ஒரு நோய் நம்மில் ஒருவரை பாதிக்கும் வரை அது எவ்வளவு பொதுவானது என்பது பற்றி நாம் அடிக்கடி அறிந்திருக்க மாட்டோம். இதே வழக்கு பெருங்குடல் புற்றுநோயுடன் உள்ளது. ஆம் உண்மையில்! நாம் நினைப்பதை விட இது மிகவும் பொதுவானது. இது உலகளவில் முன்னணி புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது, குறிப்பாக மேற்கத்திய வாழ்க்கை முறை மற்றும் உணவு கொண்ட நாடுகளில். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெருங்குடல் புற்றுநோய் உலகளவில் மூன்றாவது பொதுவான புற்றுநோயாகும், இது அனைத்து புற்றுநோய் நிகழ்வுகளிலும் சுமார் 10% ஆகும், மேலும் இது உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும், மேலும் ஆண்களில் இரண்டாவது அடிக்கடி புற்றுநோயும், பெண்களில் மூன்றாவது மிகவும் பொதுவானது.யுனைடெட் ஸ்டேட்ஸில் மட்டும், பெரும்பாலும் சி.ஆர்.சி என்று அழைக்கப்படும் பெருங்குடல் புற்றுநோய், தோல் புற்றுநோய்களைத் தவிர்த்து, ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் கண்டறியப்பட்ட மூன்றாவது புற்றுநோயாகும். பெருங்குடல் மற்றும் மலக்குடலை பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோயின்…
Author: admin
புதுடெல்லி: தெற்கு டெல்லி, மைதான் கார்கி பகுதியை சேர்ந்தவர் பிரேம் சிங். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வீட்டை போலீஸார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். இதில் நடுத்தர வயதுடைய பிரேம் சிங், அவரது மனைவி ரஜினி, 24 வயது மகன் ஹர்திக் ஆகிய மூவரும் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தம்பதியின் இளைய மகன் சித்தார்தை (22) காணவில்லை. இவரே மூவரையும் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து டெல்லி காவல் துறை (தெற்கு) துணை ஆணையர் அங்கிட் சவுகான் கூறுகையில், “விசாரணையில் சித்தார்த் மனநல சிகிச்சையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் ஒருவரிடம், தனது குடும்பத்தை கொலை செய்துவிட்டதாகவும், இனி இங்கு வாழ மாட்டேன் என்றும் கூறியுள்ளார். சித்தார்த்தை நாங்கள் தேடி வருகிறோம்” என்றார்.
செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்டு கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், பிரேசிலின் சாமுவேல் சேவியனுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் 44-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார். இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் 46-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. அமெரிக்காவின் பேபியானோ கருனா, 46-வது நகர்த்தலின் போது பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவை தோற்கடித்தார். அமெரிக்காவின் லெவோன் அரோனியன், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர் லாக்ரேவ் மோதிய ஆட்டம் 73-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. அமெரிக்காவின் வெஸ்லி சோ, போலந்தின் டுடா ஜான் கிரிஸ்டோஃப் மோதிய ஆட்டம் 32-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. 3 சுற்றுகளின் முடிவில் பேபியானோ கருனா, லெவோன் அரோனியன், பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ரஷ்ய எல்லையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த மாகாணம் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. கடந்த 1867-ம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னர் ஆட்சி நடைபெற்றபோது அலாஸ்கா பகுதி அமெரிக்காவுக்கு ரூ.45 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றளவும் அலாஸ்கா முழுவதும் ரஷ்ய கலாச்சாரம் நிறைந்திருக்கிறது. கடந்த 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் ராணுவ தளத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்காவின் அலாஸ்காவை சேர்ந்த மார்க் வாரனுக்கு ரூ.19 லட்சம் மதிப்புள்ள யூரல் பைக்கை பரிசாக வழங்கினார். இதுகுறித்து மார்க் வாரன் கூறியதாவது: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண தீயணைப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். ரஷ்ய தயாரிப்பான யூரல் பைக்கின் தீவிர ரசிகனான நான், பழைய யூரல் பைக்கை வாங்கி ஓட்டி வந்தேன். அதிபர்…
மதுரை: தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் விளம்பரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை (பேரிகேட்) அகற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த அழகேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இரும்புத் தடுப்புகள்…. சாலைகளில் வாகனங்களின் வேகத்தை முறைப்படுத்த உரிய இடங்களில் இரும்புத் தடுப்புகள் வைக்கப்படுவது வழக்கம். இது அவசரக் காலங்களில் போக்குவரத்து மாற்றத்துக்காக வைக்கப்படுகிறது. அவ்வாறு வைக்கப்படும் தடுப்புகளில் எந்த தனியார் விளம்பரங்களும் இடம்பெறக் கூடாது. ஆனால் தமிழகத்தில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் தனியார் விளம்பரங்கள் நிரம்பியுள்ளன. 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு: இதனால் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் தனியார் விளம்பரங்களுடன்…
புதுடெல்லி: சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மோஹோல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2024-25-ம் நிதியாண்டில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை இணைந்து வரிக்கு முன் ரூ.9,568.4 கோடி இழப்பை கண்டுள்ளன. ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவை வரிக்கு முன், முறையே ரூ.1,983.4 கோடி மற்றும் ரூ.58.1 கோடி இழப்பை சந்தித்துள்ளன. அதேசமயம், இண்டிகோ நிறுவனம் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.7,587.5 கோடியை ஈட்டியுள்ளது. டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா வரிக்கு முன் ரூ.3,890.2 கோடி இழப்பை சந்தித்தது. நீண்ட காலமாக லாபத்தில் இயங்கி வந்த அதன் அங்கமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் கடந்த நிதியாண்டில் ரூ.5,678.2 கோடி இழப்பை பதிவு செய்துள்ளது. ஏர் இந்தியாவின் கடன் ரூ.26,879.6 கோடியாகவும், இண்டிகோவின் கடன் ரூ.67,088.4 கோடியாகவும் இருந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் மற்றும்…
கொழுப்பு கல்லீரல் நோய், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) அல்லது சமீபத்தில் வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) என மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது ஒரு பரவலான மற்றும் பெரும்பாலும் கண்டறியப்படாத நிலை. இது ஆரம்பத்தில் சில அல்லது அறிகுறிகளுடன் இருக்கலாம் என்றாலும், முதல் உடல் அறிகுறிகள் பெரும்பாலும் வயிற்றில் அல்லது வயிற்றுப் பகுதியில் நுட்பமாக தோன்றும் என்று வளர்ந்து வரும் சான்றுகள் தெரிவிக்கின்றன.கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள் செரிமான அச om கரியம் மற்றும் வயிற்று ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் எவ்வாறு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்து வருகின்றனர். வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் ஹெபடாலஜி வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், NAFLD நோயாளிகள் எந்த அசாதாரண இரத்த பரிசோதனைகள் அல்லது இமேஜிங் முடிவுகள் தோன்றுவதற்கு முன்பே, வீக்கம், குமட்டல் மற்றும் வலது மேல் நாற்புற அச om கரியம் போன்ற வயிற்று அறிகுறிகளை…
புதுடெல்லி: கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை, ஒடிசாவில் உள்ள சண்டிபூர் பரிசோதனை மையத்தில் இருந்து நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காக பல வகை ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கி வருகிறது. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது அக்னி-5 ஏவுகணை. அணு ஆயுதங்களுடன் 5,000 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை ஒடிசாவின் சண்டிப்பூரில் உள்ள பரிசோதனை மையத்தில் நேற்று முன்தினம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளும் சரிபார்க்கப்பட்டன. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அடுத்ததாக 7,500 கி.மீ தூரமுள்ள இலக்கை தாக்கும் வகையில் அக்னி ஏவுகணையை மேம்படுத்தும் முயற்சியில் டிஆர்டிஓ இறங்கியுள்ளது. பாகிஸ்தான் பதற்றம்: அக்னி-5 ஏவுகணையை இந்தியா மீண்டும் வெற்றிகரமாக சோதித்தது பாகிஸ்தானில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள எஸ்விஐ (போர் உத்தி தொலைநோக்கு மையம்)…
குன்னூர்: முன்னாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். 1776-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ராஸ்-2 யூனிட் பிரிவின் 250-வது ஆண்டு விழாவையொட்டி, கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் வசிக்கும் 2,500 முன்னாள் வீரர்களை சந்தித்து, அவர்களது குறைகளை ராணுவ வீரர்கள் கேட்டு வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மெட்ராஸ்-2 யூனிட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்தனர். மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் வரவேற்றார். அனைத்து முன்னாள் ராணுவவீரர்கள், போரில் கணவரை இழந்த பெண்கள், ஒட்டுமொத்த ஆயுதப் படை வீரர்களுடன் ராணுவத்தினர் கலந்துரையாடினர். கடந்த 18-ம் தேதி தொடங்கிய இந்த பேரணி செப்டம்பர் 3-ம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைய உள்ளது.
Last Updated : 22 Aug, 2025 07:20 AM Published : 22 Aug 2025 07:20 AM Last Updated : 22 Aug 2025 07:20 AM புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டையும் தாண்டி, முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீத வளர்ச்சியை அடையும் வாய்ப்புள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டது. ஆனால் இந்த காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்தபோது, அது 6.9 சதவீதம் என காட்டுகிறது. அதனால் 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தோராயமாக 6.8 முதல் 7 சதவீதமாக இருக்கும் என ஆரம்பகட்ட…