Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!
    வணிகம்

    GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!

    adminBy adminSeptember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜிஐஎஸ் எனப்படும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம் சொத்து மதிப்பீட்டுக்கு மிகவும் உதவியாக உள்ளதாக நில மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒரு குறிப்பிட்ட சொத்தின் சந்தை மதிப்பை மதிப்பிட்டு, அதன் மதிப்பு குறித்த துல்லியமான அறிக்கையை வழங்கும் தொழில்முறை நிபுணர்கள் மதிப்பீட்டாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் தனிநபர்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்காக சொத்து மதிப்பு, காப்பீடு, வரிவிதிப்பு, விற்பனை, அடமானக் கடன்கள் போன்ற பல்வேறு சேவைகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு, புவியியல் தகவல் முறைமை (Geographic Information System – GIS) என்ற தொழில்நுட்பம் உறுதுணையாக உள்ளதாக மதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து, பாலாஜி அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குநர் எல்.பாலாஜி கூறுகையில், நிலம் மற்றும் கட்டிட மதிப்பீட்டாளர்களுக்கு ஜிஐஎஸ் தொழில்நுட்பம் பெரிதும் உதவிகரமாக உள்ளது. இதன் மூலம், இடம் சார்ந்த தரவுகளின் அடிப்படையில், புவியியல் வடிவங்களை புரிந்துகொள்ள பகுப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும் தரவுகளை வரைபடங்கள், 3டி காட்சிப்படுத்துதல்கள் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி காட்டுகிறது. இத்தொழில்நுட்பம் மூலம் எடுக்கப் படும் புகைப்படங்களில், வேளாண்மை நிலம், அரசு அலுவலகக் கட்டிடங்கள், வணிகக் கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனி வண்ணங்கள் கொடுத்து பிரித்து காட்டுகிறது.

    பாலாஜி

    சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு உறுதுணையாக உள்ளது. வெள்ள பாதிப்புகள் மற்றும் பிற பேரிடர்களை மதிப்பிடுவதற்கு உதவுகிறது. நகரங்களின் நிலப் பயன்பாடு, உள்கட்டமைப்பு போன்றவற்றை நிர்வகிக்க முடியும். நில உரிமை, மதிப்பு, மேலாண்மை மற்றும் பயன்பாடு உள்ளிட்ட நிலத் தகவல் மற்றும் நிலப் பதிவுகளின் அனைத்து அம்சங்களையும் நிர்வகிக்க இத்தொழில் நுட்பம் உதவுகிறது.

    விரிவான நில நிர்வாக அமைப்பில் உள்ள அனைத்து நிலத் தகவல்களுடனும், அரசாங்கங்கள் நிலத் தகவல் மேலாண்மை, சொத்து மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு பொதுமக்களுடனான தொடர்பு ஆகியவற்றை இதன்மூலம் மேம்படுத்த முடியும், என அவர் தெரிவித்தார்.

    விஜயகுமார்

    இந்திய மதிப்பீட்டாளர்கள் கழக மதுரை கிளை தலைவர் விஜயகுமார் கூறுகையில், புவியியல் தரவை உருவாக்க, பகுப்பாய்வு செய்ய, நிர்வகிக்க இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது. இது பொதுவாக செயற்கைக் கோள்கள், வான்வழி படங்கள், தரை ஆய்வுகள் போன்ற பல்வேறு மூலங்களில் இருந்து தரவுகளை சேகரித்து, அவற்றை ஒரே தரவுத்தளத்தில் ஒருங்கிணைக்கிறது.

    பின்னர் இதனை பகுப்பாய்வு செய்து, வரைபடங்கள், விளக்கப் படங்கள், பிற காட்சிப் படுத்துதல்களை உருவாக்கலாம். இதன் மூலம் நகர்ப்புற திட்டமிடல், இயற்கை வள மேலாண்மை, அவசரகால பதில் மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முடிவெடுக்கும் செயல் முறைகளைத் தெரிவிக்கப் பயன்படும், எனக் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்!

    September 5, 2025
    வணிகம்

    இந்திய ஜவுளித் துறை இனி..? – ஜிஎஸ்டி 2.0 தாக்கம் பகிரும் திருப்பூர் தொழில் துறையினர்

    September 5, 2025
    வணிகம்

    மீன் உணவு பொருட்கள், உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும்: மீனவ தொழிலாளர் சங்கம் கோரிக்கை

    September 5, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

    September 5, 2025
    வணிகம்

    தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.560 அதிகரிப்பு!

    September 5, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி 5%, 0 ஆக குறையும் பொருட்கள்; 40% ஆக உயரும் பொருட்கள் – ஒரு பட்டியல்

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாள்: சிறப்பு வீடியோவை பகிர்ந்த ‘ஜனநாயகன்’ படக்குழு
    • பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்த செங்கோட்டையன் – அதிமுக ‘நிலவரம்’ மீதான தலைவர்கள் பார்வை என்ன?
    • செங்கோட்டையன் குறித்த பேச்சை தவிர்த்த பழனிசாமி: கம்பம் பிரச்சாரத்தில் நடந்தது என்ன?
    • ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு
    • ‘தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு நான்…’ – ஆக்ஸ்போர்டில் முதல்வர் ஸ்டாலின் உரை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.