திண்டுக்கல்: கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ரூ.500 கட்டு ஒன்றைப் பறித்துச்சென்ற குரங்கு, மரத்தின்மேல் சென்று, ஒவ்வொரு தாளாக பறக்கவிட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குணா படத்தால் பிரபலமான குணா குகை சுற்றுலா மையம், ‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்ற மவையாளப் படம் வெளியான பிறகு பல்வேறு மாநிலங்களிலும் பெரிதும் பிரபலமடைந்தது. இதையடுத்து, கடந்த கோடை சீசனில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். சில வாரங்களுக்கு முன்பு மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கும், வனத் துறை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த வாரம் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் மோகம் காரணமாக தடுப்பு வேலியைக் கடந்து சென்று, ஆபத்தான பகுதியில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டதும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குணா குகைப் பகுதியை பார்வையிட வந்த கர்நாடக…
Author: admin
சென்னை: குரூப்-4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 மற்றும் 1-ஏ முதல்நிலை தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னை எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குரூப்-1 தேர்வில் எளிமைப்படுத்தப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு வசதியாக இருக்கும். குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் 2 மாதத்துக்குள் வெளியிடப்படும். தொடர்ந்து, 3 மாதங்களில் முதன்மை தேர்வு நடைபெறும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் சரியான முறையில் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடத்தப்படுகின்றன. முன்பெல்லாம் 90 தேர்வுகள் வரை நடைபெறும். தற்போது அனைத்தையும் ஒருங்கிணைத்து 7 தேர்வுகள்தான் நடத்தப்படுகின்றன. இதன்மூலம், மாணவர்கள் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.…
சென்னை: இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் இயக்கத்தில் இணையுமாறு ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விருதுநகரில் பள்ளிக்கல்வியை தொடராமல் விட்டுவிடும் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஈடுபட்டு வருகிறார். மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகள். கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உயர்த்தியுள்ளோம். இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள். ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு எனது வேண்டுகோள் என்ன என்றால், இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும். உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை…
திருவள்ளூர் / மதுராந்தகம்: ‘என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்’ என பாமக நிறுவனர் ராமதாஸிடம் அக்கட்சித் தலைவர் அன்புமணி மன்னிப்பு கேட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, பாமகவின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச் சாவடி குழுக்கள் அமைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க முதல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவை மாநில தலைவர் பாலு, இளைஞர் சங்க செயலாளர் பாலயோகி, அமைப்பு செயலாளர் வெங்கடேசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து அன்புமணி பேசியதாவது: பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிறது. பாமக சமூகநீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி. சமூகநீதி, சாதிவாரி கணக்கெடுப்பை திமுக அரசு நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை. பொய்…
சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னையில் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக துறை சார்ந்த ஆய்வுகளை பள்ளிக்கல்வித் துறை செய்துவருகிறது. அதன்படி பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 23, 24-ம் தேதிகளில் மாவட்ட வாரியாக நடத்தப்பட உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உட்பட 13 மாவட்டங்களுக்கு ஜூன் 23-ம் தேதி காலையும், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், மதுரை, ஈரோடு, திருச்சி உட்பட 12 மாவட்டங்களுக்கு மதியமும் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அதேபோல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, கரூர், நாமக்கல், வேலூர், சென்னை உள்ளிட்ட…
ஐ.எஸ்.எஸ் கசிவு ‘சிறியது’; துவக்கத்தை தாமதப்படுத்த ‘அசாதாரணமானது’: நாசா பெங்களூரு: நாசா, இது ஆக்சியம் இடத்துடன் சேர்ந்து, ஆக்சியம் -4 (AX4) பணியை அறிமுகப்படுத்த தாமதமானது சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) a ரஷ்ய சேவை தொகுதி இந்த வார தொடக்கத்தில் ஐ.எஸ்.எஸ்., “சிறியது” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் (ரஷ்ய விண்வெளி ஏஜென்சி) உடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறது, “சிறிய கசிவுகளை முத்திரையிடுவதற்கான மிக சமீபத்திய பழுதுபார்க்கும் முயற்சிகளைப் புரிந்து கொள்ள”. நிலையத்தின் ஸ்வெஸ்டா சேவை தொகுதியின் பின் பிரிவில் அமைந்துள்ள கசிவுகள் பல ஆண்டுகளாக விமானக் கட்டுப்பாட்டாளர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளன என்று நாசா கூறினார்.”ரோஸ்கோஸ்மோஸின் சமீபத்திய பழுதுபார்க்கும் முயற்சிகள் பரிமாற்ற சுரங்கப்பாதையில் உறுதிப்படுத்தப்பட்ட அழுத்தத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது, இருப்பினும் கசிவுகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளதா அல்லது பிரதான நிலையத்திலிருந்து அந்த பகுதிக்கு காற்று பாய்கிறதா என்பதை அணிகள் இன்னும் மதிப்பீடு செய்கின்றன,” என்று அது கூறியது.நாசா மற்றும்…
புதுடெல்லி: அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று சைப்ரஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். சைப்ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடுகளில் அவர் 5 நாள் பயணம் மேற்கொள்கிறார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து நேரடியாக விளக்கம் அளித்தனர். இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு ‘ஏர் இந்தியா ஒன்’ தனி விமானத்தில் பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். 5 நாள் பயணமாக சைப்ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர்…
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ருத்ராஷ்ட்ரா’ என்ற ட்ரோனை இந்திய ராணுவம் நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இந்த ட்ரோனால் செங்குத்தாக மேலெழும்பி பறந்து சென்று, இலக்கை நெருங்கியதும் செங்குத்தாக தரையிறங்கி துல்லிய தாக்குதல் நடத்த முடியும். ‘ருத்ராஷ்ட்ரா’ என்ற ட்ரோனை சோலார் ஏரோஸ்பேஸ் அண்ட் டிபன்ஸ் லிமிடெட்(எஸ்டிஏஎல்) நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயார் செய்தது. இது செங்குத்தாக மேலெழும்பி மற்றும் தரையிறங்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை போக்ரானில் கள பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்தது. பரிசோதனையில் 50 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தகர்த்தது. இலக்கு தூரத்தை அதிகரித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தன. ருத்ராஷ்ட்ரா ட்ரோனால் 1.5 மணி நேரம் பறந்து சென்று 170 கி.மீ இலக்கை தாக்க முடியும். இந்த ட்ரோனால் தன்னிச்சையாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியபின் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வர முடியும். அதோடு இதில் உள்ள கேமிரா மூலம் தாக்குதல் காட்சிகளை நேரடியாக காணலாம். மேக்…
வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையே என்னுடைய தலையீட்டால் அமைதி ஏற்பட்டதைப் போல விரைவில் இஸ்ரேல் – ஈரான் இடையே அமைதி ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: “ஈரானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே, அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, விரைவாக ஒரு நல்ல முடிவை எடுத்து, போரை நிறுத்த முடிந்த இரண்டு சிறந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு ஒற்றுமையை நான் கொண்டு வந்தேன். மேலும், எனது முதல் பதவிக் காலத்தில், செர்பியாவுக்கும் கொசோவோவுக்கும் இடையே பல தசாப்தங்களாகச் நடந்து கொண்டிருந்ததைப் போல, கடுமையான மோதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நீண்டகால மோதல் பெரும் போராக வெடிக்கத் தயாராக இருந்தது. நான் அதை தடுத்து நிறுத்தினேன் (சில முட்டாள்தனமான முடிவுகளால் பைடன் நீண்டகால வாய்ப்புகளை பாதித்துள்ளார். ஆனால் நான் அதை மீண்டும் சரிசெய்வேன்)…
காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சாகுபடிக்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட்டார். இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக நேற்று மாலை தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தது. இதற்கிடையே, தஞ்சாவூரில் 2 நாட்கள் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் கல்லணைக்கு வந்து, சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுத்தார். பின்னர், மாலை 6.05 மணிக்கு அங்கிருந்து நடந்து சென்று கல்லணையில் இருந்து காவிரி, கொள்ளிடம்…
