இந்நிலையில் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், “இறக்குமதி பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதால், அமெரிக்கா பணக்கார மற்றும் உலகில் மிகவும் மதிக்கப்படும் நாடாக மாறும். வரி விதிப்பு பற்றி குறை கூறுபவர்கள் முட்டாள்கள். வரி வருவாயிலிருந்து பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு (பணக்காரர்கள் தவிர) தலா 2 ஆயிரம் டாலர் விரைவில் டிவிடெண்டாக வழங்கப்படும்’’ என பதிவிட்டுள்ளார்.
தனது வர்த்தக கொள்கைகளுக்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதற்காகவே, 2 ஆயிரம் டாலர் (ரூ.1.77 லட்சம்) வழங்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த தொகை எப்படி வழங்கப்படும் என்ற குழப்பம் நிலவி வந்தது.

