Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»கும்பகோணத்தில் மாசிமக விழாவையொட்டி மகாமக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்
    ஆன்மீகம்

    கும்பகோணத்தில் மாசிமக விழாவையொட்டி மகாமக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கும்பகோணத்தில் மாசிமக விழாவையொட்டி மகாமக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கும்பகோணம்: மாசிமக விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர்.

    மாசிமக விழாவையொட்டி, கும்பகோணத்தில் உள்ள 6 சிவன் கோயில்கள், 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் 6 சிவன் கோயில்களின் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி, காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்த கலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோயில் சுவாமிகள், அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து வீதியுலாவாகப் புறப்பட்டு, மகாமக குளக்கரைக்கு வந்தடைந்தனர். குளத்தில் அஸ்திர தேவருக்கு 21 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது.

    அப்போது, ‘சிவாய நம, சிவாய நம’ என பக்தர்கள் முழக்கமிட்டபடி மகாமக குளத்தில் புனித நீராடினர். தொடர்ந்து, சுவாமிகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்கு திரும்பினர். இதேபோல, திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோயிலிலும் தீர்த்தவாரி நடைபெற்றது.

    விழாவில், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் உமா தேவி, உதவி ஆணையர்கள் ஹம்சன், கவிதா, சாந்தா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு துறையினர் ரப்பர் படகுகள் மூலம் மகாகமக குளத்தைச் சுற்றி வந்து, பக்தர்களை பாதுகாப்பாக புனித நீராட அறிவுறுத்தினர்.

    3 கோயில்களில் தேரோட்டம்: முன்னதாக, மாசிமக விழாவையொட்டி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயார்களுடன் சக்கரபாணி சுவாமி, பாமா, ருக்மணி உடனாய ராஜகோபால சுவாமி, அம்புஜவல்லி தாயார் உடனாய ஆதிவராகப் பெருமாள் ஆகிய பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையிலும் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தொடர்ந்து, சாரங்கபாணி சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயிலின் பின்புறம் உள்ள பொற்றாமரை குளத்தில் தெப்பத்தில் உபயநாச்சியாருடன் பெருமாள் எழுந்தருளி, பகலில் ஒரு சுற்றும், இரவில் மின்னொளி அலங்காரத்தில் 2 சுற்றும் வலம் வந்தார். இரவு 11 மணிக்கு உபய நாச்சியாருடன் பெருமாள் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளல் வைபவம் நடைபெற்றது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    தினமும் 100 கிலோ வண்ண மலர்களால் திருப்பதி ஏழுமலையானுக்கு அலங்காரம்

    September 9, 2025
    ஆன்மீகம்

    நடராஜருக்கு வைரம் பொருத்திய தங்க குஞ்சிதபாதம்: ரூ.10 லட்சம் மதிப்பில் பக்தர் வழங்கினார்

    September 9, 2025
    ஆன்மீகம்

    பெசன்ட்​ நகரில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்: அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி கோலாகலம்

    September 8, 2025
    ஆன்மீகம்

    சந்​திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது

    September 8, 2025
    ஆன்மீகம்

    ‘மரியே வாழ்க’, ‘ஆவே மரியா’ முழக்கத்துடன் வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர் பவனி கோலாகலம்

    September 8, 2025
    ஆன்மீகம்

    கால்நடைகளுக்கு அருள்பாலிக்கும் கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் | ஞாயிறு தரிசனம்

    September 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சூளைமேட்டில் மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள்: வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி
    • மணிநேரங்களுக்கு சப்பாதிகளை மென்மையாக வைத்திருப்பது எப்படி: ஒவ்வொரு முறையும் பஞ்சுபோன்ற ரோட்டிஸுக்கு எளிதான உதவிக்குறிப்புகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எச்சரிக்கை… இங்கு எச்சரிக்கை பலகை இல்லை! – பள்ளத்தால் செங்கை மக்கள் பீதி
    • டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகள்: முகங்களைப் படிப்பதில் எவ்வளவு சிரமம் அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறிக்கலாம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘நான் இனி என்னைப் போல உணரவில்லை’: இந்திய -நாகின் தம்பதியரின் குத்தப்பட்ட கதை, சுவிட்சர்லாந்து ஹோட்டலில் சீன மனிதனால் உதைக்கப்பட்டது வைரலாகி – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.