Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, December 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“தமிழகத்தில் கால்பதிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி!” – பிருந்தா காரத் கருத்து
    மாநிலம்

    “தமிழகத்தில் கால்பதிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி!” – பிருந்தா காரத் கருத்து

    adminBy adminSeptember 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “தமிழகத்தில் கால்பதிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி!” – பிருந்தா காரத் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருநெல்வேலி: இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களை நீக்கும் ஆணையமாக செயல்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்தார். மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தமிழகத்தில் கால்பதிக்க முயல்கின்றன என்று அவர் கூறினார்.

    திருநெல்வேலியில் பாரதியாரின் 104 -வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் பிருந்தா காரத், மாநில செயலர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பிருந்தா காரத் கூறியது: “பாரதியார் பன்முகத்தன்மை, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகிய விழுமியங்களை பாதுகாக்க போராடியவர். அவரது கருத்துகளை முன்னெடுத்துச்செல்ல அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

    ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவை ஆளும் சக்திகள் பன்முகத்தன்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராக செயல்படுகின்றன. தற்போதைய சூழலில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தமிழகத்தில் கால்பதிக்க முயல்கின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டம், நாடாளுமன்றத்தின் விதிமுறைகள், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை அச்சுறுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செயல்படுகின்றன. இந்த சக்திகளை தமிழக மக்கள் நிச்சயம் வீழ்த்துவார்கள்.

    சாதிய கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மக்களுடன் இருப்பதும், மக்களுக்காக போராடுவதும், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை தோற்கடிப்பதுமே எங்களின் வியூகம். இண்டியா கூட்டணி பலமாக உள்ளது. பிஹாரில் வாக்குப் பதிவு முறையை முற்றிலுமாக சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இது பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தை நினைவூட்டுகிறது.

    பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தலையிட்டு தடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் வாக்குகளை உறுதி செய்வதற்கு பதிலாக வாக்காளர்களை நீக்கும் ஆணையமாக செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து இண்டியா கூட்டணி ஒன்றாக போராடி வருகிறது” என்று தெரிவித்தார்.

    இந்தியாவில் இடதுசாரிகளின் வளர்ச்சி குறைந்து வருகிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘நீங்கள் நாடாளுமன்றத்தில் உள்ள எண்ணிக்கை அடிப்படையில் கேட்கிறீர்கள், ஆனால் இடதுசாரிகளின் கருத்து வளர்ந்து வருகிறது. முன்பு இருந்ததைவிட தற்போது பலமாக வளர்ந்து வருகிறது” என்று பிருந்தா காரத் பதிலளித்தார்.

    இடதுசாரிகளின் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக திமுகவை கண்டித்து போராட்டம் நடத்தி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அது யாருக்கும் எதிரான போராட்டம் அல்ல, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம். தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவது கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை இயல்வு’ என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டிசம்பரில் 10 குறைவாக மதிப்பிடப்பட்ட, குறைவான கூட்ட நெரிசல் உள்ள இடங்கள்
    • மருத்துவ ஏர் கிளீனர்களுக்கான US-FDA வகுப்பு II அனுமதியைப் பெற்ற முதல் இந்திய நிறுவனம் பெங்களூரு ஸ்டார்ட்அப் | இந்தியா செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அன்றைய ஊட்டச்சத்து உண்மை: உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மூளை ஆரோக்கியமான கொழுப்புகளை விரும்புகிறது
    • மாசுபாடு காரணமாக டெல்லியில் 2 லட்சம் சுவாச நோய் வழக்குகள், அரசாங்கத் தரவுகளை வெளிப்படுத்துகிறது: நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு ஏன் இப்போது கூடுதல் பாதுகாப்பு தேவை – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அஸ்வகந்தா பலன்கள்: அஸ்வகந்தா ஏன் அனைவருக்கும் இல்லை: நன்மைகள், அபாயங்கள் மற்றும் யார் அதை தவிர்க்க வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.