Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது மத்திய அரசின் நிலைப்பாடு: விசா விவகாரத்தில் அன்புமணி சாடல்
    மாநிலம்

    இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது மத்திய அரசின் நிலைப்பாடு: விசா விவகாரத்தில் அன்புமணி சாடல்

    adminBy adminSeptember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது மத்திய அரசின் நிலைப்பாடு: விசா விவகாரத்தில் அன்புமணி சாடல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாக்களை மறுக்கக் கூடாது என்றும், குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், “இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முட்டுக்கட்டை போடும் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, ஈழத் தமிழர் நலன்களுக்கு எதிரானது ஆகும்” என்றும் அவர் சாடியுள்ளார்.

    இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் போர் முடிந்த பிறகும் கூட 2015ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வரை இந்தியாவுக்கு வந்த இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும் கூட, அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முட்டுக்கட்டை போடும் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஈழத் தமிழர் நலன்களுக்கு எதிரானது ஆகும்.

    இலங்கையில் போர் தொடங்கிய பிறகு 1983-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திர்கு பிறகு இந்தியாவுக்கு வந்த இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கூடாது என்று 1986-ஆம் ஆண்டு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியதாகவும், அது இப்போதும் தொடர்வதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நீண்ட கால விசாக்கள் எனப்படுபவை ஓராண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படும். அவற்றை புதுப்பித்துக் கொள்ள முடியும். நீண்ட கால விசாவைப் பயன்படுத்தி இந்தியாவில் ஒருவர் 11 ஆண்டுகள் தொடர்ந்து தங்கியிருந்தால், அதைக் காட்டி அவர்கள் இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற முடியும். ஆனால், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நீண்ட கால விசாக்கள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

    நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2025-ஆம் ஆண்டின் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின்படி கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியுறவுத் துறை பிறப்பித்த அறிவிக்கையின்படி, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த சிறுபான்மை சமூகங்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் ; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் உள்ள பிற நாட்டவர்களுக்கு நீண்டகால விசாவும், அதன்பின் குடியுரிமையும் வழங்கப்படும் எனும் நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த சலுகையை மறுப்பது நியாயமல்ல.

    தமிழ்கத்துக்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவர்கள் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கண்ணியமாக வாழ வகை செய்யப்பட வேண்டும். அதற்கு வசதியாக இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு முதல் கட்டமாக நீண்டகால விசாவும், பின்னர் குடியுரிமையும் வழங்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அன்புமணி கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

    September 10, 2025
    மாநிலம்

    புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு – தவெக தலைவர் விஜய் கண்டனம்!

    September 10, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை மூடி, மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் – அன்புமணி

    September 9, 2025
    மாநிலம்

    காவலர் நாள் சிறப்பு நிகழ்ச்சி – சென்னையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் ரத்த தானம்

    September 9, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் குரு பூஜைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கும், முன்வைக்கப்பட்ட வாதங்களும்!

    September 9, 2025
    மாநிலம்

    திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியில் இருந்து நீக்கி திமுக நடவடிக்கை!

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்
    • கருவுறுதல் மற்றும் ஆரோக்கியமான கருத்தாக்கத்திற்கு ஆண்களின் ஊட்டச்சத்து ஏன் முக்கியமானது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “கோழைத்தனமான தாக்குதல்” – இஸ்ரேலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
    • புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு – தவெக தலைவர் விஜய் கண்டனம்!
    • இன்றைய குழந்தைகள் 100 க்கு வாழ எதிர்பார்க்கப்படுவார்களா: ஆச்சரியமான உண்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.