சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.70,040-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,160 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,755-க்கும் பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.70,040-க்கும் விற்பனையானது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.76,400-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.108 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து, ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாகவும் இருந்தது.
Author: admin
புனித பசில் என்றும் அழைக்கப்படும் துளசி, உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கான ஒரு புனித தாவரமாகும், குறிப்பாக வைஷ்ணவ பிரிவு மக்கள். இது அதன் ஆன்மீக, மருத்துவ மற்றும் கலாச்சார மதிப்புக்காக மதிக்கப்படுகிறது, பிரார்த்தனை செய்யப்படுகிறது, வணங்கப்படுகிறது, மேலும் குணப்படுத்துதல், மருத்துவ பயன்பாடுகள் மற்றும் சில நிபந்தனைகளுக்கு சிகிச்சையளிக்கும்போது அதன் மந்திர பண்புகளுக்காக ‘மூலிகைகள் ராணி’ என்றும் அழைக்கப்படுகிறது. துளசி விவா நாளில், துளசி வடிவத்தில் மறுபிறவி எடுப்பவுடன், விஷ்ணுவின் பக்தர் மனைவி, விஷ்ணுவின் பக்தர் பிரிந்தாவின் ஒரு வடிவமாகவும் துளசி நம்பப்படுகிறார்.
(பிரதிநிதித்துவ படம்- அனி) இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் போலீசார் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும் ஒரு தூள் பொருள் மற்றும் அச்சுறுத்தும் செய்திகளைக் கொண்ட கடிதங்கள் வழங்கப்பட்டதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது, இதே போன்ற கடிதங்கள் நான்கு நீதிபதிகளால் பெறப்பட்டன லாகூர் எச்.சி. மற்றும் தலைமை நீதிபதி காசி ஃபேஸ் ஈசா உட்பட உச்சநீதிமன்றத்தில் ஐந்து.FIR இன் படி, கடிதங்களில் ஒரு குறிப்பிட்ட புகைப்படம் மற்றும் ஆங்கில வார்த்தையான “பேசிலஸ் ஆந்த்ராசிஸ்” ஆகியவை அடங்கும், இது நீதிபதிகளை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டது. பாக்கிஸ்தான் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நீதிபதிகள் காரணம் என்று கடிதங்கள் குற்றம் சாட்டின. பேசிலஸ் ஆந்த்ராசிஸ் என்பது ஆந்த்ராக்ஸை ஏற்படுத்தும் பாக்டீரியமாகும்.வெள்ளை உறைகளில் உள்ள கடிதங்கள் அனுப்புநர்களின் முழுமையற்ற முகவரிகளுடன் வழங்கப்பட்டன, ஃபிர் கூறினார். செவ்வாயன்று உறைகளைத் திறந்தவுடன், இருவரின் ஊழியர்கள் இஸ்லாமாபாத் எச்.சி. நீதிபதிகள் சந்தேகத்திற்கிடமான தூளைக் கண்டுபிடித்தனர். சில ஊடக அறிக்கைகள் பின்னர் அதிகாரிகள் தங்கள் கண்களில் தீவிர…
புதுடெல்லி: புதிய ஆராய்ச்சிகளில் நமது நாட்டு இளைஞர்கள் மைல்கற்களை எட்டி வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று இளைஞர் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக நமது நாட்டு இளைஞர்கள் தயாராக உள்ளனர். ஆராய்ச்சித்துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஆராய்ச்சிகளில் அவர் புதிய உயரத்தையும், மைல்கற்களையும் எட்டி வருகின்றனர். நாட்டின் இன்றைய இளைஞர்கள் திருப்புமுனை கண்டுபிடிப்புகளை முன்னெடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. உயர்கல்வி தரவரிசையில் இந்தியா சமீபத்தில் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வியில் இந்திய இளைஞர்களாலும் சாதிக்க முடியும் என்பதை நமது நாட்டு இளைஞர்கள் நிரூபித்துள்ளனர். நமது நாட்டைச் சேர்ந்த சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவை வெளிநாடுகளில் தங்களது கல்வி மையத்தை திறக்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் கல்வி பரிமாற்றம் மேம்படுத்தும். செயற்கை நுண்ணறிவுத்துறை (ஏஐ) வேகமாக…
புதுடெல்லி: பால்வீதியின் வட்டைச் சுற்றி நெருப்பு வாயுவின் திரை உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வெப்பத்தை உந்தி உமிழும் சூடான வாயுவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மர்மமான ஆதாரங்களை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். எனினும் இது குறித்து இதுவரை விளக்கப்படவில்லை. நமது விண்மீன் மண்டலத்தில் நட்சத்திரங்களை விட வாயுக்கள் அதிகம். தற்போதுள்ள, பெருமளவிலான வாயு இருப்பு நமது விண்மீன் மண்டலத்தில் நட்சத்திர உருவாக்கத்திற்கு முக்கிய ஆதாரமாகும். இத்தகைய அபரிமிதமான வாயு கிடைப்பது இந்த செயல்முறையை இன்றுவரை தக்கவைக்க உதவுகிறது. இருப்பினும், அதன் மெல்லிய தன்மை காரணமாக பார்க்க முடியாவிட்டாலும்கூட வானியலாளர்கள் இந்த வாயுப் பொருளின் கன அளவை கணக்கிட்டுள்ளனர். ஆனால் சில தசாப்தங்களுக்கு முன்பு, ஆய்வுகள் நமது விண்மீன் மண்டலமான பால்வீதியைச் சுற்றிலும் வாயுப் பொருள் இருப்பதை கண்டறிந்தன. இந்த விண்மீன் கூட்டம் சில…
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்ட சான்றிதழ்களை வழங்கினார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 45-வது பட்டமளிப்பு விழா இன்று (மார்ச் 25) நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மேடையில் 297 பேருக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் நேரடியாக 1536 பேர் பட்ட சான்றிதழ்களை பெற்றனர். தபால் வழியாக 2898 பேர் உட்பட மொத்தம் 4434 பேர் பட்ட சான்றிதழ்களை பெற்றனர். பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் ஆர்.செல்வம் பேசும்போது, “தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல புதிய கண்டுபிடிப்புகள், பயிர் வகைகலில் மரபணு மேம்பாட்டில் மையப்பகுதியாக விளங்குகிறது. புவிசார் கிராம வரைபடங்கள், டிஜிட்டல் பயிர் ஆய்வுகள் என வேளாண் துறை…
முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சண்டிகரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் நடப்பு சீசனில் 2-வது முறையாக மோதுகின்றன. அதிலும் ஒருநாள் இடைவெளியில் விளையாடுகின்றன. நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி – பஞ்சாப் அணிகள் மோதியிருந்தன. மழை காரணமாக 14 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணியை தனது அற்புதமான பந்து வீச்சால் 95 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது பஞ்சாப் அணி. டிம் டேவிட் 26 பந்துகளில், 50 ரன்கள் விளாசியதன் காரணமாகவே ஆர்சிபி அணியால் சற்று கவுரவமான ஸ்கோரை எடுக்க முடிந்திருந்தது. ஆடுகளத்துக்கு தகுந்தவாறு தகவமைத்துக் கொண்டு விளையாடாததால் ஆர்சிபி அணி…
பாங்காக்: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவுக்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) அமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இன்று நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணியளவில் பாங்காக் சென்றடைந்தார். தாய்லாந்து வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடைபெற்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சியை பிரதமர் கண்டுகளித்தார். 2 நாடுகளுக்கு பயணம்: தாய்லாந்துக்கு புறப்படும் முன்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “அடுத்த 3 நாட்களுக்கு தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன். பிம்ஸ்டெக் நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தாய்லாந்து சென்றடைந்த பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர்…
புதுச்சேரி: புதுச்சேரியில் மாசிமக தீர்த்தவாரியையொட்டி நூற்றுக்கணக்கான உற்சவ மூர்த்திகளை தரிசிக்க மக்கள் குவிந்தனர். மக்களுக்கு இடையூறின்றி நகராட்சி பேட்டரி காரில் வந்து பக்தர்களுடன் ஆளுநரும் சாமி தரிசனம் செய்தார். புதுவை வைத்திக்குப்பம், வீராம்பட்டினம் கடற்கரைகளில் ஆண்டுதோறும் மாசி மக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மக தீர்த்தவாரியையொட்டி புதுவையில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இன்று அறிவிக்கப்பட்டது. இன்று வைத்திக்குப்பம் கடற்கரையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், கவுசிக பாலசுப்பிரமணியர், காளத்தீஸ்வரர், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர் உட்பட பல்வேறு கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். ஒரே இடத்தில் அனைத்து கோயில்களின் சுவாமிகளையும் தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கடலுக்குள் இறங்குவதை தடுக்க கடற்கரையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. வைத்திக்குப்பம் கடற்கரையில் பந்தல், பக்தர்ளுக்காக குடிநீர், நடமாடும் கழிப்பறை உட்பட பல்வேறு வசதிகள் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரத்…
சென்னை: ‘ரெட்ரோ’ படத்தின் தொடக்கத்தில் வரும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி தியேட்டரில் ஸ்பெஷல் தருணமாக இருக்கும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் மே 1 திரைக்கு வருகிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய சூர்யா, “படத்தில் ஒரு 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி இருக்கிறது. அதில் நாங்கள் நடனம் ஆடுவோம், சண்டை போடுவோம், விவாதம் செய்வோம். படத்தின் ஒட்டுமொத்த நடிகர்களும் அதில் இருப்பார்கள். அது ஒரு எமோஷனலான காட்சி. அது…