Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘தேமுதிக கட்சிப் பதவியில் இருந்து என்னை விடுவிப்பீர்!’ – பிரேமலதாவுக்கு நல்லதம்பி கடிதம்
    மாநிலம்

    ‘தேமுதிக கட்சிப் பதவியில் இருந்து என்னை விடுவிப்பீர்!’ – பிரேமலதாவுக்கு நல்லதம்பி கடிதம்

    adminBy adminMay 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘தேமுதிக கட்சிப் பதவியில் இருந்து என்னை விடுவிப்பீர்!’ – பிரேமலதாவுக்கு நல்லதம்பி கடிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட புதிய பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்தக் கடிதத்தில், ‘நான் விஜயகாந்த்தால் உருவாக்கப்பட்டவன். அவரின் குடும்பத்துக்கும், கட்சிக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன். சமீபத்தில் நடந்த பொதுக் குழுவில் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக தேர்வானதற்கு எனது வாழ்த்துக்கள். அவரின் குரல் சட்டப்பேரவையில் விஜயகாந்த்தின் குரலாக ஒலிக்க வேண்டும். அதேநேரம், பொதுக்குழுவில் எனக்கு தரப்பட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படி விடுவிக்காதபட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    இந்த தகவல் வெளியாகி வைரல் ஆனதைத் தொடர்ந்து, நல்லதம்பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், “உயர்மட்டக் குழு பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு மட்டுமே கேட்டேன். விடுவிக்காத பட்சத்தில் நான் ஒதுங்கிக் கொள்வேன் என்றுதான் கூறினேன். என்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய விஜயகாந்த் கட்சியில் நான் தொடர்ந்து பயணிப்பேன். தொண்டனாக இருப்பேன்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

    பின்னணி என்ன? – தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக மீண்டும் தேர்வானார். அவைத் தலைவராக இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி செயலாளர் பதவி தரப்பட்டது.

    அந்தப் பொறுப்பில் இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு, உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் துணைச் செயலாளராக தாம் நியமிக்கப்படுவோம் என அவர் எதிர்பார்த்தாகவும், அந்தப் பொறுப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரம்: விஜய் மீதான வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்துக்கு மாற்றம்

    August 27, 2025
    மாநிலம்

    பண்டிகைக்காக 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையில் விநாயகர் சதுர்த்தி விற்பனை அமோகம்

    August 27, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு

    August 27, 2025
    மாநிலம்

    சென்னை: வாக்காளர் பட்டியல் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – அறிக்கை கோரி மனு

    August 27, 2025
    மாநிலம்

    கடலூர் ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்: ஐகோர்ட் உத்தரவு

    August 27, 2025
    மாநிலம்

    வங்கிக் கடன் மோசடி: ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 50,000 அபராதம்

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘ஏன் ஒரு வீட்டை சோதிக்கக்கூடாது…’: அதிகமான ஹோம் பியூயர்கள் தங்கள் கனவு வீட்டை வாங்குவதற்கு முன் ஸ்லீப் ஓவர்களைக் கோருகிறார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரம்: விஜய் மீதான வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்துக்கு மாற்றம்
    • உடற்பயிற்சி உதவிக்குறிப்புகள்: ஜிம்மில் மணிநேரம் செலவிடாமல் மெலிந்ததாக இருக்கும் 5 உடற்பயிற்சி ரகசியங்கள்
    • பண்டிகைக்காக 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையில் விநாயகர் சதுர்த்தி விற்பனை அமோகம்
    • உங்கள் பல் வலியைக் காட்டும் 5 அறிகுறிகள் அவசர பல் மருத்துவர் வருகை தேவை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.