கடலூர்: நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், அயர் பணியிட ஆசிரியர்களை உடனே உள்ளெடுப்பு செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுத் துறைகளைப் போலவே அனைத்து பணப் பயன்களையும் ஓய்வு பெற்ற உடனேயே வழங்கிட வேண்டும, ஆட்சிக்குழு மற்றும் கல்விக் குழுக்களில் ஆசிரியர் சங்கங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், அனைத்து நிர்வாகப் பொறுப்பு காலியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் நடைபெறும் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
Author: admin
பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பி.ஹரிகிருஷ்ணா தோல்வி அடைந்தார். கோவாவின் பனாஜியில் இந்தத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 5-வது சுற்றின் டை-பிரேக்கரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஹரி கிருஷ்ணாவும், பெரு நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜோஸ் எடுவார்டோ மார்டினஸ் அல்கான்டாராவும் மோதினர். இதில் அல்கான்டாரா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். இதையடுத்து தொடரிலிருந்து ஹரி கிருஷ்ணா வெளியேறினார்.
இந்நிலையில் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், “இறக்குமதி பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதால், அமெரிக்கா பணக்கார மற்றும் உலகில் மிகவும் மதிக்கப்படும் நாடாக மாறும். வரி விதிப்பு பற்றி குறை கூறுபவர்கள் முட்டாள்கள். வரி வருவாயிலிருந்து பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு (பணக்காரர்கள் தவிர) தலா 2 ஆயிரம் டாலர் விரைவில் டிவிடெண்டாக வழங்கப்படும்’’ என பதிவிட்டுள்ளார். தனது வர்த்தக கொள்கைகளுக்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதற்காகவே, 2 ஆயிரம் டாலர் (ரூ.1.77 லட்சம்) வழங்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த தொகை எப்படி வழங்கப்படும் என்ற குழப்பம் நிலவி வந்தது.
இன்று அதிகாலை திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. அதிகாலை 4 மணிக்கு கொடி பட்டம் 4 ரதவீதிகளையும் சுற்றி எடுத்துவரப்பட்டது. 5.30 மணிக்கு மேல் அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரம், நந்தியம்பெருமான், பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவில், தினமும் பல்வேறு மண்டகப்படிக்காரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களிலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி தருகிறார். விழாவின் 9-ம் நாளான நவ.12-ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அம்மன் திருத்தேரில் எழுந்தருளி 4 ரத வீதிகளையும் சுற்றி வந்து காட்சி…
ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர், ஹரிஹரன் ராம் இயக்கிய ‘ஜோ’, சீனு ராமசாமி இயக்கிய ‘கோழிப்பண்னை செல்லதுரை’ ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் ஏகன். இவர் அடுத்து நடிக்கும் படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். இதை விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிக்கின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீதேவி, மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
சென்னை: சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது என திமுக அரசுக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை: பஞ்சாபில் தொழில் தொடங்க 5 நாட்களில் அனுமதி வழங்கப்படும் எனவும், பஞ்சாபின் புதிய தொழில் கொள்கை 2026-ல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ள அம்மாநில அமைச்சர் சஞ்சீவ் அரோரா, தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய தமிழக தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ‘பஞ்சாப் இன்வெஸ்ட்’ முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா பங்கேற்று, பஞ்சாப் மாநிலத்தின் தொழில் வாய்ப்புகள், அரசின் புதிய கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சாதகமான சூழல் குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து, தமிழக தொழிலதிபர்களை பஞ்சாபில் முதலீடு செய்ய வருமாறும் அழைப்பு விடுத்தார்.
தன்னுடல் தாக்க நோய்கள் உள்ள பலருக்கு குளிர்காலம் பாரம்பரியமாக கடினமான பருவமாக இருந்து வருகிறது, மேலும் நன்கு அறியப்பட்ட ஆட்டோ இம்யூன் ஊட்டச்சத்து நிபுணரான Dainora Bickauskiene போன்ற நிபுணர்களின் கூற்றுப்படி, குறைந்த வெப்பநிலையின் போது அறிகுறிகள் அதிகரிப்பதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன. இந்தக் காரணங்கள் வெறும் செவிவழிச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, மாறாக மருத்துவ நடைமுறையிலிருந்தும் நோயாளிகளின் அனுபவங்களிலிருந்தும் மிகவும் சரியான அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை.வைட்டமின் டி அளவுகளில் சரிவுகுளிர்காலத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் காரணிகளில் ஒன்று வைட்டமின் டி குறைப்பு ஆகும், இது நோயெதிர்ப்பு செயல்பாட்டின் முக்கியமான மாடுலேட்டராகும். குளிர்காலத்தில், குறைந்த நேர சூரிய ஒளியுடன் குறுகிய நாட்கள் என்றால், நாம் குறைவான வைட்டமின் டியை ஒருங்கிணைக்கிறோம். பொதுவாக இலையுதிர் மற்றும் வசந்த காலத்தில் வைட்டமின் டி அளவை வருடத்திற்கு இரண்டு முறை பரிசோதிக்க வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர், இதனால் நோயெதிர்ப்பு நிலைத்தன்மைக்கு உகந்த வரம்பில் மதிப்புகளை…
கைபர் பெல்ட் நீண்ட காலமாக வானியலாளர்களை கவர்ந்துள்ளது, ஏனெனில் அது நமது சூரிய குடும்பத்தின் விளிம்பில் அமர்ந்திருக்கிறது, ஆனால் அது சூரியனைச் சுற்றி உருவான சில ஆரம்பகால பொருட்களைப் பாதுகாக்கிறது. பல ஆண்டுகளாக, இது நெப்டியூனுக்கு அப்பால் பனிக்கட்டி உடல்களின் பரந்த வளையமாக விவரிக்கப்பட்டது, இது உறைந்த குப்பைகளின் பண்டைய நீர்த்தேக்கமாகும். இன்னும் ஆய்வுகள் விரிவடைந்து, சுற்றுப்பாதை அளவீடுகள் மேம்பட்டதால், பெல்ட் யாரும் எதிர்பார்த்ததை விட அதிகமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்பதற்கான குறிப்புகள் தோன்றத் தொடங்கின. பொருள்களின் அம்சமில்லாத மேகத்திற்குப் பதிலாக, அது இப்போது மென்மையான அதிர்வுகள், குறுகிய கொத்துகள் மற்றும் மறைக்கப்பட்ட வடிவங்களால் வடிவமைக்கப்பட்ட இடமாகத் தெரிகிறது. ஆரம்பகால சூரிய குடும்பம் எவ்வாறு உருவானது என்ற கதைக்கு ஒரு புதிய அடுக்கைச் சேர்ப்பதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் இன்னும் புதிரான ஒன்று இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.என்ன உள் கர்னல் கைபர் பெல்ட் உருவாக்கம் பற்றி வெளிப்படுத்துகிறதுகிளாசிக்கல் கைபர் பெல்ட்…
அவரது காதலி, நாட்டுப்புற பாடகர் அலெக்சிஸ் வில்கின்ஸைப் பாதுகாக்க ஸ்வாட் ஏஜெண்டுகளைப் பயன்படுத்துவதற்கான இயக்குனர் காஷ் படேலின் சர்ச்சைக்குரிய முடிவை எஃப்.பி.ஐ ஆதரித்தது, படேலுடனான அவரது உறவுடன் தொடர்புடைய ‘நூற்றுக்கணக்கான நம்பத்தகுந்த மரண அச்சுறுத்தல்களை’ அவர் பெற்றுள்ளதால், அசாதாரண பாதுகாப்பு நடவடிக்கைகள் நியாயமானவை என்று வலியுறுத்தியது. பணியகத்தின் அறிக்கை தற்போதைய மற்றும் முன்னாள் FBI அதிகாரிகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் பழமைவாத வர்ணனையாளர்களிடமிருந்து வளர்ந்து வரும் விமர்சனங்களுக்கு மத்தியில் வருகிறதுவில்கின்ஸ் மீதான அச்சுறுத்தல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்று FBI கூறுகிறதுபணியகத்தின் பொது அறிக்கைகளின்படி, வில்கின்ஸின் பாதுகாப்பு விவரங்கள் ஆன்லைனில் அவருக்கு மீண்டும் மீண்டும் மற்றும் நம்பத்தகுந்த அச்சுறுத்தல்களை அதிகாரிகள் மதிப்பீடு செய்த பின்னர் அங்கீகரிக்கப்பட்டது. FBI செய்தித் தொடர்பாளர், அவரது பாதுகாப்புக் கவலைகள் மேம்பட்ட பாதுகாப்பு தேவை என்று கூறினார், இருப்பினும் பணியகம் குறிப்பிட்ட விவரங்களை வழங்க மறுத்துவிட்டது, செயல்பாட்டு உணர்திறன் காரணமாகும். படேல் இயக்குநராக, அரசாங்க விமானம் மற்றும் பாதுகாப்புச்…
