வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்துக்கு ‘நீலி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 2400 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தை உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கிறார். இதில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய எம்எஸ்எஸ் இயக்குகிறார். அவர் கூறும்போது, “அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். இது வரலாற்றுப் பின்னணியில் உருவாக இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. நீலி சம்பந்தமான நிறைய வரலாற்று விஷயங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு கொஞ்சம் கற்பனை கலந்து இக்கதையை உருவாக்கி இருக்கிறோம். இதன் கதையைக் கேட்டதுமே பிடித்துப்போய் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார், நட்டி. 2 முக்கிய நாயகிகள் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிப்போம்” என்றார்.
Author: admin
சென்னை: உச்ச நீதிமன்ற ஆணையின்படி, வரும் ஆகஸ்ட் மாதத்துக்கான 45.95 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 42-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் 30-ம் தேதி (நேற்று) நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தமிழக உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறையின் செயலர் ஜெ.ஜெயகாந்தன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது அவர் தற்போது மேட்டூர் அணையின் நீர்இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.470 டி.எம்.சி ஆக இருப்பதையும், கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து அதிகமான உபரிநீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 12,555 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது…
புரோட்டீன் பவுடர் (மோர், கேசீன், சோயா, பட்டாணி போன்றவை) இது போல் தோன்றுகிறது – ஒரு தூள், பெரும்பாலும் செறிவூட்டப்பட்ட புரத வடிவம், பொதுவாக பால் (மோர் மற்றும் கேசீன்), சோயா, முட்டை அல்லது தாவரங்களிலிருந்து. உங்கள் உடல் இந்த புரதத்தை அமினோ அமிலங்களாக உடைக்கிறது, பின்னர் அவை திசுக்களை உருவாக்கவும் சரிசெய்யவும், ஹார்மோன்களை உருவாக்கவும், முக்கிய செயல்பாடுகளைச் செய்யவும் பயன்படுகின்றன.
பெங்களூரு: அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 30 வயது பெண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் அல்காய்தா தீவிரவாத அமைப்பின் சித்தாந்ததை விதைக்கும் நோக்கில் முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டிவிட்டு இந்திய அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதாக குஜராத் தீவிரவாத ஒழிப்பு படைக்கு மின் அஞ்சல் வந்தது. இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த வாரத்தில் அகமதாபாத்தை சேர்ந்த ஃபர்தீன் ஷேக் (24) உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர். இந்த நால்வரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் நாட்டில் அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வேறு சிலரின் பெயர்களும் கிடைத்தன. அதன் அடிப்படையில் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் பெங்களூருவை சேர்ந்த சாமா பர்வீன் (30) என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர் அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாமா பர்வீன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
டாப் ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பான் இந்தியா முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாவதால் ‘ஹீரோ – வில்லன்’ இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. ஒரு மொழியில் நடிக்கும் ஹீரோ மற்ற மொழியில் வில்லனாக நடிப்பதை, இப்போது விரும்பி ஏற்கின்றனர். ஹீரோவுக்கு இணையான, வலுவான வில்லன் என்று இயக்குநர்கள் தேடத் தொடங்குவதும் இதற்குக் காரணம்! பெரும் பட்ஜெட்டில் உருவாகும் ‘மல்டி ஸ்டார்’ படங்களுக்கு அது தேவையாகவும் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் இமேஜ் பற்றி கவலைப்பட்ட ஹீரோக்கள், இப்போது அதைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு நெகட்டிவ் கதாபாத்திரங்களைத் தாராளமாக ஏற்கத் தொடங்கிவிட்டனர். இது புதிதில்லை என்றாலும் இப்போது அந்த நடைமுறை அதிகரித்து வருகிறது. ‘பாகுபலி’க்கு பிறகுதான் இந்தப் போக்கு அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். அதுவரை ஹீரோவாக நடித்து வந்த ராணா அதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் என்பதால் பேசப்பட்டது. விக்ரம் படத்தில் சூர்யா, ரோலக்ஸ் என்ற சிறிய…
மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான வழக்கில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்கள் என பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றுமாறு நீதிபதி இளந்திரையன் ஜன.27-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டமேல்முறையீட்டு மனுவை நீதிபதி நிஷாபானு அமர்வு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், இந்த உத்தரவில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு அளிக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்து, வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், சவுந்தர், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “இந்த வழக்கில் இணைய விரும்பும்…
முட்டைகள் எப்போதுமே ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகின்றன, ஆனால் அவற்றில் அதிகப்படியான கொழுப்பில் (மஞ்சள் கரு வழியாக) அதிக ஆபத்து உள்ள நபர்களை அவர்களிடமிருந்து (இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் போன்றவை) விலக்கி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போது ஒரு ஆய்வு கூறுகையில், மிதமான முட்டைகளை (2 அல்லது அதற்கு மேற்பட்ட) வாரந்தோறும் அல்சைமர் டிமென்ஷியாவை வளர்ப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது என்று கூறுகிறது. பார்ப்போம் …ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஆய்வில், முட்டைகளை தவறாமல் சாப்பிட்ட வயதான பெரியவர்கள், அல்சைமர் டிமென்ஷியாவை உருவாக்க 47% குறைவான வாய்ப்பைக் கொண்டுள்ளனர் என்பதை நிரூபித்தனர். இந்த அடிப்படை உணவுத் தகவல்கள் மூளை ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான ஒரு சிறந்த முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளன, அத்துடன் இந்த அழிவுகரமான நரம்பியக்கடத்தல் நிலையின் தொடக்கத்தை தாமதப்படுத்துகின்றன.ஆய்வு என்ன சொல்கிறதுடிமென்ஷியாவை உருவாக்குவதற்கு முன்பு, சராசரியாக 81.4 வயதுடைய 1,000 வயதான பெரியவர்களை ஆராய்ச்சி ஆய்வு கண்காணித்தது. ஆராய்ச்சி பங்கேற்பாளர்கள்…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் (23). கடந்த 23-ம் தேதி பெங்களூருவில் இருந்து சித்ரதுர்கா திரும்பும்போது கார் விபத்தில் சிக்கிய அவர் தாவணகெரேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையின் போது அவருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே மல்லிகார்ஜுனின் உடல்நிலை சீராகாததால் அவரை உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர். இதனால் மல்லிகார்ஜுனின் தந்தை நாகராஜப்பா, தனது மகள் நிஷா (25) மற்றும் அவரது கணவர் மஞ்சுநாத்திடம் பெங்களூரு கொண்டு செல்லுமாறு கூறினார். இதையடுத்து நிஷாவும் மஞ்சுநாத்தும் மல்லிகார்ஜுனை கார் மூலம் பெங்களூரு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் பெங்களூரு செல்லும் வழியிலே இறந்து விட்டதாக உடலை ஜூலை 26-ம் தேதி ஊருக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் மல்லிகார்ஜுனின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அவரது தந்தை நாகராஜப்பா ஹொலேகெரே போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்திய போது,…
லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி போட்டிக்கான ஆடுகளத்தை நேற்று முன்தினம் இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பார்வையிட சென்றார். அப்போது ஆடுகள வடிவமைப்பாளரான லீ ஃபோர்டிஸ், கவுதம் கம்பீரிடம் 2.3 மீட்டர் விலகி நின்று ஆடுகளத்தை பார்வையிடுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கவுதம் கம்பீர், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று என்பதை நீங்கள் சொல்லக்கூடாது. அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள் வெறும் ஒரு மைதான ஆடுகள் வடிவமைப்பாளர். அதற்கு மேல் எதுவும் இல்லை” என்று பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “லீ ஃபோர்டிஸ் நடந்துகொண்ட விதம் தேவை இல்லாதது. இதற்கு முன்னர் எங்களுக்கு இப்படி நடந்தது இல்லை. குறைவான ஸ்பைக்குள் கொண்ட ஷு அல்லது…
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை கடந்த 25-ம் தேதி நடப்பாண்டில் 4-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,10,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 40,500 கனஅடி யாக குறைந்தது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.10 லட்சம் கனஅடியிலிருந்து நேற்று இரவு 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 120 அடியாக இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1.25 லட்சம் கனஅடியாக பதிவான நீர்வரத்து நேற்று மாலை 57 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
