Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது நடவடிக்கை: மதுரை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது நடவடிக்கை: மதுரை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது நடவடிக்கை: மதுரை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர் காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமலன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர் அறை எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    எனது வழக்கறிஞர் அறைக்கு சென்றபோது எனது பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அதை பிரித்து படித்தபோது, காவல்துறை கண்காணிப்பாளர் மீது நான் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்ததாகவும், அந்த புகாருக்கு நான் நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து சம்மன் வந்திருந்தது தெரியவந்தது.

    இதைப் பார்த்து எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் இதுபோன்று எந்தவித புகாரையும் கொடுக்கவில்லை. எனவே இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அப்போது தான் எனக்கு நடந்தது போல் பல வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்களின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திய பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு போலியான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடந்து வருவதும் தெரியவந்தது.

    இதுபோன்று பிற வழக்கறிஞர்கள் பெயர்களை பயன்படுத்தி புகார்கள் அனுப்புவதால், மூத்த வழக்கறிஞர்கள் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் தனிப்பட்ட பகைமை உண்டாகிறது. மேலும் உயர் அதிகாரிகளின் நேரமும் வீணடிக்கப்படுகிறது. எனவே பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “இந்த புகார் போல அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் அரசு வழக்கறிஞர்கள் பெயரை பயன்படுத்தியும் பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கும் இது போன்று புகார் சென்றுள்ளன. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதி, “பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது மதுரை மாநகர் காவல் ஆணையார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும.” என உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    எம்ஜிஆரின் தனி செயலர் மகாலிங்கம் மறைவு

    June 29, 2025
    மாநிலம்

    “ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? உதயசூரியன்!” – முதல்வர் ஸ்டாலின்

    June 29, 2025
    மாநிலம்

    ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ – ஜூலை 7 முதல் பழனிசாமி சுற்றுப்பயணம்

    June 29, 2025
    மாநிலம்

    வாக்குச்சாவடி நிலைய முகவராக மாவட்ட செயலாளர்கள் நியமனம்: திருமாவளவன் தகவல்

    June 29, 2025
    மாநிலம்

    பெண் ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கினார் ஆளுநர்

    June 29, 2025
    மாநிலம்

    4 ஆண்டுகளில் மட்டும் ஊரக வளர்ச்சி துறையில் ரூ.19,000 கோடி திட்டங்கள்: தமிழக அரசு பெருமிதம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உணவின் போது முதலில் காய்கறிகளை சாப்பிடுவது ஏன் முக்கியம்? ஒரு விஞ்ஞானி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டொனால்ட் டிரம்ப் Vs எலோன் மஸ்க் பகுதி 2: தொழில்நுட்ப கோடீஸ்வரர் வாதத்தை மறுதொடக்கம் செய்கிறார்; ‘பெரிய பில் அழகான’ முற்றிலும் பைத்தியம் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்
    • ஹேசில்வுட் அபார பந்துவீச்சு: பார்படோஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி
    • எம்ஜிஆரின் தனி செயலர் மகாலிங்கம் மறைவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.