Author: admin

சென்னையின் புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்குக் கணக்கு (உதயா) என்கிற விசாரணைக் கைதியை, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். அவரைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் போலீஸ் ‘எஸ்கார்ட்’களில் ஒருவராக உடன் பயணிக்கிறார் வேந்தன் (அஜ்மல்). ஆனால், சேலத்தைச் சென்றடையும் வழி நெடுக, கணக்கைக் கொலை செய்ய ஒரு கூலிப்படை சளைக்காமல் துரத்தி வந்து தாக்குகிறது. இன்னொரு பக்கம், போலி என்கவுன்டர் மூலம் கணக்கின் கதையை முடிக்கச் சில போலீஸ் அதிகாரிகள் திட்டமிடுகிறார்கள். போட்டிப் போட்டு இவர்கள் ஏன் கணக்கைக் கொல்ல நினைக்கிறார்கள்? ‘எஸ்கார்ட்’ மாறனால் கணக்கைக் காப்பாற்ற முடிந்ததா என்பது கதை. ஒரு கொலை விசாரணைக் கைதியின் கடந்த காலத்தை, துண்டாடப் பட்ட பிளாஷ் – பேக்குகள் வழியாகச் சொல்லும் திரைக்கதை உத்தி ஈர்க்கிறது. கணக்கின் காதல் வாழ்க்கையைச் சிறிது சிறிதாகத் தெரிந்துகொண்டு, அவனைப் பாதுகாக்கத் தொடங்கும் வேந்தனுக்கும் கணக்குக்கும் இடையில் அன்பும் அக்கறையும் பூக்கும் தருணங்களை நன்றாகவே சித்தரித்திருக்கிறார்கள். பேருந்துக்குள்…

Read More

பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டும் பாஜக தரப்பில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்த சூட்டோடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், அதிமுக உள் விவகாரங்களை நன்கு அறிந்த பெங்களூரு புகழேந்தியிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். அதிமுக ஒருங்கிணைப்புக் குழு இன்னமும் செயல்படுகிறதா? அதிமுக-வை ஒருங்கிணைக்க நாங்கள் சில முயற்சிகளை எடுத்தோம். ஆனால், அதிமுக-வில் முக்கிய பொறுப்புகளில் இருந்த எங்களை, “தெருவில் செல்வோருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என, இபிஎஸ் அவமானப்படுத்தினார். தன்னை உலக மகா தலைவராக நினைக்கும் இபிஎஸ், அதிமுக ஒன்றுபடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். “நிபந்தனை இன்றி, அதிமுக-வில் இணையத் தயார்” என்று ஓபிஎஸ் தெரிவித்தும், இபிஎஸ் பிடிவாதமாக இருக்கக் காரணம், ஓபிஎஸ் கட்சியைக் கைப்பற்றிவிடுவார் என்ற பயமா? கட்சியை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு,…

Read More

புதுடெல்லி: ‘‘வேளாண் சட்​டங்​கள் தொடர்​பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்​டிய​தாக ராகுல் காந்தி கூறு​வது தரமற்ற சிந்​தனை’’ என்று ரோஹன் ஜெட்லி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். காங்​கிரஸ் சார்​பில் சட்​டப் பிரிவு ஆண்டு மாநாடு சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி பேசி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: புதிய வேளாண் சட்​டங்​களை மத்​திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமை​யாக எதிர்த்​தேன். அப்​போது நடந்த சம்​பவம் எனக்கு இப்​போதும் நினை​வில் இருக்​கிறது. அப்​போது மத்​திய நிதி அமைச்​ச​ராக இருந்த அருண் ஜெட்லி என்னை மிரட்​டி​னார். வேளாண் சட்​டங்​களை தொடர்ந்து எதிர்த்​தாலோ, மத்​திய அரசை எதிர்த்து பேசி​னாலோ, என் மீது நடவடிக்கை எடுப்​போம் என்று அருண் ஜெட்லி மிரட்​டி​னார். அதற்​கு, ‘‘நீங்​கள் யாரிடம் பேசுகிறீர்​கள் என்று உங்​களுக்கு தெரிய​வில்​லை. நாங்​கள் காங்​கிரஸ்​காரர்​கள். கோழைகள் அல்ல. நாங்​கள் வளைந்து கொடுக்க மாட்​டோம்.…

Read More

காதல் திருமணம் செய்துகொள்ளும் கார்த்தியும் (தர்ஷன்) அனுவும் (அர்ஷா சாந்தினி) சென்னை வேளச்சேரியில் பழைய அடுக்குமாடி வீட்டை வாங்கி குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதேபோல ரமேஷ் (காளி வெங்கட்), விஜி (வினோதினி) வீட்டிலும் நடக்கின்றன. பின்னர் நடக்கும் ட்விஸ்ட்டுகளில் இந்த 2 குடும்பமும் ஒரே அடுக்குமாடி வீட்டில்தான் வசிக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. ஆனால், கார்த்தியும் அனுவும் ரமேஷும் விஜியும் வெவ்வேறு டைம் லைனில் வசிக்கிறார்கள். இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் பிரச்சினைகள் எழுகின்றன. இதை எப்படித் தீர்த்துக் கொள்கிறார்கள் என்பதுதான் கதை. வித்தியாசமான கதைக் களத்தைக் கையில் எடுத்து, அதைத் திகிலாகவும் நகைச்சுவையாகவும் கொஞ்சம் எமோஷனல் கலந்தும் இயக்கியிருக்கிறார், இயக்குநர் ராஜ்வேல். முதலில் ஒரு பேய்க் கதை போலவே நகர்ந்து செல்லும் திரைக்கதையில் இது பேய்க் கதை அல்ல என்பது தெரிய வருகிறபோது சுவாரஸியம் பற்றிக் கொள்கிறது. வெவ்வேறு காலகட்டத்தில் அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும்…

Read More

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள மின்​சார கார் தொழிற்​சாலை திறப்பு விழா மற்​றும் மினி முதலீட்​டாளர் மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நாளை (ஆக.4) தூத்​துக்​குடி வரு​கிறார். வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்ஃ​பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் கோடி​யில், ஆண்​டுக்கு 1.50 லட்​சம் வாக​னங்​களை உற்​பத்தி செய்​யும் வகை​யில் தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டது. இந்த ஆலைக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த ஆண்டு அடிக்​கல் நாட்​டி​னார். முதல்​கட்​ட​மாக ரூ.1,119.67 கோடி​யில் 114 ஏக்​கரில் தொழிற்​சாலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 2 பணிமனை​கள், 2 கிடங்​கு​கள், கார் பரிசோதனை செய்​யும் இடம் உள்​ளிட்​டவை அமைக்​கப்​பட்​டுள்​ளன. முதல்​கட்ட கார் உற்​பத்​திக்​கான பணி​கள் நிறைவடைந்த நிலை​யில் வி.எப்​-6, வி.எப்-7 வகை கார்​கள் இங்கு உற்​பத்தி செய்​யப்​பட்​டு, விற்​பனைக்கு தயார் செய்​யப்​பட்​டுள்​ளன. வின்ஃ​பாஸ்ட் மின்​சார கார் தொழிற்​சாலை திறப்பு விழா நாளை (ஆக.4) நடை​பெறுகிறது. விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக முதல்​வர்…

Read More

சென்னை: பிரபல நடிகர் மதன்​பாப் (71) உடல் நலக்​குறை​வால் சென்​னை​யில் நேற்று மாலை கால​மா​னார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்​னையை சேர்ந்த மதன்​பாப்​பின் இயற்​பெயர் கிருஷ்ண​மூர்த்​தி. இசைக் குடும்​பத்​தைச் சேர்ந்த இவர் சினி​மாவுக்கு வரு​வதற்கு முன் இசைக் கலைஞ​ராக இருந்​தார். தனது சகோ​தரர் பத்​ம​நாபன் என்ற பாபுவுடன் இணைந்து ‘மதன் – பாபு’ என்ற பெயரில் இசைக்​குழுவை நடத்தி வந்​தார். இதனால் மதன் பாபு என்று அவரை அழைத்​தனர். அதுவே பின்​னர் மதன்​பாப் ஆனது. ‘நீங்​கள் கேட்​ட​வை’ படத்​தில் சிறிய வேடத்​தில் நடித்த அவர், ‘வானமே எல்​லை’ படம் மூலம் அறியபட்​டார். தொடர்ந்​து, தேவர் மகன், மகளிர் மட்​டும், பூவே உனக்​காக, கண்​ணுக்​குள் நில​வு, தெனாலி, பிரண்ட்​ஸ், சந்​திர​முகி, கிரி உட்பட 100-க்​கும் மேற்​பட்ட படங்​களில் நகைச்​சுவை மற்​றும் குணசித்​திர வேடங்​களில் நடித்​துள்​ளார். இந்​தி, மலை​யாளப் படங்​களி​லும் நடித்​திருக்​கிறார். எப்​போதும் சிரித்​துக் கொண்​டிருப்​பது இவருடைய தனித்த அடை​யாள​மாகும். சன்…

Read More

ஒரு சமீபத்திய ஆய்வில் காற்று மாசுபாட்டிற்கு நீண்டகால வெளிப்பாடு மற்றும் அல்சைமர் மற்றும் வாஸ்குலர் டிமென்ஷியா உள்ளிட்ட டிமென்ஷியாவின் அதிக ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வெளிப்படுத்துகிறது. பி.எம். இந்த அமைதியான அச்சுறுத்தல் நம்மைச் சுற்றி உள்ளது. இது கண்ணுக்கு தெரியாதது அல்ல, ஆனால் இன்னும் கவனிக்கப்படவில்லை. அது ஏற்படுத்தும் அழிவு? மூளை சேதம். நம்மைச் சுற்றி ரகசியமாக பதுங்கியிருக்கும் ஒரு பொதுவான உடல்நல அச்சுறுத்தலைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். இந்த அபாயத்திற்கு நீண்ட காலமாக வெளிப்பாடு அல்சைமர் நோய் மற்றும் வாஸ்குலர் டிமென்ஷியா உள்ளிட்ட டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிவித்துள்ளது, இது முன்னர் வாழ்க்கை முறை மற்றும் மரபியலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (எம்.ஆர்.சி) தொற்றுநோயியல் பிரிவின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு ஆய்வில், வெளிப்புற காற்று மாசுபாட்டிற்கு நீண்டகாலமாக வெளிப்படுவது முதுமை அபாயத்தை அதிகரிக்கும் என்று…

Read More

சென்னை: நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம் இன்று தொடங்​குவதாகவும் பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் என்றும் அரசு செயலர்​கள் ஜெ.​ரா​தாகிருஷ்ணன், ப.செந்​தில்​கு​மார் தெரி​வித்​தனர். நலம் காக்​கும் ஸ்டா​லின் என்ற புதிய திட்டத்தை இன்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைக்​கிறார். இந்​நிலை​யில், இந்த திடம் தொடர்​பாக தலை​மைச் செயல​கத்​தில் சுகா​தா​ரத்துறை தொடர்பு அதி​காரி​யும், மின்​வாரிய தலை​வரு​மான ஜெ.​ரா​தாகிருஷ்ணன், சுகா​தா​ரத் துறை செயலர் ப.செந்​தில்​கு​மார் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தொடக்​கத்​தில் தொற்று நோய்​கள் அதி​க​மாக இருந்​தன. ஆனால், தற்​போது வளர்ந்த மற்​றும் வளர்ந்து வரும் நாடு​களில் தொற்றா நோய்​களின் தாக்​கம் அதி​கரித்து வரு​கிறது. இது மிகப்​பெரிய சவாலாக உள்​ளது. அதனால் தான் தமிழக அரசு, மக்​களை தேடி மருத்​து​வம் உள்​ளிட்ட சிறப்பு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது. அதன் தொடர்ச்​சி​யாகவே நலம் காக்​கும் ஸ்டா​லின் என்ற திட்​டத்தை சென்​னை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆக.2-ம் தேதி (இன்று) தொடங்கி வைக்​க​வுள்​ளார். தமிழகம் தாய் சேய்…

Read More

சென்னை: சுதந்​திர தினத்​தையொட்டி மூவர்​ணக் கொடி யாத்​திரை மற்​றும் இதர பணி​களை ஒருங்​கிணைக்க தமிழக பாஜக​வில் மாநில அளவி​லான குழுவை நயி​னார் நாகேந்​திரன் நியமித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​ யிட்​டுள்ள அறிவிப்பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தாண்டு சுதந்​திர தினத்​தையொட்டி பல்​வேறு நிகழ்ச்​சிகள் நடத்த பாஜக தேசிய தலை​வர் ஜெ.பி.நட்டா அறி​வுறுத்​தி​யுள்​ளார். அதன்​படி, திரங்கா (மூவர்ண கொடி) யாத்​திரை, வீடு​தோறும் தேசி​யக் கொடி ஏற்​று​தல் மற்​றும் தூய்​மைப் பணி​களை மேற்​கொள்​ளுதல் என பல்​வேறு நிகழ்ச்​சிகள் ஆக.10-ம் தேதி முதல் நடத்த அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் மூவர்​ணக் கொடி யாத்திரை உள்​ ளிட்ட பணி​களை ஒருங்​கி ணைக்​க​வும், வழி நடத்​த​ வும் மாநில பொதுச் செய​லா​ளர் ஏ.பி.​முரு​கானந்​தம் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. அந்த குழு​வில், மாநிலச் செய​லா​ளர் அமர்​பிர​சாத் ரெட்​டி, இளைஞர் அணி தலை​வர் எஸ்​.ஜி.சூர்​யா, மகளிர் அணி தலை​வர் கவிதா ​காந்த், ஓபிசி அணி தலை​வர் வீர திரு​நாவுக்​கரசு, முன்​னாள் மாவட்ட தலை​வர்​கள் சுரேஷ்​பாபு, மகாசுசீந்​திரன்,…

Read More

சென்னை: 96 ஆயிரம் கிராமங்​களுக்​குச் சென்​று, நான் வியர்வை சிந்தி உழைத்து உரு​வாக்​கிய கட்சி பாமக. இதற்கு வேறு யாரும் உரிமை கோர முடி​யாது என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறிய தாவது: உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால் இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக் கிறார்கள். வேறு யார் வைத்திருக்க முடியும். இது குறித்து காவல் துறை யிடமும், சைபர் குற்றப்பிரிவு போலீ ஸாரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அந்தக் கருவியையும் காவல் துறை யிடம் ஒப்படைத் துள்ளோம். மேலும், நான் தனியாக சிறப்பு அமைப்பு மூல மாகவும் விசாரணை நடத்தச் சொல்லி யுள்ளேன். அவர்களும் விரைவில் அறிக்கை கொடுப்பார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யை அன்புமணி சொல்கிறார். தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்த பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத் துக்கு நான் ஏற் பாடு செய்து, அதில்…

Read More