Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
    ஆன்மீகம்

    தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்.7-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சமீபத்தில் கோயிலில் நூறு டிராக்டருக்கும் மேல் மண் அள்ளப்பட்டது. இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கோயில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை. அரசு நிதியில் மோசடி செய்யப்பட்டதுடன், கோயிலின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் அளித்த புகார்கள் விசாரிக்கப்பட்ட போது கோயில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரசின் நிதியில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில் ராஜகோபுரத்தில் பழுது சரிசெய்யப்படாமலேயே வண்ணம் பூச்சு பணி நிறைவடைந்துள்ளது. எனவே, கோயிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடியும் வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தடை விதித்தும், கோயில் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமித்தும், கோயில் புனரமைப்பு பணிக்கு அரசு வழங்கிய நிதியில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    எனவே அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலின் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், கோயில் புனரமைப்பு பணிக்காக அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நேற்று நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கும்பாபிஷேகத்துக்கு இடைக்கால தடை விதித்தும், சென்னை ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்திருந்தனர்.

    இந்நிலையில், அரசு தரப்பில் கோரிக்கை வைத்ததையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், “ராஜகோபுரம் பகுதியில் வெளிப்படையாகத் தெரிந்த வெடிப்புகளை மட்டும் சரி செய்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.

    அரசுத் தரப்பில், “கோயில் புனரமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயில் திருவிழாவின் போதும் இதுபோல ஏதாவது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ராஜகோபுரம் உள்பட கோயிலின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. கும்பாபிஷேகத்தை நிறுத்துவதற்கான எந்த தேவையும் இல்லை.

    கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் ஐஐடி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கட்டும். நேற்று கணபதி ஹோமம் முடிந்துள்ளது. கணபதி ஹோமம், முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்தை நிறுத்துவது சரியல்ல” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    பதவி உயர்வு அளிக்கும் சீர்காழி திரிவிக்கிரம பெருமாள் | ஞாயிறு தரிசனம்

    August 10, 2025
    ஆன்மீகம்

    கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    August 10, 2025
    ஆன்மீகம்

    அமெரிக்காவில் கம்பராமாயண இசை கச்சேரி!

    August 9, 2025
    ஆன்மீகம்

    உலக நன்மை வேண்டி பழநியில் ஜப்பான் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

    August 9, 2025
    ஆன்மீகம்

    ஆடி மாத சப்தாகம் பூஜை: சோட்டானிக்கரை கோயில் காணிக்கையாகும் நிலக்கோட்டை மலர்கள்!

    August 8, 2025
    ஆன்மீகம்

    இருக்கன்குடி கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கோலாகலம்

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விக்ரமை இயக்கும் ‘பார்க்கிங்’ இயக்குநர்?
    • சென்னையில் பருவமழை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்
    • சுப்மேன் கில்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஷுப்மேன் கில் இருந்து கற்றுக்கொள்ள 5 பாணி பாடங்கள்
    • தயாரிப்பாளராக மாற நடிகர் சூரி திட்டம்!
    • சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்ற அன்புமணி கோரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.