பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது மனநிலை மாற்றங்களை அனுபவிக்கும் சமூக ஊடகங்கள் முழுவதும் ஒரு போக்கு உள்ளது. அது முற்றிலும் உண்மையாக இருக்கும்போது, மற்ற பாலினத்தையும் முற்றிலுமாக கவனிக்க முடியாது. எரிச்சல், ஆர்வத்துடன் அல்லது மனச்சோர்வடைந்ததாக உணருவது ஆண்களுக்கும் ஏற்படக்கூடும், ஏனெனில் அவர்களின் உடல்கள் எதிர்கொள்ளக்கூடிய ஹார்மோன் ஏற்றத்தாழ்வு. குறைந்த அளவிலான டெஸ்டோஸ்டிரோன் அல்லது தைராய்டு ஹார்மோன்கள் உள்ள சிக்கல்கள் மூளையில் நரம்பியக்கடத்தி செயல்பாட்டை சீர்குலைக்கும், மனநிலை, உந்துதல் மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மையை பாதிக்கும். மன அழுத்த ஹார்மோனின் அதிகப்படியான வெளியீடு, கார்டிசோல், மனநிலையையும் சீர்குலைக்கும்.
Author: admin
சென்னை: மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். ‘மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, எனக்கு துரோகம் செய்துவிட்டார்’ என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருந்தார். இதையொட்டி, மக்களிடம் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக மல்லை சத்யா அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை சிவா னந்தா சாலையில் தனது ஆதரவாளர்களுடன் மல்லை சத்யா நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வைகோ வழியில் ஏராளமான போராட்டத்தில் பங்கேற்று, 32 வழக்குகளைப் பெற்றிருக்கி றேன். துரை வைகோ அரசியலுக்கு வந்தது முதல், வைகோவுக்கு நெருக்கமானவர்கள் ஓரங்கட்டப்படுவதும், அலட்சியப்படுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்தது. துரை சொன்னால் மட்டுமே பேச முடியும் என்ற நிலைக்கு வைகோ தள்ளப்பட்டார். உட்கட்சி ஜனநாய கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு நிற்கிறோம். ‘வைகோவின் கடைசி காலம்’ என துரை அடிக்கடி சொல்லி, அவரது…
சென்னை: தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசி வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தீர்க்கப்படாத தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பிரச்சினையில், திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழக முதல் வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு 2022 செப்.8-ம் தேதி மத்திய வர்த்தகத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசின் தொடர் அழுத்தத்தால் மத்திய அரசு 2023 ஜூன் 29-ம் தேதி ரூ.20-க்கும் குறைவான லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதித்தது. இருப்பினும், மற்ற நாடுகளில் இருந்து லைட்டர்கள், உதிரிபாகங்களாக, இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டு, லைட்டர்களாக பொருத்தப்பட்டு மீண்டும் விற்பனை செய்யப்பட்டன. இதுகுறித்து மீண்டும் மத்திய அமைச்சர்களிடம் எடுத்துரைக்கப்பட்டு கடந்தாண்டு அக். 13-ம் தேதி இறக்குமதிக்கு கட்டுப் பாடு விதிக்கப்பட்டது. ரஷ்யா, உக்ரைன் போர், அமெரிக்கா பொருளாதார கட்டுபாடு காரணமாக…
சென்னை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் மாநாடு நடத்துவதற்கு பதிலாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். அதிமுகவை கைப்பற்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய சட்டப் போராட்டம் தொய்வடைந்து வரும் நிலையில், நம்பியிருந்த பாஜகவும் அவரை கைவிட்டது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனிடையே முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்தார். அண்மையில் சென்னை வேப்பேரியில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், செப்.4-ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப் போவதாக பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். தற்போது பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், மாநாடு நடத்தும் திட்டத்தை பன்னீர்செல்வம் கைவி்ட்டுவிட்டதாக தகவல் வெளி யாகியுள்ளது. இதுதொடர்பாக அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: ஓ.பன்னீர் செல்வம், மாவட்டம் அல்லது மண்டல வாரியாகச் சென்று மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாடு நடத்தும் திட்டம் இல்லை. இதில் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி விதிகளை பழனிசாமி…
சென்னை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இந்த முகாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முகாமில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவ பிரிவுகளை பார்வையிட்டார். பயனாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடினார். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகள், அடையாள அட்டைகளையும் வழங்கினார். இந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு, கோட்டைக்கு வெளியே நான் கலந்து கொண்டு பேசும் முதல் நிகழ்ச்சி இதுதான். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அமைச்சர்கள் இந்த முகாமை தொடங்கி…
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் `சிங்கா 60′ கலைத் திருவிழாவில் இடம்பெற்ற, சிங்கப்பூர் நாடகக் குழுவின் ‘முச்சந்தி’ நாடகம், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக, கலாச்சாரத்தில் ஏற்படும் சிக்கல்களை வெளிப்படுத்தியது. அண்டை நாடான சிங்கப்பூர், 60-வது தேசிய தினத்தை விரைவில் கொண்டாட உள்ளது. இந்நிலையில் ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ ஆகியவை இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற பிரம்மாண்ட கலைத் திருவிழாவை 10 நாட்கள் நடத்துகின்றன. ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக ராஜா அண்ணாமலைபுரம் ராஜரத்தினம் கலையரங்கில், சிங்கப்பூரைச் சேர்ந்த அகம் தியேட்டர் லேப் நாடகக் குழுவின் ‘முச்சந்தி’ நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியை பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். `இந்து தமிழ் திசை’ இயக்குநர் அகிலா விஜய் ஐயங்கார், உத்ரா பாம்பே ஞானம், தாரணி கோமல் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். இதில் உன்னி…
ஒரு ஆப்டிகல் மாயை பார்வையாளர்களுக்கு ஒரு பனி, மரம் நிரப்பப்பட்ட காட்சிக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு புத்திசாலித்தனமாக உருமறைப்பு நாயைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. கலைஞர் திறமையாக நாயை சுற்றுப்புறங்களில் கலக்கிறார், கவனம் மற்றும் உணர்வை சோதிக்கிறார். நீங்கள் நாயை 15 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடிந்தால், விவரம் மற்றும் வலுவான முறை அங்கீகார திறன்களில் நீங்கள் சிறந்த கவனம் செலுத்தலாம். உங்களுக்கு கழுகு-கூர்மையான பார்வை இருப்பதாக நினைக்கிறீர்களா? மனதை வளைக்கும் ஆப்டிகல் மாயை மூலம் அதை நிரூபிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது, இது மக்களை இருமுறை எடுக்கும்!இந்த தந்திரமான படத்தில், விரிவான பின்னணியில் புத்திசாலித்தனமாக ஒரு மறைக்கப்பட்ட நாய் புத்திசாலித்தனமாக உள்ளது. முதல் பார்வையில், இது ஒரு சாதாரண பொருள்கள் அல்லது இயற்கைக்காட்சிகளைப் போலத் தோன்றலாம், ஆனால் நீங்கள் சற்று நெருக்கமாகப் பார்த்தால், ஏதோ புத்திசாலித்தனமாக வெற்றுப் பார்வையில் மறைந்திருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இந்த காட்சியில் மரங்களால் முழுமையாகச் சூழப்பட்டு பனியால்…
பெங்களூரு: வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மஜத கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் புகார் எழுந்தது. பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களும் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்திய நிலையில், பிரஜ்வல், ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இந்த நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து பெண் தலைவர் உள்ளிட்ட 5 பெண்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில், அவர் மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.…
சென்னை: அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர, மாநில அடைவுஆய்வு மற்றும் அடிப்படை கற்றல்நிலை மதிப்பீடுகளின் அடிப்படையில், கற்றல் இடைவெளியை குறைத்து, ஒவ்வொரு குழந்தையும் தமிழ், ஆங்கிலம் வாசித்தல்திறன், அடிப்படை கணித திறன்களை முழுமையாக கற்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்துவதில், கண்காணிப்பு அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியம். பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகளை அவர்கள் ஆய்வு செய்யும்போது வகுப்பறை நடைமுறைகள், மாணவர்களின் வேலை புத்தகம் பயன்படுத்தப்படும் விதம்,…
வாராணசி: சிவபக்தி மற்றும் சைவ மரபின் மூலம், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற முழக்கத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தவர் ராஜேந்திர சோழன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினேன். மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் சைவ மரபின் பழங்கால மையம் ஆகும். வட இந்தியாவில் இருந்து கங்கை நீரை பெற்று, வடக்கையும், தெற்கையும் அவர் இணைத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவபக்தி மற்றும் சைவ மரபின் மூலம் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற முழக்கத்தை ராஜேந்திர சோழன் அறிவித்தார். இன்று, காசி – தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அதே…
