Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி 18% ஆக உயர்வு: தொழில் துறையினர் அதிருப்தி
    வணிகம்

    ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி 18% ஆக உயர்வு: தொழில் துறையினர் அதிருப்தி

    adminBy adminSeptember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி 18% ஆக உயர்வு: தொழில் துறையினர் அதிருப்தி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: ‘ஜாப் ஒர்க்’ பிரிவில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12-லிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள தொழில்துறையினர், 5 சதவீதமாக குறைக்கவும் அதற்கு செலுத்தும் வரியை திரும்ப பெற்றுக்கொள்ளும் சலுகை (இன்புட் டேக்ஸ் கிரெடிட்) வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை, திருப்பூர் மாவட்ட குறுந் தொழில்முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறும்போது, “ஜாப் ஒர்க் பிரிவில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12-லிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது தொழில் முனைவோருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். 5 சதவீதமாக வரியை குறைக்க வேண்டும்.

    இதை தவிர்த்து மற்ற வரி சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கது” என்றார். தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கத்தின் (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேல் கூறும்போது, “குறுந்தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ‘ஜாப் ஒர்க்’ பிரிவிற்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என கேட்டு வந்த நிலையில், 18 சதவீதமாக உயர்த்தியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரிச்சலுகையை திரும்ப பெற முடியும் என்றாலும் கூட குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய பொருட்களுக்கு நிதியை பெற 90 நாட்கள் வரை ஆகிறது.

    எனவே, அக்காலகட்டத்தில் நடப்பு மூலதனம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு வரியை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சருக்கு மனு அனுப்ப முடிவு செய்துள்ளோம்” என்றார். கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் கூறும்போது, “ஜாப் ஒர்க் பிரிவிற்கு 18 சதவீதமாக உயர்த்தப்பட்ட வரியை 5 சதவீதமாக குறைத்தால், வரியை திரும்ப பெறும் சலுகை பெற முடியாது என கூறப்படுகிறது.

    நடப்பு மூலதனம் பாதிக்காமல் இருக்க 5 சதவீமாக வரியை குறைப்பதுடன் ‘இன்புட் டேக்ஸ் கிரெடிட்’ எடுத்துக் கொள்ளும் சலுகையை மத்திய அரசு வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்றார்.

    இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகு நாதன் கூறும்போது, “வரி சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரில் ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. குறுந் தொழில்முனைவோருக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும். எனவே, இப்பிரிவினருக்கு வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும்” என்றார்.

    ‘சிஐஏ’ தொழில் அமைப்பின் தலைவர் தேவகுமார் நாகராஜன் கூறும்போது, “ஜாப் ஒர்க் பிரிவு நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளதால் நடப்பு மூலதனம் பாதிக்கப்படும். பணி வாய்ப்புகள் இழக்கும் நிலை ஏற்படும். பெரிய நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு ‘ஜாப் ஒர்க்’ மாற்றும் அபாயம் உள்ளது. எனவே, வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். எம்எஸ்எம்இ நிறுவனங்களை பாதுக்கவும், தொழில் வளர்ச்சிக்கு உதவவும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    அமெரிக்க வரி விதிப்பு தாக்கம்: ராணிப்பேட்டையில் காலணி உற்பத்தி பாதிப்பு!

    September 6, 2025
    வணிகம்

    வரலாற்றில் முதன்முறை: தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி

    September 6, 2025
    வணிகம்

    அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்

    September 6, 2025
    வணிகம்

    ஒரேநாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.274 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

    September 6, 2025
    வணிகம்

    பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது

    September 6, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்!

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு திட்டங்கள்: இபிஎஸ் பேச்சு
    • செப்டம்பர் 7 அன்று இரத்த மூன்: இது அமெரிக்காவில் தெரியுமா? நேரங்கள், இருப்பிடங்கள் மற்றும் பிற விவரங்களை சரிபார்க்கவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கால்நடை ஆய்வாளர் பதவிக்கு பட்டப்படிப்பு அவசியம்: புதிய கல்வித் தகுதி நிர்ணயம்
    • தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் 90 ஆயிரம் பேருக்கு போக்சோ குறித்து பயிற்சி: அன்பில் மகேஸ்
    • பிஹாரில் குற்றமும், ஊழலும் அதிகரிப்பு: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது தேஜஸ்வி சாடல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.