Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»‘மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடி இனி இருக்காது’ – தமிழக அரசின் மசோதா மீது நம்பிக்கை 
    வணிகம்

    ‘மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடி இனி இருக்காது’ – தமிழக அரசின் மசோதா மீது நம்பிக்கை 

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடி இனி இருக்காது’ – தமிழக அரசின் மசோதா மீது நம்பிக்கை 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கடனை வசூலிக்க நெருக்கடி கொடுத்தால் தண்டனை வழங்கும் வகையில், தமிழக சட்டமன்றத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மசோதா ஒன்றை கடந்த 26ம் தேதி தாக்கல் செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச்சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ராஜபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்தத்தின்படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்துக்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறை தீர்ப்பாயர் நியமிக்கப்பட வேண்டும்.

    கடன் வழங்கிய நிறுவனம், கடன் பெற்றவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது என்றும், கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்காட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்கின்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது வரவேற்புக்குரியது.

    கிராமப்புறங்களில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், மகளிரை குறி வைத்து கடன் வழங்கிவிட்டு, அதனை வசூலிப்பதற்காக கடுமையான மிரட்டல் போக்கை கையாண்டு வருவதால் பெண்கள் பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதும், விரக்தி நிலைக்கு தள்ளப்படுவதும் அதிகரித்து வந்ததை சுட்டிக்காட்டி,

    தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச்சங்கம், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பல்வேறு வடிவ போராட்டங்களை செய்தும், அவ்வப்பொழுது கூட்டத்தின் மூலமான கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்தும் வந்த நிலையில், நடந்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில், இந்த சட்டத்திருத்த மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.

    இதற்காக தமிழக அரசுக்கு, தமிழக கிராமப்புற மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையானது தேவையற்ற கடன்களை தவிர்ப்பதற்கும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் அடாவடி போக்கை கட்டுப்படுத்தவும் வாய்ப்பாக அமையும்,” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    வரலாற்றில் முதன்முறை: தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி

    September 6, 2025
    வணிகம்

    அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்

    September 6, 2025
    வணிகம்

    ஒரேநாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.274 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

    September 6, 2025
    வணிகம்

    பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது

    September 6, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்!

    September 5, 2025
    வணிகம்

    GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீங்கள் ஒவ்வொரு நாளும் சீஸ் சாப்பிடும்போது என்ன நடக்கும்: நன்மைகள், அபாயங்கள் மற்றும் அறிவியல் என்ன சொல்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மும்பையில் 34 மனித வெடிகுண்டுகள் வெடிக்கும் என வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்த நபர் கைது
    • கொடைக்கானல் மன்னவனூர் ஆட்டுப் பண்ணை மூடல்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை
    • ஆந்திராவில் 6 மலை நிலையங்கள் தேவைப்படும் புத்துணர்ச்சியூட்டும் இடைவெளிக்கு
    • எலோன் மஸ்க்குக்கான டெஸ்லாவின் tr 1 டிரில்லியன் தொகுப்பு அவரை உலகின் முதல் டிரில்லியனர் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.