Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. விசாரணை ஆணையம் திட்டவட்டம்
    உலகம்

    காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. விசாரணை ஆணையம் திட்டவட்டம்

    adminBy adminSeptember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. விசாரணை ஆணையம் திட்டவட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை என்றும், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்றும் ஐ.நா. விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

    கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாக்குதல் தொடங்கிய கடந்த 22 மாதத்தில் பாலஸ்தீனர்கள் குறைந்தது 64,905 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு 10,000 பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காசாவில் உணவு பஞ்சம் நிலவுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் சுதந்திரமான மனித உரிமை ஆணையக் குழு அமைக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் தலைவராக முன்னாள் மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை நியமிக்கப்பட்டார். இக்குழு தனது விசாரணையை முடித்து 72 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

    அந்த அறிக்கையில், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என வரையறுக்கப்பட்ட 5 செயல்களில் 4 காசாவில் நடந்துள்ளது. அதாவது, ஒரு குழுவின் (ஹமாஸ்) உறுப்பினர்களைக் கொல்வது, உடல் மற்றும் மன ரீதியில் கடுமையான தீங்கை விளைவிப்பது, குழுவை அழிக்கும் நோக்கில் நிபந்தனைகளை ஏற்படுத்துவது, பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை நிகழ்த்தப்பட்டுள்ளன.

    இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள், ராணுவத்தின் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், மருத்துவர்கள் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள், போர் தொடங்கியதில் இருந்து தொகுக்கப்பட்ட செயற்கைக்கோள் பட பகுப்பாய்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.நா மனித உரிமை ஆணைய விசாரணைக் குழுவின் இந்த அறிக்கையை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஜெனிவானில் உள்ள இஸ்ரேல் தூதர் கூறுகையில், “ஐ.நா. மனித உரிமை ஆணையம் இஸ்ரேலுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது. இந்த ஆணையத்துக்கு இஸ்ரேல் ஒத்துழைக்காது” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்தியன் அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்டது: காங்கிரஸ்காரர் ரோ கன்னா கூறுகையில், தாக்குதல் நடத்தியவர் தெருக்களில் ‘சுதந்திரமாக இருக்கக்கூடாது’ என்று கூறுகிறார்; அவரது குற்றவியல் கடந்த காலத்தை மேற்கோள் காட்டுகிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    உலகம்

    ‘நீங்கள் சட்டவிரோதமாக வந்தால் …’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிதர் தலை துண்டிக்கப்பட்ட பிறகு அமெரிக்க டி.எச்.எஸ். பிடன் நிர்வாகி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    உலகம்

    சார்லி கிர்க் ஷூட்டிங்: கரேன் அட்டியா யார்? சார்லி கிர்க்கின் படுகொலை குறித்த கருத்துகளுக்குப் பிறகு வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் நீக்கப்பட்டார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    உலகம்

    நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!

    September 15, 2025
    உலகம்

    வத்திக்கான் சிட்டி திகைப்புகள்: எலோன் மஸ்கின் சகோதரர் கிம்பலின் 3,000 ட்ரோன்கள் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா மீது தலைசிறந்த சின்னங்களுடன் வானத்தை ஒளிரச் செய்கின்றன | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 15, 2025
    உலகம்

    பாப் வைலான் யார்? பிரிட்டிஷ் பங்க்-ராப் இரட்டையர் கேலிக்கூத்துகள் சார்லி கிர்க்கின் படுகொலை, அவரை ஒரு துண்டு *** | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
    • அதிசயம் இல்லை, வெறும் முறைகள்: உலகின் மிகச்சிறந்த 103 ஆண்டுகள் பழமையான புற்றுநோயை எளிய தினசரி பழக்கவழக்கங்களுடன் எவ்வாறு குணப்படுத்தியது
    • “அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தாக காட்டப்பட்ட கடிதமே மோசடி” – ஜி.கே.மணி
    • உயர் இரத்த அழுத்தம்: அமெரிக்காவில் கிட்டத்தட்ட பாதி பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறுகிறது: இயற்கையாகவே அதை எவ்வாறு குறைப்பது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.