Author: admin

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது அணியில் உள்ள வீரர்களுக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் டி 20 தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறையில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம் நள்ளிரவை கடந்த பின்னரே முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக இந்த குற்றச்சாட்டில் மும்பை அணி சிக்கியுள்ளதால் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை அணியில் உள்ள மற்ற வீரர்கள் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டியின் ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் பிசிசிஐ…

Read More

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை புதுச்சேரியில் நடைமுறை படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வரும் 13-ம் தேதி சீராய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடாக இந்த கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தலைமைச் செயலர் டாக்டர் சரத் சவுகான், காவல் துறை தலைமை இயக்குனர் ஷாலினி சிங், ஜஜி அஜித் குமார் சிங்ளா, காவல்துறை சிறப்பு செயலர் கேசவன், சட்டத்துறைச் செயலர் சத்தியமூர்த்தி, டிஐஜிசத்திய சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். காரைக்கால் மஹே,…

Read More

ஆப்டிகல் மாயைகள் நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் அவை நமது உள்ளார்ந்த ஆளுமை மற்றும் மறைக்கப்பட்ட பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். ஒரு ஆப்டிகல் மாயை என்பது ஒரு காட்சி நிகழ்வு ஆகும், அங்கு கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது.கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது. இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.ஒரு சிறிய வால் கண்டுபிடிக்க முடியுமா?இந்த படத்தில், கோழியின் மந்தையை நாம் காண்கிறோம், இவை அனைத்தும் ஒரே மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன. இருப்பினும் ஒரு அணில் அடைகாப்புக்குள் நுழைந்ததாகத் தோன்றியது, எங்கோ பதுங்கியிருக்கிறது. இருப்பினும்,…

Read More

ஜார்ஜியா செனட் இருக்கைக்கான குடியரசுக் கட்சியின் போட்டி தொடங்குகிறது. அமெரிக்காவின் பிரதிநிதி பட்டி கார்ட்டர் வியாழக்கிழமை 2026 ஆம் ஆண்டில் ஜனநாயக அமெரிக்க சென் ஜான் ஓசோஃப்பை சவால் செய்த முதல் குடியரசுக் கட்சிக்காரர் ஆனார், ஏனெனில் அவர் இருக்கை தேட மாட்டார் என்று பிரையன் கெம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து மற்ற நம்பிக்கையாளர்கள் சூழ்ச்சி செய்தனர். மாநிலம் தழுவிய அலுவலகத்தில் நீண்ட காலமாக கண் வைத்திருக்கும் கார்ட்டர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு “பட்டி கார்டரில் ஒரு போர்வீரன் இருக்கிறார்” என்றும் ஒசோஃப் தாக்குவதாகவும் அறிவிக்கும் வீடியோ விளம்பரத்தை வெளியிட்டார். குறைந்தது ஆறு ஜார்ஜியா குடியரசுக் கட்சியினர் செனட்டில் ஒரு ஓட்டத்தை பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் அமெரிக்க பிரதிநிதி மார்ஜோரி டெய்லர் கிரீன். காங்கிரசில் உள்ள மற்ற இரண்டு ஜார்ஜியா குடியரசுக் கட்சியினரும் – மைக் காலின்ஸ் மற்றும் ரிச் மெக்கார்மிக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற சாத்தியமான வேட்பாளர்களில் ஜார்ஜியா…

Read More

புதுடெல்லி: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி இன்று ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், அங்கு இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல, பாகிஸ்தானில் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு பிஎஸ்எல் அணிகளான பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையே போட்டி நடைபெறவிருந்தது. இந்நிலையில், இந்த மைதானம் ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்த முயன்றதை அடுத்து இந்த பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்துள்ளது. முன்னதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இன்று காலை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த…

Read More

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டுள்ள 3 நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. தனது 2-வது சதத்தை விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 101 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 123 ரன்களும், தீப்தி சர்மா 84 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 93 ரன்களும் விளாசினர். 5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 122 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 63 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 28, பிரதிகா ராவல் 1, ரிச்சா கோஷ்…

Read More

இஸ்லாமாபாத்: ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தின் மீது இந்தியா ட்ரோன் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி உள்ளது. இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல, பாகிஸ்தானில் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு பிஎஸ்எல் அணிகளான பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையே போட்டி நடைபெறவிருந்தது. இந்நிலையில், இந்த மைதானத்தின் மீது இந்தியா ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்த முயன்றதை அடுத்து இந்த பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்தது. இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை தொடர்ந்து நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்…

Read More

சென்னை: மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி- யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தை அடுத்த வடநெமிலியில் மே 11-ம் தேதி பாமக சார்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சித்ரா பவுர்ணமி நாளில் பாமக மாநாடு நடத்துவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரம், 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததை சுட்டிக்காட்டிய மனுதாரர், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.மாலா மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.…

Read More

திருவனந்தபுரம்: பாகிஸ்தானுக்கு எதிராகப் போரைத் தொடங்குவதில் இந்தியாவுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும், ஆனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது, அதை செய்தோம். பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக இரவில் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. நாம் ஒரு குறிப்பிட்ட அளவிலான பதிலடியை மட்டுமே கொடுத்தோம். இப்போது, ஜம்மு காஷ்மீரின் ​​பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 59 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு நமது படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. ஆனால், அதை அதிகரிக்க நாம் விரும்பவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் அரசு அல்லது ராணுவம் இருப்பது நமக்கு தெரிந்திருந்தாலும், நாம் அவற்றைத் தாக்கவில்லை. இது நமக்கு போரில் ஆர்வம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால்…

Read More

வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ்-2 சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஓஜாஸ் தியோதலே, அபிஷேக் வர்மா, ரிஷப் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி கால் இறுதி சுற்றில் 239-232 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தியது. தொடர்ந்து அரை இறுதி சுற்றில் இந்திய அணி 232-231 என்ற கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி, மெக்சிகோவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் மதுரா தமன்கோங்கர், சிகிதா தனிபர்த்தி, ஜோதி சுரேகா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி கால் இறுதி சுற்றில் 232-229 என்ற கணக்கில் கஜகஸ்தானையும், அரை இறுதி சுற்றில் 232-230 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனையும் தோற்கடித்தது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, மெக்சிகோவுடன் மோதுகிறது.

Read More