Author: admin

திருமலை: வரு​டாந்​திர புஷ்ப யாக நிகழ்ச்சி நேற்று திரு​மலை​யில் வெகு சிறப்​பாக நடந்​தது. இதனையொட்டி நேற்று காலை உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதே​வி, சமேத​மாய் மலை​யப்​பருக்கு சிறப்பு திரு​மஞ்சன நிகழ்ச்​சிகள் நடந்​தன. முன்​ன​தாக 9 டன் மலர்க் கூடைகளை தேவஸ்​தான ஊழியர்​கள், அதி​காரி​கள் ஊர்​வல​மாக கொண்டு வந்து கோயி​லில் ஒப்​படைத்​தனர்.

Read More

இதுபற்றி அவர் கூறும்​போது, “2017-ம் ஆண்டு இத்​தலைப்பை தயாரிப்​பாளர் கில்​டில் பதிவு செய்​தேன். தொடர்ந்து ஒவ்​வொரு வருட​மும் புதுப்​பித்து வந்​தேன். பிளாக்​ பாண்​டி, சென்ட்​ராயன், வடிவுக்​கரசி, ஷகீலா ஆகியோர் நடிப்​பில், ‘மாஸ்க்’ படத்தை ஹாரர் காமெடி​யாக உரு​வாக்கி​யுள்​ளேன்.வெற்​றி​மாறன் தயாரிப்​பில் ‘மாஸ்க்’ படம் உரு​வாக்​கப்​படு​வ​தாக தகவல் வந்​ததும் கில்டு தலை​வர் ஜாக்​கு​வார் தங்​கத்​திடம் முறை​யிட்​டேன். டைட்​டில் உங்​களு​டையது​தான், யாருக்​கும் என்​ஓசி தரவில்லை என்று உறுதி அளித்​தார். தற்​போது வெளி​யீட்​டுத் தேதி குறிப்​பிட்டு போஸ்​டர் வந்த பிறகு அவரிடம் கேட்​ட​போது எந்த பதி​லும் இல்​லை.

Read More

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் எம்.சோலை கண்ணன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்டால்கள் அமைத்து சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், லட்டு, முருக்கு, புட்டு போன்ற பிரசாதப் பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்படுகிறது.

Read More

கோவை: தங்​கம் விலை வரலாறு காணாத வகை​யில் தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால் போது​மான பணி ஆணை​கள் இல்​லை. இதனால் பிற மாவட்​டங்​களை சேர்ந்த 10 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​று​விட்​ட​தாக கோவை தங்க நகை தயாரிப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர். தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்​பிலும் தேசிய அளவில் புகழ் பெற்​றுள்​ளது. ஒரு லட்​சம் பேர் இத்​தொழிலில் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர். தங்​கத்​தின் விலை வரலாறு காணாத வகை​யில் உயர்ந்து வரு​வ​தால் நகைகளுக்​கான பணி ஆணை​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தங்க நகை தயாரிப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Read More

கல்லீரல் நோய் பல்வேறு தோல் நிறமி மாற்றங்களுடன் உள்ளது, இது கருமையான திட்டுகள் அல்லது கருமையான தோலை ஏற்படுத்தும். இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நாள்பட்ட வீக்கத்தால் எழுவதாக கருதப்படுகிறது. டெர்ரியின் நகங்கள் (முனையில் குறுகிய இளஞ்சிவப்பு பட்டையுடன் கூடிய வெள்ளை நகங்கள்) அல்லது முஹர்கேயின் கோடுகள் (நகங்கள் முழுவதும் வெள்ளை பட்டைகள்) போன்ற சிறப்பியல்பு குறிப்பிட்ட நக மாற்றங்கள் இருக்கலாம், இவை இரண்டும் பலவீனமான கல்லீரல் செயல்பாடு மற்றும் தொந்தரவு செய்யப்பட்ட புரத வளர்சிதை மாற்றத்தைக் குறிக்கின்றன.டாக்டர் சௌரப் கூறுகிறார்,இந்த அறிகுறிகளில் பல பொதுவான அமைப்பு ரீதியான அறிகுறிகளுடன் நிகழ்கின்றன மற்றும் மருத்துவர்களுக்கு பயனுள்ள சுட்டிகளை நிரூபிக்கின்றன. தோல் மாற்றங்கள் தொடர்ந்து இருந்தால், குறிப்பாக சோர்வு, வயிற்றின் விரிவாக்கம் அல்லது மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிற அறிகுறிகளுடன் இணைந்தால், ஒரு சுகாதார நிபுணரைப் பார்ப்பது மிகவும் முக்கியம். கல்லீரல் கோளாறுகளில் ஆரம்பகால கண்டறிதல் சிறந்த மேலாண்மை மற்றும் சிக்கல்களைத் தவிர்க்க…

Read More

புனே: புனேவைச் சேர்ந்த இரு முதியவர்கள், அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் டிஜிட்டல் கைதாகிய தனித்தனி வழக்குகளில் 1.1 கோடி ரூபாயை இழந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். மும்பை போலீஸ் மற்றும் சிபிஐ அதிகாரிகள் போல் காட்டிக் கொண்ட மோசடிக்காரர்கள், தங்கள் வங்கிக் கணக்குகள் பணமோசடிக்காக தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, சரிபார்ப்பு என்ற போலிக்காரணத்தின் கீழ் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றச் செய்தனர். புனே சைபர் போலீஸ் மற்றும் சதுஷ்ருங்கி காவல் நிலையங்களில் வியாழக்கிழமை தனித்தனி புகார்கள் பதிவு செய்யப்பட்டன.இன்று புனே தலைப்புச் செய்திகள் — நீங்கள் தவறவிடக்கூடாத முக்கியக் கதைகள்.90 லட்சத்தை இழந்த கல்யாணிநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் (79) சைபர் போலீஸில் அளித்த புகாரில், தனக்குத் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து TRAI (டெலிகாம் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) இருந்து வந்ததாகக் கூறி, தனக்கு 24 புகார்கள் வந்ததாகத் தெரிவித்தார். “பாதிக்கப்பட்டவர் பின்னர் மும்பை…

Read More

குறிப்​பாக டாக்​டர்​களை மூளைச் சலவை செய்து இந்த சதித் திட்​டத்தை தீட்​டி​யிருப்​பதும் தெரிய​வந்​துள்​ளது. எனினும், முன்​கூட்​டியே சோதனை நடத்​தப்​பட்டு பலர் கைது செய்​யப்​பட்​ட​தால் பெரிய அளவி​லான தாக்​குதல் முறியடிக்​கப்​பட்​டது.இந்​நிலை​யில், டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்​திர திவேதி பேசி​ய​தாவது:

Read More

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் ஓராண்டு சான்​றிதழ் படிப்​பு​களில் 1,149 காலி இடங்​கள் உள்​ளன. தகுதி உள்​ளவர்​கள் நவ.14-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என்று மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் 2025-26-ம் கல்வி ஆண்​டில் சேர அவசர சிகிச்​சை, மயக்க மருந்​து, அறுவை சிகிச்​சை, டயாலிசிஸ், எலும்​பியல், சுவாச சிகிச்​சை, இதய​வியல், இசிஜி, மனநலம், மருத்​து​வப் பதிவேடு ஆகிய பிரிவு​களில் டெக்​னீஷியன்​கள் உள்​ளிட்ட ஓராண்டு மருத்​து​வச் சான்​றிதழ் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

Read More

சென்னை: பள்ளி மாணவர்​களுக்​கான மாநில அளவி​லான கால்​பந்​துப் போட்​டி​யில் மதுரை ஏ.சி. அணி​யினர் முதலிடம் பிடித்து கோப்​பையை வென்றனர்.சென்னை டாக்​டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து கழகம், திண்​டுக்​கல் புனித மரியன்னை மேல்​நிலைப் ​பள்ளி முன்​னாள் மாணவர்​கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவி​லான பள்ளி மாணவர்​களுக்​கான கால்​ பந்​துப் போட்​டியை நடத்​தின. இதில் நேற்று நடைபெற்ற இறு​திப் போட்​டி​யில் மதுரை ஏ.சி. அணி​யும், கோவை பயோனியர் மில்ஸ் அணி​யும் மோதின.

Read More

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.மேலும், அமெரிக்க விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான எச்1பி விசா கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு மென்பொறியாளர்கள் சேருவதை தடுக்க மறைமுகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

Read More