Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு 
    ஆன்மீகம்

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு 

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 4-ம் திருநாளான கடந்த 8-ம் தேதி இரவு 9 மணிக்கு குடவரை வாசல் தரிசனம் நடந்தது.

    விழாவில், கடந்த 10-ம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீநடராஜர் சிவப்பு சார்த்தியும், நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளை சார்த்தியும் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு சைவ வேளாளர்கள் சங்கத்தில் ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீநடராஜருக்கு பச்சை சார்த்தி சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பச்சை சார்த்திய சப்பரத்தில் எழுந்தருளி ஸ்ரீநடராஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தேரோட்டத்தை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, பெ.கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    விழாவின் 9-ம் நாளான இன்று (13-ம் தேதி) காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. 5.30 மணிக்கு விளா பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 7.45 மணிக்கு மேல் சுவாமி மற்றும் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினர். காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் தலைமை வகித்து வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, துரைவைகோ எம்.பி., அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இணை ஆணையர் ம.அன்புமணி, நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி, அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    முதலில் சுவாமி எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டது அதனை தொடர்ந்து அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இரண்டு தேர்களும் ரத வீதிகளை சுற்றி வந்து மதியம் சுமார் ஒரு மணி அளவில் நிலையை அடைந்தன. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் நாளை (14-ம் தேதி) தீர்த்தவாரியும், 15-ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

    June 30, 2025
    ஆன்மீகம்

    பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

    June 29, 2025
    ஆன்மீகம்

    அறியாமல் செய்த பாவம் நீக்கும் பாபநாசம் ராமலிங்க சுவாமி | ஞாயிறு தரிசனம்

    June 29, 2025
    ஆன்மீகம்

    ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்

    June 28, 2025
    ஆன்மீகம்

    அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா!

    June 27, 2025
    ஆன்மீகம்

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி தொடக்கம்

    June 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: ஆப்பிள் அல்லது மனிதர்கள்? நீங்கள் தர்க்கரீதியான அல்லது உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தால் முதலில் காண்பது முதலில் காட்டுகிறது – இந்தியாவின் நேரங்கள்
    • ’கண்ணப்பா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி: மோகன்பாபு உற்சாகம்
    • அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் – அதிர்ச்சி தகவல்களும், காவல் துறை அத்துமீறலும்!
    • முடிட் டானி யார், அவரது திருமணம் ஏன் செய்திகளில் அதிகம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.