Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் நாகை இறால் விவசாயிகள் அச்சம்!
    வணிகம்

    அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் நாகை இறால் விவசாயிகள் அச்சம்!

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் நாகை இறால் விவசாயிகள் அச்சம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாகப்பட்டினம்: அமெரிக்காவில் இந்திய பொருட்களை இறக்குமதி செய்ய 50 சதவீதம் வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 500 டன் இறால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால், இறால் விவசாயிகள் தங்கள் தொழில் பெருமளவில் பாதிப்பை சந்திக்கக் கூடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

    நாட்டின் பெரும் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தொழில்களில் கடல் உணவுப் பொருட்கள் பிரதான இடத்தை பெற்றுள்ளன. அவற்றில் இறால்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கடலில் இருந்து பிடிக்கப்படும் இறால்கள் மற்றும் வளர்ப்பு இறால்கள் தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.

    தமிழகத்தில் இறால் உற்பத்தியில் நாகை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் இறால்களில் 60 சதவீதம் நாகை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இறால் விவசாயத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளே ஈடுபடுகின்றனர் என்பது தனி சிறப்பு.

    மின் கட்டண உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வு, ஏற்றுமதியாளர்களால் ஏற்படுத்தப்படும் விலை வீழ்ச்சி என பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள இறால் விவசாயிகளுக்கு, இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பை அமல் செய்துள்ளது தற்போது பேரிடியாய் அமைந்திருக்கிறது.

    அமெரிக்காவில் ஆக.27-ம் தேதி அதிகாலை முதல் 50 சதவீத வரி என்பது அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 500 டன் இறாலை அமெரிக்காவில் உள்ள இறக்குமதியாளர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இது இறால் விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனிமேல் இறாலுக்கு உரிய விலை கிடைக்குமா என்ற கவலையும் இறால் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

    பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் இறால்களுக்கு உள்நாட்டு சந்தை இல்லை. 95 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மட்டுமே செய்யப் படுகிறது. தற்போது அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்றுமதியாளர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் கிடைக்கும் விலைக்கு கூடுதல் லாபம் வைத்து விற்பனையில் ஈடுபடுவார்கள். 50 சதவீத வரி விதிப்பை இறால் விவசாயிகள் தலையில் கட்டிவிடுவார்கள்.

    அதனால், அவர்கள் கேட்கும் விலைக்கு இறாலை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் இந்த சீசனில் இறால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால், பெரும்பான்மையான இறால் விவசாயிகள் இத்தொழிலை விட்டே வெளியேறக்கூடிய அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆடைகள் விலை குறையும்: ஜிஎஸ்டி 2.0-க்கு ஜவுளி துறையினர் வரவேற்பு

    September 4, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி மாற்றம்: தொழில் துறையினருக்கு அமைச்சர் பியூஷ் முன்வைத்த இரு கோரிக்கைகள்

    September 4, 2025
    வணிகம்

    உணவு டெலிவரி பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்திய சொமேட்டோ

    September 4, 2025
    வணிகம்

    சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை

    September 4, 2025
    வணிகம்

    8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்திய மத்திய அரசுக்கு நன்றி: ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

    September 4, 2025
    வணிகம்

    மூன்று ஆண்டுகளில் பெண் முதலீட்டாளர்கள் 50% உயர்வு

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உண்மையான வெள்ளி நகைகளை அடையாளம் காணவும், போலி ஆகியவற்றைத் தவிர்க்கவும் 5 வழிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீங்கள் மரணத்திற்கு அருகில் இருக்கும்போது உங்கள் உணர்வுக்கு என்ன நடக்கும்: அறிவியல் விளக்கப்பட்டது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள லண்டன் பயணத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன விரிவாக்கம் குறித்து ஆலோசனை
    • உங்கள் பல் துலக்குதல், துண்டு, ஒப்பனை கடற்பாசி மற்றும் பிற தனிப்பட்ட பராமரிப்பு அத்தியாவசியங்களை எத்தனை முறை மாற்ற வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.