Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»இந்திய அரசின் உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்
    வணிகம்

    இந்திய அரசின் உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்

    adminBy adminSeptember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய அரசின் உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொழும்பு: இலங்கையில் உள்ள பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை இந்திய அரசு உதவியுடன் மேம்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம், இலங்கையின் பிற பகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாக உள்ளது. இந்தியாவுக்கு மிக அருகில், ராமேசுவரம் மற்றும் வேதாரண்யத்திலிருந்து 40 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ளது.

    இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது விடுதலைப் புலிகளின் கப்பல் படையை வீழ்த்துவதற்காக, அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் பருத்தித்துறை துறைமுகம் சேதமடைந்தது . 1995-ல் விடுதலைப் புலிகளிடம் இருந்து இந்த துறைமுகம் இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.

    2004 சுனாமியின்போதும் இந்த துறைமுகம் கடும் சேதமடைந்தது. 7 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த துறைமுகத்தில் 300 படகுகள் வரையிலும் நிறுத்த முடியும், மேலும், மீன் பதனிடும் அறை, மீன் விற்பனை நிலையம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன.

    இலங்கையின் வட மாகாணப் பகுதியில் கடல் அட்டை பண்ணை வளர்ப்பில் கவனம் செலுத்தி வரும் சீன அரசு, இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள இந்த துறைமுகத்தை மேம்படுத்த தீவிரம் காட்டியது. ஆனால், இலங்கை அமைச்சரவை பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இந்திய அரசுக்கே ஒப்புதல் அளித்தது.

    இந்நிலையில், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் மேம்பாட்டு திட்டத்துக்காக, இந்தியாவின் மீன்பிடித் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மீன் வளத்துக்கான மத்திய கடலோரப் பொறியியல் நிறுவனத்தினர் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.

    இந்தக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற, பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் மேம்பாட்டு பணிகளுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய துணைத் தூதர் சாய் முரளியும் இதில் பங்கேற்றார்.

    கலந்துரையாடலின் ஆரம்பத்தில் இந்திய தூதுக் குழுவினரை வரவேற்ற ஆளுநர் வேதநாயகன், இந்திய அரசின் உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்த திட்டப் பணிகளுக்கு வட மாகாணத்தின் ஒத்துழைப்பு முழுமையாக வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு

    September 11, 2025
    வணிகம்

    உலக செல்வந்தர் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்!

    September 11, 2025
    வணிகம்

    இந்திய நிறுவனங்களை வரவேற்கிறோம்: இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷூ பெய்ஹோங் பேச்சு

    September 10, 2025
    வணிகம்

    உலக நாடுகள் இடையே நியாயமான, வெளிப்படையான வர்த்தகம் தேவை: அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    September 10, 2025
    வணிகம்

    தங்கம் விலை ரூ.81,000-ஐ தாண்டி புதிய உச்சம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 உயர்வு!

    September 9, 2025
    வணிகம்

    பரஸ்பர வரியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தால் வசூலிக்கப்பட்ட வரியை திருப்பித் தருவோம்: அமெரிக்க நிதியமைச்சர் தகவல்

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் – காசி கட்டணமில்லா ஆன்மிக பயணம்
    • காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு
    • குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்கிறார்
    • நேபாளத்தில் வன்முறை ஓயாததால் பதற்றம் நீடிப்பு: அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்
    • குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே புற்றுநோய் அறிகுறிகளில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.