஏவியேட்டர்கள். ஒரு உன்னதமான டாம் குரூஸ் நடவடிக்கை. ஆனால் 37 வயதான அனா டி அர்மாஸ், உண்மையான முக்கிய கதாபாத்திர ஆற்றலைச்…
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அவர் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடி கூறிவிட்டால் அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட, வர்த்தக வாய்ப்புகளை முன்வைத்து அமெரிக்கா நடத்திய பேச்சவார்த்தையே காரணம் என 20 முறைக்கும் மேலாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இதனை இதுவரை ஏற்கவில்லை. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் நேற்று விளக்கம் அளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்துமாறு உலகின் எந்த ஒரு தலைவரும் கூறவில்லை. மே 9-ம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தொலைபேசியில் என்னை தொடர்பு கொள்ள முயன்றார். ஒரு மணி நேரம் அவர் முயன்றார். அப்போது நான் நமது ராணுவத்துடன் ஆலோசனை…
கமல் குறித்து பேசியது வைரலானதைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி 6’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் பேசும் போது கமலை காதலித்து வந்ததாகவும், அதை அவரிடம் சொல்ல முயன்ற போது நீங்கள் தங்கை மாதிரி என்று சொல்லி அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டார். இதை வைத்து பலரும் செய்திகள் வெளியிட்டார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்தப் பேச்சு வைரலாக பரவியது. இந்தப் பேச்சு தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில், “நான் 16ஆம் வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18ஆம் வயதில் திருமணம் செய்தேன். 42-வது வயதுவரை எனக்கு சினிமா உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. மற்ற பலர்போலவே, நான் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாகவும், குழந்தைபோன்ற ஆச்சரியத்துடனும் பார்த்தவள்தான். 45-வது வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே star-struck ஆகிவிட்டேன். அவர் என்னைப் பார்த்து, “என் சகோதரி…
கடலூர்: கடலூர் மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குப்பை சேகரிக்கும் பேட்டரி வண்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் வாக்காளர் அட்டைகள் கிடந்தன. இவற்றை வருவாய் துறை அதிகாரி கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மஞ்சக்குப்பம் பில்லு கடை தெருவில் உள்ள கடலூர் மாநகராட்சி பிரிவு அலுவலகம் 3 ல் (மாநகராட்சி பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வருகை பதிவேடு எடுக்கும் இடம்) வாயிலில் குப்பை எடுக்கும் மூன்று சக்கர பேட்டரி வண்டி நேற்று (ஜூலை.29) மாலை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (ஜூலை.30) காலை ஓட்டுநர் துப்புரவு பணியாளர் காமாட்சி (38) குப்பை சேகரிக்கும் வண்டியை எடுத்துள்ளார். அப்போது வண்டியில் ஒயர்கள் அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் வண்டியில் குப்பை போடும் இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் 48, தேர்தல் வாக்கு பதிவின் போது வைக்கப்படும் மை, மற்றும் தேர்தல் பணிக்கு செல்பவர்கள் அணியும்…
