Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»+2 படித்த மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய சான்றிதழ்கள் | புதியன விரும்பு 2.0 – 3
    கல்வி

    +2 படித்த மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய சான்றிதழ்கள் | புதியன விரும்பு 2.0 – 3

    adminBy adminApril 30, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    +2 படித்த மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய சான்றிதழ்கள் | புதியன விரும்பு 2.0 – 3
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழையும் மாற்றுச்சான்றிதழையும் (டி.சி.) பள்ளியி லிருந்து நேரடியாக வழங்கிவிடுவார்கள். இதுதவிர பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை ஆகியவை தேவைப் படும்.

    இருப்பிடச் சான்றிதழ் (நேட்டிவிட்டி சர்டிபிகேட்), முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுச் சான்றிதழ், விளையாட்டுச் சான்றிதழ்கள் போன்றவையும் மாணவர் களின் தேவையைப் பொறுத்துத் தேவைப் படலாம்.

    இந்தச் சான்றிதழ்களை மாணவர்கள் ஏற்கெனவே வைத்திருந்தால், அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பெறாத மாணவர்கள், இந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு தற்போதே விண்ணப்பிப்பது நல்லது. அதன் மூலம் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க முடியும்.

    ஆதார் அடையாள அட்டை: இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கும் ஆதார் அடையாள அட்டை, அனைவருக்கும் ஓர் இன்றியமையாத ஆவணமாக மாறியுள்ளது. அத்துடன், மாணவர்களுக்கும் இது தேவைப்படும் முக்கிய ஆவணமாக உள்ளது.

    ஆதார் அடையாள அட்டைப் பெறுவதற்கு ஏதாவது ஓர் அடையாளச் சான்றிதழும், பிறந்த தேதி சான்றிதழும், முகவரிச் சான்றிதழும் தேவைப்படும். ஆதார் மையத்துக்கு நேரில் சென்று ஆதார் கார்டு பெறுவதற்கான விண்ணப் பத்தைப் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பித்த 90 நாள்களுக்குள் விண்ணப்ப தாரரின் முகவரிக்கு ஆதார் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.

    சாதிச் சான்றிதழ்: சாதிச் சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அடையாள அட்டை, தாய் தந்தையரின் சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு ஒளிப்படம் ஆகியவற்றுடன் உரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அரசு வழங்கும் சாதிச் சான்றிதழை நிரந்தரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வருமானச் சான்றிதழ்: கல்வி உதவித் தொகை, கல்விக்கடன், அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு வருமானச் சான்றிதழ் தேவைப்படும். வருமானச் சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள், தங்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த ஆதாரங்களுடன் உரிய ஆவணங்களையும் இணைத்து (பாஸ்போர்ட் அளவு ஒளிப்படம், ரேஷன் கார்டு, ஆதார் அடையாள அட்டை போன்றவை) இ-சேவை மையங்களின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். வருமானச் சான்றிதழ் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், தேவைக்கேற்ப வருமானச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம்.

    இருப்பிடச் சான்றிதழ்: தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் சேர விரும்பும் மாண வர்கள் தமிழ்நாட்டை இருப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது விதி. தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையில் படித்த வராக இருந்தால், அந்த மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை.

    மற்ற மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் தேவை. பிற மாநிலங் களைச் சேர்ந்த மாண வர்கள் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்திருந்தால், அந்த மாணவர்கள் பொதுப்பிரிவின்கீழ் கல்லூரிகளில் சேர அனுமதிக்கப் படுவார்கள். பாஸ்போர்ட் அளவு ஒளிப்படம், முகவரி ஆதார் ஆவணம், பிறப்புச் சான்றிதழ், சுய உறுதிமொழி ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி இ-சேவை மையங்கள் மூலம் இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்.

    பிறப்புச் சான்றிதழ்: பள்ளியில் சேரும்போதே பெரும் பாலான மாணவர்கள் பிறப்புச் சான்றிதழ் பெற்றிருப்பார்கள். ஆனா லும், அந்தச் சான்றிதழ் இல்லாதவர்கள், தமிழக அரசின் இணைய தளம் மூலமாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பிறப்புச் சான்றிதழைப் பெறலாம்.

    ஏற்கெனவே பெற்ற பிறப்புச் சான்றிதழில் மாணவரின் பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றில் ஏதேனும் விவரங்கள் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், சரியான பிறந்த தேதிக்குரிய ஆதாரங்களுடன் அந்தந்தப் பகுதி முன்சீப் நீதிமன்றங்களை அணுகி பிறந்த தேதியில் மாற்றம் செய்ய ஆணை பெற வேண்டும். அதன் பிறகு, அந்தத் தீர்ப்பின் நகலை வைத்துக் கொண்டு, பள்ளிச் சான்றிதழ்களில் மாற்றம் செய்து கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    சான்றிதழில் பெயர் மாற்றம்: பள்ளிச் சான்றிதழ்களில் உள்ள பெயரில் திருத்தம் செய்ய வேண்டுமானாலும் சரி, இன்ஷியல் மாற்றம் செய்ய வேண்டுமானாலும் சரி, அது குறித்து முதலில் கெஜட்டில் வெளி யிடுவதற்கு எழுது பொருள் அச்சுத் துறை வழங்கும் விண்ணப்பத்தின்படி விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் பெயர் மாற்றத்துக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

    விண்ணப்பத்துடன், அதற்குரிய ஆவணங்களை கெஜடட் அதிகாரி கையொப் பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு அரசிதழில் (கெஜட்) வெளியிடப்படும். அதை வைத்துக்கொண்டு, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தை அணுகி சான்றிதழ்களில் பெயரையோ இன்ஷியலையோ அதிகாரப்பூர்வமாக மாற்றிக்கொள்ளலாம்.

    – கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    “முற்போக்கான விஷயங்களை கற்றுத் தரும் இடம்தான் பள்ளிக்கூடம்” – அமைச்சர் அன்பில் மகேஸ்

    June 29, 2025
    கல்வி

    அரசு கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் எவ்வித குறைபாடும் இல்லை: உயர்கல்வி துறை

    June 29, 2025
    கல்வி

    அரசு பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம்: தண்ணீர் குடிக்க தினமும் 3 இடைவேளை

    June 29, 2025
    கல்வி

    ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: நூலகர் பதவிக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு

    June 29, 2025
    கல்வி

    பொறியியல் டிப்ளமோ படிப்புகளுக்கான சிறப்பு துணை தேர்வுக்கு ஹால்டிக்கெட்

    June 29, 2025
    கல்வி

    தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு – மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘சூர்யா 46’ கதைக்களம் என்ன? – இயக்குநர் வெங்கி அட்லுரி வெளிப்படை
    • இலங்கை கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
    • 7 விளையாட்டு மாற்றும் ரகசியங்கள் செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்காக ஆழ் மனதை மாற்றியமைக்க
    • பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்
    • ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்துக்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன் – ஆமிர்கான்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.