Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: விளையாட்டு வீரர்கள் கண்டனம்
    விளையாட்டு

    பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: விளையாட்டு வீரர்கள் கண்டனம்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: விளையாட்டு வீரர்கள் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்துக்கு நேற்று முன்தினம் வந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் கூறும்போது, “பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமைதியும், வலிமையும் கிடைக்க வேண்டும் என்றும் இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேதனையை அனுபவித்து வருகின்றனர். இந்த மாதிரியான நேரத்தில் நாம் அவர்களுடன் துணை நிற்க வேண்டும்” என்றார்.

    ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீரரும், பாஜக நிர்வாகியுமான விஜேந்தர் சிங் கூறும்போது, “தீவிரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு நமது துணிச்சலான வீரர்கள் வரும் காலங்களில் நிச்சயமாக தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் முன்னிலையில், ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைக்க விரும்புவோரின் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” என்றார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை வத்ஸ் கோஸ்வாமி, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஜஸ்பிரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், முகமது சிராஜ், இந்திய கிரிக்கெட் அணி தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பாட்மிண்டன் வீராங்கனைகள், சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, முன்னாள் துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்கள் அனில் கும்ப்ளே, பார்த்திவ் பட்டேல், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன், முன்னாள் ஹாக்கி வீரர் பி.ஆர்.ஜேஷ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரும் தீவிரவாதச் செயலுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அபாரம்: தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

    June 29, 2025
    விளையாட்டு

    வங்கதேச கேப்டன் ஷாண்டோ ராஜினாமா

    June 29, 2025
    விளையாட்டு

    ஹேசில்வுட் அபார பந்துவீச்சு: பார்படோஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

    June 29, 2025
    விளையாட்டு

    ஜூனியர் ரோல் பால் இந்திய அணி சாம்பியன்

    June 29, 2025
    விளையாட்டு

    அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடி அரைசதம்: தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் அசத்தல்!

    June 28, 2025
    விளையாட்டு

    டி20-யில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா: இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்!

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘பெரிய தவறு’: ‘பெரிய அழகான’ வரி மசோதாவை நிராகரித்ததற்காக டிரம்ப் செனட்டர் டில்லிஸைப் பின் தொடர்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அனல் அரசு மூலம் என் மகன் அறிமுகமாவது பாக்கியம்: விஜய் சேதுபதி மகிழ்ச்சி
    • தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்
    • ஸ்க்விட் கேம் சீசன் 3 முடிவடைந்ததால் நெட்ஃபிக்ஸ் அறைந்தது, கேட் பிளான்செட் டிடாக்ஜியை ஸ்க்விட் கேம் யுஎஸ்ஏ டீஸரில் விளையாடுகிறார்: ‘அமெரிக்காவில் கொரிய விளையாட்டு?’
    • 51-49 செனட் வாக்கு: ட்ரம்பின் ‘பெரிய அழகான’ மசோதாவுக்கு ‘இல்லை’ என்று கூறிய மூன்று குடியரசுக் கட்சியினர் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.