Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திரைப்படம், நாடகத்துறையில் புகழ்பெற்ற ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சாலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    மாநிலம்

    திரைப்படம், நாடகத்துறையில் புகழ்பெற்ற ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சாலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    adminBy adminSeptember 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திரைப்படம், நாடகத்துறையில் புகழ்பெற்ற ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சாலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கிண்டியில் ரூ.23.10 கோடியில் கட்டப்பட்ட புவியியல், சுரங்கத்துறை அலுவலகம் மற்றும் நடிகர் ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சென்னையில் சாலை, தெருக்களின் பெயர்ப் பலகைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில், கிண்டி தொழிற் பேட்டை வளாகத்தில் தரை மற்றும் 4 தளங்களுடன் 40,528 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் ரூ.23.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் தலைமை அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    இதுதவிர, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ‘மக்கள் கலைஞர்’ என்றும் ‘தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட்’ என்றும் அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் வசித்துவந்த நுங்கம்பாக்கம், கல்லூரி சாலைக்கு `ஜெய்சங்கர் சாலை’ என்றும், நாடக நடிகரும், தமிழகத்தின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவரும், நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தையுமான எஸ்.வி.வெங்கட்ராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவுக்கு `எஸ்.வி.வெங்கட்ராமன் தெரு’ என்றும், புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர்ப் பலகைகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பணி நியமன ஆணை: மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையில் 38 பேருக்கும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத் தின் சார்பில் 18 பேருக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கும் என மொத்தம் 62 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், சென்னை மேயர் ஆர்.பிரியா, இயற்கை வளங்கள் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன், மீன்வளம், பால்வளத் துறை செயலர் நா.சுப்பையன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமர குருபரன் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் த.மோகன், ஜெய்சங்கர் மற்றும் எஸ்.வி.சேகர் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வைக்கம் அறூகுட்டி சிறையில் ரூ.4 கோடியில் பெரியார் நினைவகம்: அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்

    September 27, 2025
    மாநிலம்

    புதிய வக்பு திருத்தச் சட்டத்தின் படி வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது: அமைச்சர் நாசர்

    September 27, 2025
    மாநிலம்

    “அண்ணா மீது இனி ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும்…” – சீமானுக்கு திமுக எச்சரிக்கை

    September 27, 2025
    மாநிலம்

    ‘திமுகவும், நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது’ – பாஜக

    September 27, 2025
    மாநிலம்

    கடந்த நான்கரை ஆண்டுகளில் உயரிய ஊக்கத்தொகையாக 4,510 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.150 கோடி: உதயநிதி தகவல்

    September 27, 2025
    மாநிலம்

    3-ம் கட்ட பிரச்சாரம்: திருச்சியிலிருந்து நாமக்கல் புறப்பட்டார் விஜய்; தொண்டர்கள் உற்சாகம்

    September 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வைக்கம் அறூகுட்டி சிறையில் ரூ.4 கோடியில் பெரியார் நினைவகம்: அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்
    • சிறுநீரக புற்றுநோய் வழக்குகள் 2050 க்குள் இரட்டிப்பாகும்: 5 எச்சரிக்கை அறிகுறிகள் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அதிபர் புதினை பிரதமர் மோடி வற்புறுத்தியதாக நேட்டோ தலைவர் கூறுவது தவறு: மத்திய அரசு விளக்கம்
    • புதிய வக்பு திருத்தச் சட்டத்தின் படி வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது: அமைச்சர் நாசர்
    • தூக்கமின்மை முதல் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி வரை: கார்டிசோல் எதிர்ப்பின் 8 கவனிக்கப்படாத அறிகுறிகள் – இந்தியாவின் டைம்ஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.