Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»‘இந்து தமிழ் திசை’ நடத்தும் ‘சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2025’ – நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாள் வீட்டு வசதி கண்காட்சி தொடங்கியது!
    வணிகம்

    ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் ‘சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2025’ – நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாள் வீட்டு வசதி கண்காட்சி தொடங்கியது!

    adminBy adminApril 30, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் ‘சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2025’ – நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாள் வீட்டு வசதி கண்காட்சி தொடங்கியது!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ-2025 என்ற 2 நாள் வீட்டுவசதி கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

    ‘இந்து தமிழ் திசை நாளிதழும், I ads & events நிறுவனமும் இணைந்து தமிழ் நாடு சிமெண்ட் கார்ப்பரேசன் லிமிடெட் ஆதரவுடன் நடத்தும், வலிமை சிமெண்ட் வழங்கும் ‘சென்னை பிராப் பர்ட்டி எக்ஸ்போ-2025’ என்ற வீட்டு வசதி கண்காட்சி சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை ஆதித்யா ராம் குழுமத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் சபாரத் தினம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சிக்கு பங்குதார ராக ஆதித்யாராம் குழுமம், இணை பங்குதாரராக ABI எஸ்டேட் நிறுவனம் ஆகியவை செயல்படுகின்றன.

    தொடக்க விழாவில், ஆதித்யா ராம் குழுமத்தின் விற்பனை பிரிவு மேலா ளர் சையது ஹபிசுதீன். ABI எஸ்டேட் பிஆர்ஓ என்.முரளிதரன். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சென்னை வட்டம் – 2 மேற்பார்வை பொறியாளர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசன் லிமிடெட் நிர்வாகி (மார்க் கெட்டிங்) டி.எஸ்.சசி. இந்து தமிழ் திசை நாளிதழின் விளம்பர விற்பனை பிரிவு பொது மேலாளர் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    2 நாட்கள் நடைபெறும் இந்த கண் காட்சியை ஆதித்யாராம் குழுமத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் சபாரத் தினம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத் தார். இந்த கண்காட்சிக்கு பங்குதார ராக ஆதித்யாராம் குழுமம், இணை பங்குதாரராக ABI எஸ்டேட் நிறுவனம் ஆகியவை செயல்படுகின்றன.

    தொடக்க விழாவில், ஆதித்யா ராம் குழுமத்தின் விற்பனை பிரிவு மேலா ளர் சையது ஹபிசுதீன். ABI எஸ்டேட் பிஆர்ஓ என்.முரளிதரன். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சென்னை வட்டம் – 2 மேற்பார்வை பொறியாளர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசன் லிமிடெட் நிர்வாகி (மார்க் கெட்டிங்) டி.எஸ்.சசி. இந்து தமிழ் திசை நாளிதழின் விளம்பர விற்பனை பிரிவு பொது மேலாளர் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள், மனைகள், பட்ஜெட் வீடுகள், சொகுசு வில்லாக்கள், வரிசை வீடுகளுக்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஆதித்யாராம் குழுமம், ABI எஸ்டேட், Russel Foundations உள்ளிட்ட பிரபல தனியார் கட்டுமான நிறுவனங் கள், வீட்டு கடன் வழங்க வங்கிகள் என 42 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக, துபாயில் வீடு வாங்கு வதற்காக 101 Premium Properties கத்தை அமைத்துள்ளது. இந்த கண் காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பொது மக்களுக்கு இலவச அனுமதி வழங் கப்படுகிறது. பொதுமக்கள் கண்காட் சியை பார்வையிட்டு. தங்களுடைய கனவு இல்லத்தை நனவாக்கி கொள் ளலாம். இன்று இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

    இது குறித்து பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியதாவது: ஆதித்யா ராம் குழுமத்தின் மேலா ளர் (விற்பனை) சையது ஹபிசுதீன்: ஆதித்யாராம் குழுமம் கிழக்கு கடற் கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலையில் வீட்டு மனை,வில்லாக் களை விற்பனை செய்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் அக் கரை, பனையூர், உத்தண்டி பகுதியில் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

    பங்குதாரர் அல்லது கூட்டு ஒப்பந்தம் எதுவும் இல்லை. அனைத்துக்கும் ஒரே உரிமையாளர் என்பதால் எந்த பிரச்சினையும் இருக்காது. கிழக்கு கடற்கரை சாலை யில் மட்டும் 250 ஏக்கர் உள்ளது. தற் போது இரண்டு மனை பிரிவுகள். ஒரு வில்லா திட்டங்கள் உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர். தையூரில் மனைகள் விற்பனை செய் யப்படுகிறது.

    Russel Foundations திட்ட பொறி யாளர் எடிசன்: எங்கள் நிறுவனம் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கிழக்கு தாம்பரத்தில் கேம்ப் ரோடு முதல் சந்தோசபுரம் வரை பாதுகாப் புடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள். 8,10 குடியிருப்புகள் விற்பனை செய்து வருகிறோம். சதுர அடி ரூ.6.500 முதல் ரூ.8,500 வரை உள்ளது.

    101 Premium Properties மேலாளர் தவ்சீப் நவுமன்: நாங்கள் 2018ல் இருந்து கட்டுமானத் துறையில் சீரிய முறையில் செயலாற்றி வருகிறோம். துபாய், அபுதாபியில் வீடுகளை விற்பனை செய்து வருகிறோம். அங்குள்ள தலை சிறந்த நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். முதலீடு செய்ய விரும்பும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கோல்டன் விசா போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகிறோம். அவர்களின் முதலீட்டுக்கு சிறந்த லாபம் கிடைப்பதற்கான உறு தியை தருகிறோம். ரூ.1.5 கோடியில் இருந்து யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ரூ.4.6 கோடிக்கு அதிகமாக முதலீடு செய்பவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படுகிறது.

    முதலீடு செய்ய விரும்புவோர் நேரடியாக துபாய் செல்ல வேண்டியது கூட இல்லை. இங்கு இருந்தபடியே முதலீடு செய்யலாம். அனைத்து பணி களையும் நாங்களே கண்காணித்து உதவி செய்கிறோம். அங்குள்ள கட்டுமான நிறுவனங்களுடன் வாடிக்கை யாளர்களை நேரடி தொடர்பை ஏற் படுத்தி தருகிறோம். துபாயில் எங்களது நிறுவனத்துக்கு மிகப்பெரிய மதிப்புள்ளது. எனவே. நம்பி முதலீடு செய்யலாம்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை

    June 29, 2025
    வணிகம்

    ரூ.51,000 கோடியை தானமாக வழங்கிய வாரன் பபெட்

    June 29, 2025
    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மார்கன்: திரை விமர்சனம்
    • ‘கோவையில் ஒரு தொகுதி எங்களுக்கு…’ – ஆளுக்கு முன்னால் துண்டைப் போடும் மதிமுக!
    • உணவின் போது முதலில் காய்கறிகளை சாப்பிடுவது ஏன் முக்கியம்? ஒரு விஞ்ஞானி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டொனால்ட் டிரம்ப் Vs எலோன் மஸ்க் பகுதி 2: தொழில்நுட்ப கோடீஸ்வரர் வாதத்தை மறுதொடக்கம் செய்கிறார்; ‘பெரிய பில் அழகான’ முற்றிலும் பைத்தியம் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.