ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாத்திரம் கழுவும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் ஓபிசி பிரிவில் 4071 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பலோத்ரா நகர் அருகில் உள்ள கட்டோ கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் குமார் (19). இவரது பெற்றோர் திருமணம் மற்றும் இதர விழாக்களில் பாத்திரம் கழுவும் தொழிலாளிகளாக பணியாற்றுகின்றனர். அதோடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கிடைக்கும் பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு அதில் கிடைக்கும் ஊதியத்தை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர். ஷ்ரவன் குமாரும் படித்துக் கொண்டே அருகில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். குடும்பத்தில் நிதி நெருக்கடிகள் இருந்தாலும் ஷ்ரவன் குமார் அரசு பள்ளியிலேயே படித்து 10-ம் வகுப்பில் 97 சதவீத மதிப்பெண்ணும், 12-ம் வகுப்பில் 88 சதவீத மதிப்பெண்ணும் பெற்றார். ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் உள்ள அரசு மருத்துவர்கள், ஏழை மாணவர்களுக்கு இலவச…
Author: admin
மும்பை: இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறும் தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அறிவித்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளும், மொத்தம் 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 சர்வதேச டி20 போட்டிகளில் மோத உள்ளன. சர்வதேச டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக இந்த தொடர் நடைபெறுகிறது. ஜனவரி 11-ம் தேதி இந்த போட்டி தொடர் தொடங்குகிறது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட் தொடரும் நடைபெறும். இந்நிலையில் இந்தியா – நியூஸிலாந்து மோதும் போட்டிகளுக்கான இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. அதன்படி பரோடா, ராஜ்கோட், இந்தூர் ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகளும், நாக்பூர், ராய்ப்பூர், குவாஹாட்டி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில்…
டெல் அவிவ்: இன்று (திங்கள்கிழமை) அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் குறித்த எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேலின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில் 67 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேலை கடுமையாக தாக்கி வருகிறது. இன்று (திங்கள்கிழமை) அதிகாலையும் ஈரான் பல ஏவுகணைகளை இஸ்ரேல் நகரங்கள் மீது வீசியது. ஈரானிய ஏவுகணைகளைத் தடுத்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்து வந்த சக்திவாய்ந்த வெடிப்பு சத்தங்கள், இன்று அதிகாலையில் டெல் அவிவை உலுக்கியது, இதனால் அந்த நகரத்தின் மீது கரும்புகை வானத்தில் எழுந்தன. டெல் அவிவ் அருகே உள்ள மத்திய இஸ்ரேலிய நகரமான பெட்டா டிக்வாவில் நகரை, ஈரானிய ஏவுகணைகள் தாக்கின. அங்குள்ள ஒரு குடியிருப்பு…
கே.பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடி கண்ணன், பிரியா ஆகியோருடன் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலை சேர்ந்தவர்கள் நடித்துள்ள படம், ‘ஆனந்த வாழ்க்கை’. இதை வேதாத்திரி மகரிஷியின் ஆசியோடு, எஸ்.கே.எம் மயிலானந்தம் வழிகாட்டுதலின்படி ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம் தயாரித்துள்ளது. சத்யா இசை அமைத்துள்ளார். ஆர்.சுப்ரமணிய பாரதி எழுதி இயக்கியுள்ள இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், எஸ்கேஎம் மயிலானந்தம், இயக்குநர்கள் எஸ்.பி முத்துராமன், கே பாக்யராஜ், சமுத்திரக்கனி, கதிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “சொர்க்கம், நரகம் இரண்டும் நம்மிடையே தான் இருக்கிறது. இரண்டுக்கும் வாசல் ஒன்றுதான். அது நம் வாய். அதிலிருந்து வரும் வார்த்தைகளைப் பொறுத்துதான் சொர்க்கம், நரகம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை பயிற்சி என்பது அடுத்தவர்களுக்கு,…
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது அதிகபட்சமாக அவலாஞ்சியில் 292 மில்லி மீட்டர் மழை பதிவானது. கனமழை காரணமாக மாவட்டத்தில் 4 தாலுகாவிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த, 14 மற்றும் 15-ம் தேதிகள், ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பால், குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்தந்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள், பேரிடர் பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், ‘ ரெட் அலர்ட் ‘ அறிவிப்பால் கடந்த இரண்டு நாட்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று முதல் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வெம்மை ஆடைகளை அணிந்து சுற்றுலாப் பயணியர் இயற்கை காட்சிகளை ரசித்தனர். கடும் குளிரால்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 16) பவுனுக்கு ரூ.120 என குறைந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,440-க்கு விற்பனை ஆகிறது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு பவுன் ரூ.74,560-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது உலக அளவில் பொருளாதார ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 16) கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,305-க்கும், பவுனுக்கு…
யாராவது ஆன்மீகத்தைக் குறிப்பிடும்போது, நினைவுக்கு வருவதற்கான முதல் படம் குங்குமப்பூ மூடிய நபர்கள், பின்னணியில் சடங்குகள், கற்களை குணப்படுத்தும் கற்கள், தியான போஸ்கள் மற்றும் விருப்பங்கள். ஆனால் ஆன்மீகம் என்னவென்றால், பொதுவான கருத்துக்கு மேலாக, ஒரு ஆழமான தனிப்பட்ட பயணம், இது ஒரு மனிதனின் வாழ்க்கையின் மிகப்பெரிய படிப்பினைகளை உணர உதவுகிறது. இது அவர்களின் உயர்ந்த சுயத்துடனும் அவர்களைச் சுற்றியுள்ள ஆற்றலுடனும் இணைக்க உதவுகிறது. நன்றியுணர்வைக் காட்டவும், ஊக்கமளிக்கவும், உள்நாட்டில் வளரவும், ம silence னத்திற்கு சங்கடமாக இருக்கவும், மேலும் பலவற்றைக் காட்டவும் இது மக்களைக் கற்பிக்கிறது. உண்மையான ஆன்மீகம் மக்களுக்கு கற்பிக்கும் 6 பாடங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.
அகமதாபாத்: குஜராத் விமான விபத்து காட்சியை செல்போனில் தற்செயலாக படம் பிடித்த சிறுவன் தீப்பிழம்பை பார்த்து அதிர்ச்சியடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் தாழ்வாக பறந்து விழுந்து தீப்பிழப்பு ஏற்பட்ட வீடியோ காட்சி உலகம் முழவதும் வைரலாக பரவியது. அந்த வீடியோவை செல்போனில் எடுத்தது அகமதாபாத் விமான நிலையம் அருகே வாடகை வீட்டில் குடியிருக்கும் 17 வயது சிறுவன் ஆர்யன். விமானம் அருகில் பறந்து செல்வதை தற்செயலாக படம் பிடித்துள்ளான். அது கீழே விழுந்து ராட்சத தீப்பிழப்பு வெளிப்பட்டதை பார்த்து அவன் அதிர்ச்சியடைந்தான். தான் செல்போனில் பதிவு செய்த வீடியோவை அவன் முதலில் தனது சகோதரியிடம் மிரட்சியுடன் காட்டியுள்ளான். அதன்பின்பே அந்த 24 நொடி வீடியோ காட்சி உலகம் முழுவதும் வைரலாக பரவத் தொடங்கியது. விமான விபத்தை முன்பே அறிந்து இந்த வீடியோ…
சிட்னி: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விடவும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளரான ஹேசில்வுட்டை கடுமையாக சாடியுள்ளார் அந்த அணியின் முன்னாள் வீரரான மிட்செல் ஜான்சன். அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹேசில்வுட் விளையாடி இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் ஏற்பட்ட காரணத்தால் 18-வது ஐபிஎல் சீசன் சில நாட்கள் இடைநிறுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பி இருந்தனர். போர் நிறுத்தம் ஏற்பட்ட உடன் ஐபிஎல் மீண்டும் தொடங்கியது. இதில் வெளிநாடுகளுக்கு சென்ற வீரர்கள் சிலர் மீண்டும் பங்கேற்று விளையாடினர். சிலர் பங்கேற்கவில்லை. ஹேசில்வுட், ஆர்சிபி அணிக்காக இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். இந்த ஐபிஎல் சீசனில் மொத்தம் 22 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். தென்…
கன்னட நடிகை ருக்மணி வசந்த், ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்ற படம் மூலம் கவனிக்கப்பட்டார். பின்னர் தமிழில் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்துவரும் இவர், இப்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். பிரம்மாண்ட ஆக்ஷன் படமான இதில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் உள்ளதாகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் ருக்மணி வசந்தை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ருக்மணி வசந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்கிறார்கள்.
