Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»மீன் உணவு பொருட்கள், உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும்: மீனவ தொழிலாளர் சங்கம் கோரிக்கை
    வணிகம்

    மீன் உணவு பொருட்கள், உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும்: மீனவ தொழிலாளர் சங்கம் கோரிக்கை

    adminBy adminSeptember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மீன் உணவு பொருட்கள், உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும்: மீனவ தொழிலாளர் சங்கம் கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம்: அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பை ஈடுகட்டுவதற்கு மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும், என மீனவத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) கோரிக்கை விடுத்துள்ளது.

    நாட்டின் உணவு உற்பத்தி, அன்னிய செலாவணி ஈட்டுதல், கிராமப்புற வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு எனப் பல துறைகளில் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரம்பரிய வாழ்வாதாரமாகத் தொடங்கிய இத்தொழில் இன்று வணிகரீதியாகவும் தேசிய பொருளாதாரத்தில் அத்தியாவசியமாகவும் திகழ்கிறது.

    அதேசமயம், மீன்பிடி துறை அதிகப்படியான மீன்பிடித்தல், சட்டவிரோத மற்றும் அழிவுக்குரிய தொழில்நுட்பங்கள், கடல் வாழ்விட அழிவு, சுற்றுச்சூழல் பாதிப்புகள், அரசு மானியக் குறைப்புகள் இவற்றால் மீன்வளம் குறைந்து, மீனவர்கள் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

    இந்நிலையில், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்படும். குறிப்பாக அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.24 ஆயிரம் கோடி கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழகத்திலிருந்து அந்நாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வரிவிதிப்பினால் இந்திய கடல் உணவுப் பொருட்களின் விலை அமெரிக்க சந்தையில் கூடுவதால் அமெரிக்காவில் இந்திய இறால் வாங்கும் வியாபாரிகள் அனைவரும் ஆர்டர்களை ரத்து செய்கின்றனர்.

    இது குறித்து மீனவத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) மாநிலச் செயலாளர் சி.ஆர். செந்தில்வேல் நமது செய்தியாளரிடம் கூறியதாவது, “மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மீனவர் அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் .

    பதப்படுத்தப்பட்ட மீன் உணவு மற்றும் மீன்பிடி உபகரணங்கள், மீன் வளர்ப்பு சாதனங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்து 5 சதவீத வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வந்து சிறிய ஆறுதலாக இருந்தாலும், தற்போது அமெரிக்காவில் இந்திய மீன் உணவுப் பொருட்கள் மீது 50 சதவீத வரிவிதிப்பு செய்ததில் மீன் உணவு ஏற்றுமதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    சர்வதேச சந்தையில் ஏற்படும் போட்டி, பல்வேறு நாடுகளின் சுங்கம் மற்றும் வரிவிதிப்பு முறை, போக்குவரத்து செலவின உயர்வு போன்ற காரணங்களால் மீன் உணவு ஏற்றுமதி சரிவை சந்தித்து உள்ளது, தற்போதைய சூழலில் மீன் உணவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கி மீன் உணவு ஏற்றுமதியை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது. மேற்கண்ட பாதிப்புகள் அனைத்தும் இறுதியில் சாமானிய மீனவன் தலையில் கட்டப்படுகிறது.

    இந்த சூழ்நிலையை போக்க உள்நாட்டு மீன் உணவு பொருட்கள் நுகர்வை அதிகப்படுத்த வேண்டும். எனவே மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி, நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும்” இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்!

    September 5, 2025
    வணிகம்

    GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!

    September 5, 2025
    வணிகம்

    இந்திய ஜவுளித் துறை இனி..? – ஜிஎஸ்டி 2.0 தாக்கம் பகிரும் திருப்பூர் தொழில் துறையினர்

    September 5, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

    September 5, 2025
    வணிகம்

    தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.560 அதிகரிப்பு!

    September 5, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி 5%, 0 ஆக குறையும் பொருட்கள்; 40% ஆக உயரும் பொருட்கள் – ஒரு பட்டியல்

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு நான்…’ – ஆக்ஸ்போர்டில் முதல்வர் ஸ்டாலின் உரை
    • பட்டியலின பணியாளரை திமுகவினர் காலில் விழச் செய்வதுதான் சமூக நீதியா? – தலைவர்கள் கண்டனம்
    • “கச்சத்தீவை திரும்ப பெறுவது சரிவராது!” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து
    • ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்!
    • முன்னாள் பெண் அமைச்சரை தொந்தரவு செய்தோர் மீது நடவடிக்கை: புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.