Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முன்னாள் படை வீரர்களுக்கான புற்றுநோய் நிவாரண நிதி ரூ.10 ஆயிரமாக உயர்வு: அமைச்சர் கயல்விழி அறிவிப்பு
    மாநிலம்

    முன்னாள் படை வீரர்களுக்கான புற்றுநோய் நிவாரண நிதி ரூ.10 ஆயிரமாக உயர்வு: அமைச்சர் கயல்விழி அறிவிப்பு

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முன்னாள் படை வீரர்களுக்கான புற்றுநோய் நிவாரண நிதி ரூ.10 ஆயிரமாக உயர்வு: அமைச்சர் கயல்விழி அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர புற்றுநோய் நிவாரண நிதி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்’’ என, சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.

    தமிழக சட்டப் பேரவையில், பொதுத் துறை மானியக் கோரிக்கையில் முன்னாள் படை வீரர் நலன் தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: தமிழகத்தில் 1.24 லட்சம் முன்னாள் படை வீரர்களும், 57,921கைம் பெண்களும் வசித்து வருகின்றனர். அவர்களுடைய மறுவாழ்வுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2024-25-ம் ஆண்டில் வீர தீர செயல்களில் பதக்கம் பெற்ற 25பேருக்கு ரூ.13.42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    போர் மற்றும் போர் ஒத்த நடவடிக்கைகளால் உயிரிழந்த, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட படை வீரர்களின் குடும்பத்துக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக, இவ்வாண்டு 482 பேருக்கு ரூ.1.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர நிதியுதவி, கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ நிதியுதவி ஆகியவற்றுக்கு 15,702 பேருக்கு ரூ.37.15 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமது ஒரே மகன் அல்லது ஒரே மகளை படைப் பணிக்கு அனுப்பிய பெற்றோரையும், ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை படைப் பணிக்கு அனுப்பிய பெற்றோரையும் கவுரவிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுவதுடன், வெள்ளிப் பதக்கமும் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 89 பேருக்கு ரூ.21.37 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    முன்னாள் படை வீரர்கள் ராணுவ பணியில் சேரும் போது முப்படையில் நிரந்தர படை துறை அலுவலர் பணிக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால படைத் துறை அலுவலர் பணிக்கு ரூ.50 ஆயிரமும், ராணுவத்தில் இளநிலை படை அலுவலர் மற்றும் இதர பணிக்கு ரூ.25 ஆயிரமும் தொகுப்பு மானியமாக வழங்கப்படுகிறது.

    முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், ரூ.7 கோடி மதிப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 205 முன்னாள் படை வீரர்களுக்கும், 2-ம் கட்டமாக 12 மாவட்டங்களில் 284 படை வீரர்களுக்கும் பல்வேறு விதமான திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வரப்படுகிறது.

    அறிவிப்புகள்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர புற்றுநோய் நிவாரண நிதி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். முன்னாள் படை வீரர்களின் கைம்பெண்கள் ஈமச்சடங்குக்காக வழங்கப்பட்டு வரும் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு கயல்விழி செல்வராஜ் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதுரை: பெண்ணின் இதயம் வரை குத்தியிருந்த ஊசியை பாதுகாப்பாக அகற்றிய மருத்துவர்கள்!

    August 25, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்றும் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

    August 25, 2025
    மாநிலம்

    அதிமுகவினர் தாக்குதல் எதிரொலி: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கேட்டு வழக்கு!

    August 25, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் உடல் உறுப்பு திருட்டை விசாரிக்க ஐஜி தலைமையில் சிறப்பு படை: ஐகோர்ட் உத்தரவு

    August 25, 2025
    மாநிலம்

    “எந்தக் கட்சியும் தனித்து போட்டியிட்டு முதல்வராக முடியாது” – ஜான் பாண்டியன்

    August 25, 2025
    மாநிலம்

    ‘விஜயகாந்த்’ பெயரில் அரசியல்… விஜய்க்கு எதிராக கொந்தளிக்கும் பிரேமலதா – ஒரு பார்வை

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஓப்பனராக 42 பந்துகளில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்: கேரளா கிரிக்கெட் லீக்!
    • ‘தண்டகாரண்யம்’ டீசர் எப்படி? – காடும் காடு சார்ந்த காதலும்!
    • மதுரை: பெண்ணின் இதயம் வரை குத்தியிருந்த ஊசியை பாதுகாப்பாக அகற்றிய மருத்துவர்கள்!
    • நீரிழிவு அறிகுறிகள்: நீரிழிவு நோயின் 10 அசாதாரண அறிகுறிகள் பொதுவாக நம் கால்களில் காணப்படுகின்றன
    • தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்றும் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.