Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»‘மனித உயிரின் மதிப்பு இவ்வளவு தானா?’ – IND vs PAK போட்டி குறித்து மனோஜ் திவாரி கருத்து
    விளையாட்டு

    ‘மனித உயிரின் மதிப்பு இவ்வளவு தானா?’ – IND vs PAK போட்டி குறித்து மனோஜ் திவாரி கருத்து

    adminBy adminAugust 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘மனித உயிரின் மதிப்பு இவ்வளவு தானா?’ – IND vs PAK போட்டி குறித்து மனோஜ் திவாரி கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொல்கத்தா: அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், மேற்கு வங்க மாநில அமைச்சருமான மனோஜ் திவாரி.

    “பாகிஸ்தான் உடன் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவது எனக்கு எனக்கு கொஞ்சம் சர்ப்ரைஸ் தான். பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்தது. தாக்குதலுக்கு தக்க பதிலடியை இந்தியா கொடுக்க வேண்டும் என அப்போது பேசப்பட்டது.

    இருப்பினும் அடுத்த சில மாதங்களில் இவை அனைத்தையும் மறந்து விட்டோம். இந்த போட்டி நடைபெறுகிறது என்பதை நம்பவே எனக்கு கடினமாக உள்ளது. மனித உயிரின் மதிப்பு இவ்வளவு தானா? பாகிஸ்தான் அணி உடன் விளையாடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? விளையாட்டை விட மனித உயிரின் மதிப்பு அதிகம்” என மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இம்முறை டி20 வடிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் செப்டம்பர் 10-ல் மோதுகிறது. 14-ம் தேதி பாகிஸ்தானுடனும், 19-ம் தேதி ஓமனையும் எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.

    இதனிடையே கடந்த ஏப்​ரலில் பஹல்​காமில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதற்கு பதிலடி கொடுக்​கும் வித​மாக பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள் மீது ‘ஆபரேஷன் சிந்​தூர்’ என்ற பெயரில் இந்​தியா தாக்குதலை நடத்​தி​யது.

    ஏற்கெனவே, பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யுடன் இருதரப்பு ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி மற்​றும் டெஸ்​டில் இந்​திய அணி பங்​கேற்​ப​தில்லை என்ற முடிவு கடந்த சில ஆண்​டு​களாக அமலில் உள்​ளது. பஹல்​காம் தாக்குதலுக்​குப் பின்​னர் இது மேலும் தீவிர​மாகி​யுள்​ளது. இதனால் ஆசி​யக் கோப்பை தொடரில் பாகிஸ்​தானுடன் இந்​திய அணி விளை​யாடுமா என்ற கேள்வி எழுந்​தது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் உடன் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் என மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சகம் விளக்​கம் அளித்​துள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா? – மத்திய அமைச்சகம் விளக்கம்

    August 22, 2025
    விளையாட்டு

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அபினவ் ஷா

    August 22, 2025
    விளையாட்டு

    மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ கண்டிப்பு – பின்னணி என்ன?

    August 22, 2025
    விளையாட்டு

    400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் விஷால் சாதனை!

    August 22, 2025
    விளையாட்டு

    2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா?

    August 22, 2025
    விளையாட்டு

    மும்பை அணி கேப்டன் பதவியில் இருந்து ரஹானே விலகல்!

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
    • “நகை அணிந்து வந்தால் உரிமைத் தொகை கிடைக்காது!” – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கிண்டல்
    • புதுவையில் புதிய வகை விநாயகர் சிலைகள் – ஆர்டர்கள் குறைவால் கவலை!
    • அதிகப்படியான மற்றும் காய்கறி நுகர்வு உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • Bihar SIR: “நீங்கள் ஏன் செயல்படவில்லை?” – அரசியல் கட்சிகள் மீது உச்ச நீதிமன்றம் காட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.