Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“நீட் விவகாரத்தில் திமுக சரண்…” – மா.சுப்பிரமணியன் கருத்தை முன்வைத்த தமிழிசை
    மாநிலம்

    “நீட் விவகாரத்தில் திமுக சரண்…” – மா.சுப்பிரமணியன் கருத்தை முன்வைத்த தமிழிசை

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “நீட் விவகாரத்தில் திமுக சரண்…” – மா.சுப்பிரமணியன் கருத்தை முன்வைத்த தமிழிசை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு ஏற்படுத்த அதிமுக – பாஜக கூட்டணியால்தான் முடியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதை வரவேற்கிறேன். இதன்மூலம் திமுக சரணடைந்திருக்கிறது” என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

    தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வணிகர் மாநாடு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் எல்லாமே விளம்பரமாக இருந்து கொண்டிருக்கிறது.

    அனைத்து பல்கலைக்கழகங்களும் சேர்ந்து முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தியதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். ஆனால், பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பாராட்டு விழா நடத்துவதற்கு கட்டாயப்படுத்தப் பட்டிருக்கின்றன. எனில் பல்கலைக்கழகங்கள் தலைமை கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    நீட் தேர்வுக்காக நடத்தப்படும் சோதனைகள், தவறான நடவடிக்கையில் ஈடுபடுவோரால் நன்றாக படிக்கும் மாணவர்களின் வாய்ப்பு பறிபோய்விடக் கூடாது என்பதற்காக நடத்தப்படுகின்றன. ஆனால், மாணவர்கள் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. இதில் இங்கே உள்ள அதிகாரிகளும், அந்த தேர்வை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளும்தான் தவறு செய்கின்றனர். வேண்டுமென்றே ஓர் உயரிய தேர்வின் புனித தன்மையை கெடுப்பதற்காகவே இவ்வாறு செய்கின்றனர்.

    இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. நீட் தேர்வை தைரியமாக எதிர்கொண்ட மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள். தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியிருக்கின்றனர். இதுவே திமுகவின் தோல்வி தான்.

    திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு எதிராக முதல் கையெழுத்தை தாங்கள் தான் போடுவதாக தெரிவித்தனர். ஆனால், தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு ஏற்படுத்த அதிமுக – பாஜக கூட்டணியால் தான் முடியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதை வரவேற்கிறேன். இதன்மூலம் திமுக சரணடைந்திருக்கிறது.

    அதிமுக – பாஜக கட்சிகள் பலம் பொருந்திய கட்சிகளாக மாறிவருவதை அமைச்சர் மா.சுப்பிரமணியனே ஒப்புக்கொண்டு இருக்கிறார். அந்த வகையில் வருங்காலம் எங்கள் கையில்தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டனர். இது எங்களுக்கு கிடைத்த வெற்றி” என்று தமிழிசை கூறினார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன? – “நீட் விலக்கு பெறுவோம் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் விளக்கை பெறுவோம் என்கின்ற வகையிலான அறிவிப்பு இருக்கின்றது. நீட் விலக்கு பெற தமிழக முதல்வர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால், மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது.

    இதில் அக்கறை உள்ளவர்களாக இன்றைக்கு சொல்லிக்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நீட் விலக்கு பெறுவதற்கு இந்த அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “இயலாமையால் பொறாமை…” – செங்கோட்டையன், தினகரன் மீது ஆர்.பி.உதயகுமார் தாக்கு

    September 10, 2025
    மாநிலம்

    பொள்ளாச்சியில் விவசாய, தொழில் துறை அமைப்புகளுடன் இபிஎஸ் கலந்துரையாடல்

    September 10, 2025
    மாநிலம்

    ரேபரேலியில் பாஜகவினரால் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

    September 10, 2025
    மாநிலம்

    தேர்தல்வரை பசி, தூக்கம், ஓய்வின்றி உழைப்போம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தல்

    September 10, 2025
    மாநிலம்

    கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கு: திமுக பிரமுகரின் பேரனுக்கு ஐகோர்ட் ஜாமீன்

    September 10, 2025
    மாநிலம்

    சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “இயலாமையால் பொறாமை…” – செங்கோட்டையன், தினகரன் மீது ஆர்.பி.உதயகுமார் தாக்கு
    • புற்றுநோய்: இந்த பொதுவான சர்க்கரை புற்றுநோய்க்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை எவ்வாறு சூப்பரிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “ரொம்ப கஷ்டமா இருக்கு…” – அடுத்தடுத்த போட்டி ‘ஷெட்யூல்’ மீது ரஷீத் கான், அசலங்கா ஆதங்கம்
    • பொள்ளாச்சியில் விவசாய, தொழில் துறை அமைப்புகளுடன் இபிஎஸ் கலந்துரையாடல்
    • பெல்லா பிராய்ட் யார்? சிக்மண்ட் பிராய்டின் வழித்தோன்றல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.