மதுரை: ஆன்மிக மாநாட்டை அரசியலுக்கு பயன்படுத்தினால் அதற்கான சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மதுரை பாண்டிகோயில் அருகே அம்மா திடலில் ஜூன் 22-ல் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடு நடத்த 52 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து பூஜைகள் நடத்த போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து மாநாட்டுக்கு போலீஸார் விதித்துள்ள 52 நிபந்தனைகளில், மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு அந்தந்த உட்கோட்ட டிஎஸ்பியிடம் வாகன பாஸ் பெற வேண்டும், இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது, மாநாட்டில் பங்கேற்போர் விவரங்களை ஜூன் 16-க்குள் வழங்க வேண்டும், அறுபடை வீடுகள் மாதிரி அமைக்க அறநிலையத் துறை மற்றும் மாநகராட்சியி டம் அனுமதி பெற வேண்டும், ட்ரோன் பறக்க தடை விதிக்கப்படுகிறது ஆகிய 6 நிபந்தனைகளை மாற்றியமைக்கக் கோரியும் இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்…
Author: admin
நாக்பூர்: சுற்றுலா நிமித்தமாக இமாச்சல் மாநிலம் மணாலிக்கு பயணித்த நாக்பூரை சேர்ந்த குடும்பத்தினருக்கு அந்த பயணம் மோசமானதாக அமைந்தது. மணாலியில் ஜிப்லைன் சாகசம் மேற்கொண்ட அந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, கேபிள் அறுந்த காரணத்தால் கீழே விழுந்து படுகாயமடைந்தார். நாக்பூரில் வசித்து வரும் பிரஃபுல்லா பிஜ்வே தம்பதியர் மற்றும் அவர்களது 10 வயது மகள் த்ரிஷா பிஜ்வே உடன் மணாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடந்த 8-ம் தேதி அவர்கள் தனியார் சாகச அனுபவங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது த்ரிஷா பிஜ்வே ஜிப்லைனில் ரைட் சென்றுள்ளார். பாதி வழியில் ஜிப்லைனின் கேபிள் அறுந்த காரணத்தால் சுமார் 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து த்ரிஷா படுகாயமடைந்தார். கீழே விழுந்ததில் அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. முதலில் மணாலியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சண்டிகர் மாற்றப்பட்டுள்ளார். தற்போது நாக்பூரில் தனியார் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சையில்…
சென்னை: கீழடி விவகாரத்தில் பிரிவினைவாத அரசியல் செய்யாமல் அதை ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள் என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தை ஆளும் திமுக, தங்களது ஊழல், முறைகேடுகளையும், குடும்ப ஆதிக்கத்தையும் மறைப்பதற்காக, பிரிவினைவாத அரசியலை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை துண்டாட வேண்டும் என்ற பிரிவினைவாத உள்நோக்கத்துடன் பிறந்த கட்சி தான் திமுக. அதனால் பிரிவினைவாத அரசியல் அக்கட்சிக்கு கைவந்த கலையாகிவிட்டது. கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’, ‘ஆரியம் – திராவிடம்’, இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என்று சொல்லியே பிழைப்பு நடத்தி வரும் கட்சி தான் திமுக. இப்போது சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வை, தங்கள் பிரிவினைவாத அரசியலுக்கு திமுக பயன்படுத்தி வருகிறது. கீழடி அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அனுப்பிய ஆய்வறிக்கையை வெளியிட மேலும்…
அகமதாபாத் விமான விபத்தில் இறந்த துணை விமானி கிளைவ் குந்தர் மிகவும் புத்திசாலி மற்றும் ஒழுக்கமான மாணவர் என்று அவரது பேராசிரியர் ஊர்வசி கூறினார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தவர்களில் 12 விமான ஊழியர்களும் அடங்குவர். இவர்களில் துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். கிளைவ் குந்தர் பற்றி, அவருக்கு மும்பை வில்சன் கல்லூரியில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் இயற்பியில் பாடம் நடத்திய பேராசியர் ஊர்வசி கூறியதாவது: கிளைவ் மிகவும் புத்திசாலி, மிகவும் ஒழுக்கமானவர். வகுப்புக்கு ஒருபோதும் தாமதமாக வர மாட்டார். படிப்பு தொடர்பாக அவரது பணிகள் மிகவும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் முறையாகவும் இருக்கும். அவரது ஒழுக்கமே அவரை ஒரு வெற்றிகரமான விமானியாக மாற்றியிருக்கும் என நினைக்கிறேன். விமான விபத்து பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, விபத்தில் இறந்த துணை விமானி எனது மாணவன்…
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அது தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் இது அரசியில் ரீதியாக பேசு பொருளானது. “இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு பின்னடைவு,” என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார். “அமெரிக்க ராணுவ தினத்தை முன்னிட்டு வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாக வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருந்தது. இதில் அமெரிக்காவின் நோக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது?” என அந்த ட்வீட்டில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார். “தவறான தகவல்களை பரப்புகிறார்,…
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தினை இந்தியளவில் உள்ள திரையுலக பிரபலங்கள் பலரும் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இப்படத்தினை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் என்பதை சசிகுமார் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டு இருந்தார். இயக்குநரும் ரஜினி தன்னிடம் தொலைபேசியில் பேசிய புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார். தற்போது ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இது தொடர்பாக, “நான் சினிமாவுக்குள் கால் பதித்ததற்கான காரணமே இன்று நிறைவாக உணர்கிறேன். அவர் என் பெயரைச் சொல்லி என்னைக் கட்டிப்பிடித்த விதம், என் உடம்பெல்லாம் ஒரே சிலிரிப்பு. நான் சிறுவயதில் செய்த ஒவ்வொரு பிரார்த்தனையும் தாமதமாக வந்துவிட்டது போலவும், ஆனால் அது எனக்குத் தேவையான நேரத்தில் வந்தது போலவும் அவரது ஒரு புன்னகை இருந்தது. என்ன ஒரு மனிதர், எளிமை மற்றும் மகத்துவத்தின் சின்னம். இந்த தருணத்தை விட பெரிய உந்துதலையோ அல்லது ஆசிர்வாதத்தையோ என்னால் கேட்க முடியாது. என்றென்றும் உங்களை நேசிக்கிறேன் ரஜினிகாந்த்…
திருவள்ளூர்: “என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள். ஒரு மகனாக, கட்சியின் தலைவனாக அதை நிறைவேற்றுவேன். நீங்கள் வருத்தப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், கோபப்படாதீர்கள். நீங்கள் இன்று தேசிய தலைவர். கடந்த ஆண்டு பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில், உங்களை இந்தியாவின் மூத்த தலைவர் என்று சொன்னார்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், மணவாளர் நகர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக் கூட்டம் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கட்சியை ராமதாஸ் தொடங்கி நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். சமூகநீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி பாமக. நமது பயணம், கரடு முரடான பாதைகளை கடந்துவந்த கடுமையான பயணம். நம் கட்சியை தொடங்கிய நோக்கமே நமக்கு…
நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் விஷயங்களை மறுசுழற்சி செய்யும் பழக்கம், ஏனெனில் இது சுற்றுச்சூழலில் கழிவுகளை குறைக்க உதவுகிறது, மேலும் அவற்றை மேலும் செயல்முறைகளுக்கு பயன்படுத்தலாம். எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டியது ஒரு நல்ல பழக்கம் என்றாலும், மறுபுறம், மறுசுழற்சி செய்ய முடியாத பல விஷயங்கள் உள்ளன, மறுசுழற்சி செய்யும்போது அவை தீங்கு விளைவிக்கும் என்று நிரூபிக்கப்படலாம். ஆகையால், இந்த உருப்படிகளை எதிர்காலத்தில் அவை ஏற்படுத்தக்கூடிய தீங்கைக் குறைக்க அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. ட்ரீஹக்கரின் அறிக்கையின்படி, நீங்கள் மறுசுழற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டிய 15 பொதுவான பொருட்களின் பட்டியல் இங்கே.10 நீங்கள் மறுசுழற்சி செய்யக்கூடாதுஏரோசோல் கேன்கள்ஹேர்ஸ்ப்ரே, டியோடரண்ட் அல்லது ஸ்ப்ரே பெயிண்ட் வடிவத்தில் நாம் தினமும் பயன்படுத்தும் ஏரோசல் கேன்கள் முதல் பார்வையில் மறுசுழற்சி செய்யக்கூடியதாகத் தோன்றலாம், ஆனால் அவை முற்றிலும் காலியாக இல்லாவிட்டால் அவை ஆபத்தானவை, மேலும் மறுசுழற்சி செயல்பாட்டின் போது வெடிக்கலாம் அல்லது கசியக்கூடும்.…
அகமதாபாத்: ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, “ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இன்று காலை சுமார் 11:10 மணியளவில் அவரது டிஎன்ஏ பொருந்தியுள்ளது. அவர் பல ஆண்டுகளாக குஜராத் மாநில மக்களுக்காக உழைத்தார்.” என்று தெரிவித்தார். முன்னதாக, அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 241 பேரில் விஜய் ரூபானியும் ஒருவர் என்ற செய்தியை மத்திய ஜல் சக்தி அமைச்சரும், குஜராத் பாஜக தலைவருமான சி.ஆர். பாட்டீல் உறுதிப்படுத்தினார். அவர், “இது மிகவும் சோகமான சம்பவம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என் இரங்கல். முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியை விபத்தில் இழந்துவிட்டோம்,…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அண்மையில் விவோ நிறுவனத்தின் டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி4 அல்ட்ராம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் டி1 மாடல் அறிமுகமானது. தொடர்ந்து டி2 மற்றும் டி3 மாடல்களின் வேரியன்ட்கள் அறிமுகமாகின. தற்போது டி4 மாடலில் ஒரு வேரியன்டான டி4 அல்ட்ரா அறிமுகமாகி உள்ளது. T4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சிறப்பு…
