விஜய் டிவி மூலம் பிரபலமான பாலா நாயகனாக அறிமுகம் ஆகும் படத்துக்கு ‘காந்தி கண்ணாடி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப் போவது யாரு?, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதைத் தாண்டி இவருடைய உதவும் குணத்துக்கு இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அவ்வப்போது கஷ்டப்படுகிறவர்கள் வீட்டுக்கே சென்று உதவிகள் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது சினிமாவில் ஹீரோவாக பாலா அறிமுகம் ஆகிறார். பாலா நாயகனாக நடிக்கும் படத்தினை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரிக்கிறார். ‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘காந்தி கண்ணாடி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விவேக்- மெர்வின் இசையமைத்துள்ளனர்.…
Author: admin
சென்னை: தமிழகத்தில் அனைத்து வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. இதன்மூலம் 2.83 கோடி மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும், தற்போது உள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த அரசின் செய்திக் குறிப்பு: மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின் கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்லாண்டு மின் கட்டண உயர்வை அறிவித்து ஆண்டுதோறும் நுகர்வோர் விலைக்குறியீட்டு அடிப்படையில் மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தை மாற்றி அமைத்து ஆணை வெளியிடுகிறது. அதன்படி 2025-26 ஆண்டிற்கு ஜூலை 1-ம் தேதி…
வைட்டமின் சி ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும், இது குறைபாட்டைத் தடுக்க வழக்கமான நுகர்வு தேவைப்படுகிறது. புதிய உற்பத்திகள் மற்றும் பலப்படுத்தப்பட்ட உணவுகளை அணுகுவதால் வளர்ந்த நாடுகளில் ஒப்பீட்டளவில் அரிதானது என்றாலும், வைட்டமின் சி குறைபாடு பெரியவர்களைச் சுற்றி பாதிக்கிறது. மோசமான உணவு, குடிப்பழக்கம், அனோரெக்ஸியா, கடுமையான மன நோய், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் டயாலிசிஸுக்கு உட்பட்ட நபர்கள் உள்ளிட்ட சில குழுக்கள் அதிக ஆபத்தில் உள்ளன. கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி அவசியம், இது தோல், முடி, மூட்டுகள், எலும்புகள் மற்றும் இரத்த நாளங்களில் காணப்படும் புரதமாகும். கடுமையான குறைபாட்டின் அறிகுறிகள் உருவாக மாதங்கள் ஆகலாம் என்றாலும், விழிப்புடன் இருக்க நுட்பமான அறிகுறிகள் உள்ளன. வைட்டமின் உணவு ஆதாரங்கள் சிஹெல்த்லைன் படி, வைட்டமின் சி பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளல் ஆண்களுக்கு 90 மி.கி மற்றும் பெண்களுக்கு 75 மி.கி ஆகும், மேலும் புகைபிடிப்பவர்களுக்கு கூடுதலாக 35 மி.கி பரிந்துரைக்கப்படுகிறது. சில சிறந்த…
புதுடெல்லி: நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் பயணிகள் ரயில் சேவை அடிப்படை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்: ரயில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயணிகளின் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம் பயணிகள் ரயில் சேவைகளின் அடிப்படை கட்டணத்தை சீராய்வு செய்து திருத்தியுள்ளது. இது 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. கட்டண சீரமைப்பின் முக்கிய அம்சங்கள்: > புறநகர் ரயில் பயணக் கட்டணங்கள் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணத்தில் (புறநகர் மற்றும் புறநகர் அல்லாத வழித்தடங்களுக்கு) எந்த மாற்றமும் இல்லை. > சாதாரண ஏசி அல்லாத வகுப்புகளுக்கு (புறநகர் அல்லாத பிற ரயில்கள்): இரண்டாம் வகுப்பு – ஒரு கிலோமீட்டருக்கு அரை பைசா அதிகரிப்பு. (நிபந்தனைக்கு உட்பட்டது) 500 கி.மீ வரை கட்டண அதிகரிப்பு இல்லை. 501 முதல் 1500 கி.மீ தூரத்துக்கு ரூ.5 அதிகரிப்பு 1501…
மதுரை: “தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக விசிக வலிமை பெற்ற கட்சியாக வளர்ந்துள்ளது” என மதுரை மேலளவு நிகழ்வில் தொல்.திருமாவளவன் எம்.பி பேசினார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேரின் 28-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நினைவிடத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரச முத்துபாண்டியன் தலைமையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று பேசியது: “மேலூர் மண்ணிலிருந்து உருவான கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அமைப்பாய் திரள்வோம், அங்கீகாரம் பெறுவோம், அதிகாரம் வெல்வோம் என்ற கொள்கையுடன் 35 ஆண்டாக இயங்கி கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மோடு அரசியல் பயணத்தை தொடங்கியவர்கள் தற்போது காணாமல் போயுள்ளனர். இடது சாரிகளாக சிந்தனையுடையவர்கள் எல்லாம் தற்போது வலது சாரிகளாக மாறி…
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை ரசிகர்கள் ‘கேப்டன் கூல்’ என அன்போடு அழைப்பது வழக்கம். இந்நிலையில், அந்த புனைப்பெயருக்கு டிரேட்மார்க் கோரி அவர் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான வீரர்களில் ஒருவராக தோனி விளங்குகிறார். அண்மையில் ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், ‘கேப்டன் கூல்’ பெயருக்கு அவர் டிரேட்மார்க் கோரி விண்ணப்பித்துள்ளார். இது அவரது ஆளுமையுடன் தொடர்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5-ம் தேதி இந்த விண்ணப்பத்தை தோனி பதிவு செய்துள்ளார். அதை ஏற்றுக் கொண்டுள்ளதாக டிரேட்மார்க் பதிவேட்டுக்கான போர்ட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிவிப்பு ஜூன் 16-ம் தேதி வெளியான அதிகாரபூர்வ டிரேட்மார்க் இதழில் இடம்பெற்றுள்ளது. முதலில் தோனியின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பாக தோனியின் வழக்கறிஞர் தரப்பு தங்கள் வாதத்தை முன் வைத்துள்ளது. ‘கேப்டன் கூல்’ என…
வழக்கமான துன்பம் இல்லாமல், உடல் மெதுவாக எழுந்திருக்கும்போது என்ன நடக்கும் என்பது இங்கே.மூளைக்கு அதன் சொந்த உள் கடிகாரம் உள்ளது, இது சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படுகிறது. இது கணிக்கக்கூடிய தன்மையை வளர்க்கிறது. டாக்டர் ஹூபர்மேன் விளக்குகிறார், அதே நேரத்தில் எழுந்திருப்பது, சூரிய உதயத்தைச் சுற்றி, தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இந்த உள் கடிகாரத்தை மீட்டமைக்க வலுவான சமிக்ஞையை அனுப்ப முடியும்.இது அதிகாலை 5 மணிக்கு இருக்க வேண்டியதில்லை, ஆனால் அது சீராக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வார இறுதி நாட்களைத் தவிர்ப்பது மீண்டும் தாளத்தை குழப்பலாம்.முதல் நாளில், உடல் கஷ்டமாக உணர்கிறது. இரண்டாம் நாளில், சற்று சிறந்தது. மூன்றாம் நாளில், மூளை விழித்தெழுந்த அழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது, பெரும்பாலும் அலாரம் ஒலிப்பதற்கு முன்பே.
திருப்புவனம்: போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தது குறித்து மடப்புரத்தில் திருப்புவனம் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தினார். அவரிடம் பெண்கள் முறையிட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார். இதையடுத்து, அவரை போலீஸார் கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உடலை வாங்க மறுத்த அவர்களிடம் போலீஸார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார்…
வயதானது மனித உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கிறது, இதயம் உட்பட – ஆனால் வெளியிடப்பட்ட ஒரு அற்புதமான ஆய்வு இயற்கை பொருட்கள் இதயத்தின் வயதான செயல்முறை மீளக்கூடியதாக இருக்கலாம் என்று அறிவுறுத்துகிறது. இதய செல்களை நேரடியாக மாற்றுவதற்குப் பதிலாக, இந்த உயிரணுக்களைச் சுற்றியுள்ள சூழலை மாற்றுவது அவற்றின் வயதை எவ்வாறு கணிசமாக பாதிக்கும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு இருதய வயதானதைப் புரிந்துகொள்வதற்கும் புதுமையான சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும். உயிரணுக்களை விட இதயத்தின் செல்லுலார் சூழலில் கவனம் செலுத்துவதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் வயது தொடர்பான இதய வீழ்ச்சியைத் தடுப்பதற்கும், நாம் வயதாகும்போது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் புதிய சாத்தியங்களைத் திறக்கிறார்கள்; ஆயுட்காலம் மற்றும் உயிர்ச்சக்தி இரண்டையும் நீட்டிக்கக்கூடும்.உங்கள் உடலை பொருத்தமாக வைத்திருப்பது உங்கள் இதயத்தை இளமையாக வைத்திருக்க சிறந்த திட்டமாகும். புத்திசாலித்தனமான தினசரி முடிவுகள் மற்றும் அடிவானத்தில் அறிவியலுடன், வயதானது பலவீனமடைவதைக் குறிக்காது -குறைந்தபட்சம், உங்கள் இதயத்திற்கு அல்ல.எப்படி இதயம் புற…
மதுரை: திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது திடீரென என்ன பாசம் என்ற பாமக தலைவர் அன்புமணியின் கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவால் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை கட்சிகள் வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரும்பத் திரும்ப தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கருத்தைச் சொல்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எந்தக் கருத்தையும் சொல்லாமல் மவுனம் காக்கிறார் எனக் குறிப்பிட்டு இருந்தேன். தற்போது, அதற்கு விடை அளித்திருக்கிறார். அவர் சொல்லி இருக்கும் பதில் பாஜகவுக்குத்தான் என நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதிமுகவை எந்தக் கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தைச் சொல்லும் அவர், யார் கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றனர் என்பதை…
