Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பெட்ரோல் டேங்க்கை அகற்றாமல் சாலை அமைத்ததால் சர்ச்சை – இது நாகர்கோவில் ‘சம்பவம்’
    மாநிலம்

    பெட்ரோல் டேங்க்கை அகற்றாமல் சாலை அமைத்ததால் சர்ச்சை – இது நாகர்கோவில் ‘சம்பவம்’

    adminBy adminSeptember 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பெட்ரோல் டேங்க்கை அகற்றாமல் சாலை அமைத்ததால் சர்ச்சை – இது நாகர்கோவில் ‘சம்பவம்’
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாகர்கோவில் மாநகரின் போக்குவரத்து மிக்க பகுதியான வேப்பமூடு சந்திப்பில் வாகன நெருக்கடி மிக்க சாலையின் கீழ் பகுதியில் இருந்த பெட்ரோல் டேங்க்கை முழுமையாக நிரப்பாமல் சாலை அமைக்கப்பட்டதால் ஆபத்து நிகழுமோ என்ற அச்சம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் எழுந்த இந்த சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குமரி மாவட்டத்தில் அதிக போக்குவரத்து மிக்க நாகர்கோவில் மாநகரில் முக்கிய பகுதியாக வேப்பமூடு சந்திப்பு உள்ளது. வேப்பமூடு சந்திப்பில் சர்.சி.வி.ராமசாமி பூங்கா அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வந்தது. நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 2017-ம் ஆண்டு அப்போதைய நகராட்சி ஆணையர் சரவணகுமார் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.

    தொடர்ந்து அதே ஆண்டு ஜூலை மாதம் வேப்பமூடு சந்திப்பில் சாலையை விரிவாக்கம் செய்யும் வகையில் அங்கிருந்த பெட்ரோல் பங்க் அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குரத்து நெரிசல் குறைந்துள்ளது.

    மூடப்படாத பெட்ரோல் டேங்க்: 8 ஆண்டுகள் கடந்த பின்னர் தற்போது அந்த பகுதியில் பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்ற சர்ச்சை வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதாவது, தினமும் ஆயிரக்கணக்கான கார், பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் இவ்வழியாக சென்று வரும் நிலையில், 2017-ம் ஆண்டு அவசர கதியில் சாலையின் கீழ் பகுதியில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் டேங்க்கை முறையாக அகற்றாமல் மூடி தார் போட்டு சமப்படுத்தி விட்டதாக வாகன ஓட்டிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

    அவ்வாறு டேங்க் சரிவர மூடப்படாமல் இருந்தால் வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பகுதியான அங்கு இடிபாடு ஏற்பட்டு பெரும் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது. எனவே. இதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தி, அச்சத்தை நிவர்த்தி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நாகர்கோவிலை சேரந்த சமூக ஆர்லர் ஜேயின் ஷாஜி என்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில், ‘வேப்பமூடு சந்திப்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்து பெட்ரோல், டீசல் டேங்க்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார்.

    மாநகராட்சி கடிதம்: இதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா குமரி மாவட்ட புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இயங்கி வந்த பெட்ரோல் பங்க் மாநகராட்சி நிர்வாகத்தால் 2017-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது அங்கு எரிபொருள் சேமித்து வைக்கும் தொட்டி அகற்றப்படாமல் அதன்மீது நெடுஞ்சாலைத் துறையால் சாலை அமைக்கப்பட்டு 7 ஆண்டுகளாகி விட்டதாகவும், இச்சாலையில் பேருந்துகளும், கனரக வாகனங்களும் அதிகம் சென்று வருவதால் பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும், எனவே டேங்க்கை அகற்றிடுமாறும் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது.

    அதேநேரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு 7 ஆண்டுகளான பின்னரும் இதுவரை வாகன போக்குவரத்து பாதிப்பின்றி நடந்து வருகிறது. எனவே, வேப்பமூடு சந்திப்பில் பெட்ரோல் பங்க் இருந்த இடத்தில் பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா? என ஆய்வு செய்து விவரம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான ஆய்வறிக்கை வரவில்லை. எனவே மக்களுக்கு ஆபத்து உள்ளதா? என ஆய்வு செய்து தாமதமின்றி அறிக்கை வழங்கிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

    ஆனால் இதன் பின்னரும் வரை வேப்பமூடு சந்திப்பில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வெளிப்படை தன்மையும் அறிக்கை சமர்ப்பிக்கவில்ல. எனவே பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் வேப்பமூடு சந்திப்பு சாலையின் கீழ் பகுதியில் பெட்ரோல் சேமிக்கும் தொட்டி உள்ளதா ? என்பதை உறுதிப்படுத்தி, வாகன ஓட்டிகளின் சந்தேகத்தை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுகதான் ஐசியூ-வில் உள்ளது: உதயநிதிக்கு பழனிசாமி பதிலடி

    September 12, 2025
    மாநிலம்

    ஆசிரியர் ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

    September 12, 2025
    மாநிலம்

    ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள்

    September 12, 2025
    மாநிலம்

    16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தவறியதால் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

    September 12, 2025
    மாநிலம்

    மதுரை மேயர் இந்திராணியை ஓரங்கட்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

    September 12, 2025
    மாநிலம்

    இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுகதான் ஐசியூ-வில் உள்ளது: உதயநிதிக்கு பழனிசாமி பதிலடி
    • ஆசிரியர் ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
    • ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள்
    • மாரடைப்பு ஆபத்து: ஜிம்மைத் தொடங்கவா? இளைஞர்களிடையே மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க இருதயநோய் நிபுணர் ஐந்து சோதனைகளை பரிந்துரைக்கிறார்
    • 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தவறியதால் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.