மாற்றியமைக்கப்பட்ட கோடு உணவு, வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே மருந்துகளில் இருப்பவர்களுக்கு கூட இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கிறது. ‘நீரிழிவு நோய்க்கான கோடு’ குறைந்த சோடியம் உணவு இரத்த அழுத்தத்தில் மருத்துவ ரீதியாக அர்த்தமுள்ள குறைப்பை உருவாக்குகிறது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த உணவு அணுகுமுறை நீரிழிவு நோயாளிகளுக்கு இருதய நோய் அபாயத்தைக் குறைக்க ஒரு மருந்தியல் அல்லாத மூலோபாயத்தை வழங்குகிறது. உலகளவில் இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பல கடுமையான நோய்களுக்கு உயர் இரத்த அழுத்தம் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஏதேனும் அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் இல்லாததால் இது பெரும்பாலும் ‘அமைதியான கொலையாளி’ என்று அழைக்கப்படுகிறது. டாஷ் (உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்துவதற்கான உணவு அணுகுமுறைகள்) உணவு பெரும்பாலும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க சிறந்த உணவாக கருதப்படுகிறது. டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு வடிவமைக்கப்பட்ட டாஷின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு,…
Author: admin
கொல்கத்தா: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான விபத்தில் விமானப் பணிப் பெண்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரைச் சேர்ந்த குகி மற்றும் மைதேயி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 10 பணிப்பெண்கள் இருந்துள்ளனர். அவர்களில் மணிப்பூர் மாநிலத்தின் குகி இனத்தை சேர்ந்த லாம்நந்தியம் சிங்சன் மற்றும் மைதேயி இனத்தை சேர்ந்த கந்தோய் சர்மா காங்பிரெய்லாக்பம் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்களும் விமான விபத்தில் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான தகவல் அறிந்ததும் இவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். லாம்நந்தியம், கந்தோய் இருவரும் உயிரிழந்த தகவல் அறிந்தவுடன் சமூக அமைப்பினர், மணிப்பூர் மக்கள் என அனைவரும் தங்கள் இன வேறுபாட்டை மறந்து அந்தக் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர். குகி – மைதேயி இனங்களை மறந்து அரசியல் கட்சியினரும் குடிமக்களும் பல்வேறு அமைப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன் சோகமான இந்த…
இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்பட பல நகரங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் ராணுவ தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே போர் வலுத்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்துள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஈரானும், ஹவுதி கிளர்ச்சிப் படையும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இவ்வாறாக இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரே நாளில் பேரலுக்கு 6 டாலர் உயர்ந்து 78 டாலரானது. இதன்மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு…
அண்டார்டிகாவில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களின் குழு பனிக்கு அடியில் ஆழமாக வெளிவரும் அசாதாரண வானொலி சமிக்ஞைகளைக் கண்டறிந்துள்ளது. இந்த அலைகள் ஒரு பரிசோதனையின் போது அண்டார்டிக் தூண்டுதலான நிலையற்ற ஆண்டெனா (அனிதா) ஐப் பயன்படுத்தி எடுக்கப்பட்டன, இது நாசா நிதியுதவி அளிக்கும் திட்டமாகும் உயர் ஆற்றல் துகள்கள் விண்வெளியில் இருந்து. சமிக்ஞைகள் விண்வெளியில் இருந்து இல்லாமல் மேற்பரப்புக்கு கீழே இருந்து வருவதாகத் தோன்றியதால் கண்டுபிடிப்பு எதிர்பாராதது. நியூட்ரினோக்கள் போன்ற அறியப்பட்ட துகள்களால் அலைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவற்றை உருவாக்குவது என்ன என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அண்டார்டிகாவில் நியூட்ரினோ தேடலின் போது ரேடியோ அலைகள் காணப்படுகின்றனதி அனிதா பரிசோதனை ரேடியோ கருவிகளை அடுக்கு மண்டலத்திற்கு கொண்டு சென்ற பலூனைப் பயன்படுத்தி உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைப் படிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகா அதன் தனிமைப்படுத்தல் மற்றும் பிற வானொலி மூலங்களிலிருந்து குறைந்த குறுக்கீடு காரணமாக தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. நியூட்ரினோஸ் ஆராய்ச்சியாளர்களைத் தேடும் போது…
Last Updated : 15 Jun, 2025 07:02 AM Published : 15 Jun 2025 07:02 AM Last Updated : 15 Jun 2025 07:02 AM அகமதாபாத்: லண்டனில் வசித்தவர் அர்ஜுன் படோலியா. இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 8 வயது மற்றும் 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரதி காலமானார். அவரது கடைசி ஆசைப்படி குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள வடியா கிராமத்தில் உள்ள குளத்தில் மனைவியின் அஸ்தியை அர்ஜுன் கரைத்து பூஜைகள் செய்தார். பின்னர் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றபோது அர்ஜுனும் விபத்தில் உயிரிழந்தார். தற்போது ஒரு மாதத்துக்குள் தாய், தந்தை இருவரையும் இழந்த 2 பெண் குழந்தைகள் லண்டனில் தவித்து வருகின்றனர். அர்ஜுனின் தந்தை காலமாகிவிட்டார். சூரத்தில் அவருடைய தாய் வசிக்கிறார். அந்த 2 பெண் குழந்தைகளின் எதிர்காலம் தற்போது…
ஆட்டத்தின் இடையே ‘சோக்கர்ஸ்’ என்று ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஸ்லெட்ஜிங் செய்தது தன் காதில் விழுந்தது என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறியுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்க அணி. அந்த அணி கடைசியாக 1998-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்றிருந்தது. இந்த 27 வருட காலங்களில் பல ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி நாக்-அவுட் சுற்றுகளில் பரிதாபமாக தோல்வியை சந்தித்து வெளியேறியது நினைவுகூரத்தக்கது. ஆஸ்திரேலிய அணி சாண்ட் பேப்பர் அத்தியாயத்துக்குப் பிறகே எதிரணியினரை மேலதிகமாக ஸ்லெட்ஜிங் அல்லது நட்பு ரீதியான கேலி, வசை போன்றவற்றை ஏறக்குறைய இல்லாமலே செய்துவிட்டனர். குறிப்பாக, கம்மின்ஸ் கேப்டன்சியில் இந்தக் கொள்கையை ஆஸ்திரேலிய அணி தீவிரமாகக் கடைபிடிக்க ஸ்லெட்ஜிங் செய்வதில் நிபுணரான…
இஸ்ரேல் நாட்டின் ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு கவசத்தின் சிறப்புகள், வசதிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அந்த பாதுகாப்பு கவசத்தையும் மீறி இஸ்ரேலை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதும் கவனிக்கத்தக்கது. ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் காலை ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 பேர் படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார். ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் வசதி, ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் தாக்கப்பட்டது. நடான்ஸ் பகுதியில் உள்ள வளாகம், 60 சதவீதம் யுரேனியத்தை வளப்படுத்தும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், இதற்கு பதிலடியாக நேற்று காலை வரை, ஈரான் நாடு ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்’ என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்கள் மீது ஏவுகணைகளை ஏவி கடும்…
‘மார்கோ 2’ திட்டம் கைவிடப்பட்டதாக உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார். மலையாளம் மட்டுமன்றி இந்தியளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மார்கோ’. இந்த வெற்றியை முன்வைத்து 2-ம் பாகமும் அறிவிக்கப்பட்டது. ஆனால் யார் இயக்குநர் உள்ளிட்ட எந்தவொரு விவரமும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனிடையே, இப்படம் கைவிடப்பட்டதாக உன்னி முகுந்தன் அறிவித்துள்ளார். ரசிகர் ஒருவர் ‘மார்கோ 2’ அப்டேட் குறித்து உன்னி முகுந்தனிடம் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக உன்னி முகுந்தன், “மன்னிக்கவும். ‘மார்கோ’ படங்களைத் தொடரும் திட்டத்தினை கைவிட்டுவிட்டேன். ஏனென்றால் அப்படத்தினைச் சுற்றி அதிகப்படியான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆகையால் ‘மார்கோ’ படத்தை விட பெரிய மற்றும் சிறந்த படமொன்றை கொண்டு வர என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அனைவருடைய அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். உன்னி முகுந்தனின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஹனிஃப் அடினி இயக்கத்தில் உன்னி முகுந்த நடிப்பில் வெளியான படம் ‘மார்கோ’. ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருந்தாலும்…
சென்னை: காதல் திருமண விவகாரத்தில் பெண் வீட்டுக்கு ஆதரவாக சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்ய போலீஸார் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் காதல் திருமண விவகாரத்தில் பெண் வீட்டார், மணமகனின் சகோதரனை கடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலை மையிலான போலீஸார், ஆன்டர் சன்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸாரை தடுத்து நிறுத்தினர். இதனால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் பரபரப்புக்குள்ளானது. பின்னர், தொண்டர்கள் கைது, நீண்ட பேச்சுவார்த்தை என 3 மணி நேரத்துக்குப் பிறகு சில போலீஸார் மட்டும் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒரு மணி நேரம் சோதனை செய்த…
